December 30, 2012
December 27, 2012
அடுப்பு எங்களுக்கு ..அல்வா உங்களுக்கா ?
பங்கு வேண்டும் வெறிபிடித்து
கோரிக்கை கேட்ப்போம் - அங்கே
வெடித்து எதினும் நடந்து விட்டால்
வேடிக்கை பார்ப்போம்
மின்சாரம் இல்லாமல் வேதனையாய்
உள்ளது - எந்த
சோதனைகளையும் தாங்கதான்
தமிழகம் உள்ளதே
அழிவை கூட தாங்கி கொள்ளும்
எங்களினம் - வெறும்
கழிவை கூட ஏற்றுகொள்ளா
சுயநலம்
தமிழினமே ,
உணவின்றி குன்ற குன்ற
உயிர் வாழ வழியில்லை
உணர்வின்றி போனால்
உயிர் வாழ்ந்தும் பயனில்லை
மயிருக்கும் மரியாதை
உடம்போடு இருந்தால்தான்
மனிதனுக்கு மரியாதை
உணர்வோடு வாழ்ந்தால்தான்
அடுப்பு சட்டி எங்கள் மீது
அல்வா மட்டும் அடுத்தவனுக்கா ?
பாடு படும் எங்கள் தியாகம்
பங்கு மட்டும் கெடுதவனுக்கா ?
ஒத்த இந்தியனாக நாம்
வாழவேண்டும் - ஆனால்
மத்த இந்தியனுக்காக நாங்கள்
ஏன் சாகவேண்டும் ????
திராவிட மாயை
திராவிடன் என்ற
சாயம் பூசி _ எங்கள்
தமிழெனும் முகத்தை
இழந்தோம்
திராவிட தெலுங்கனை
கண்டதுண்டா _ நான்
திராவிடன் என்றவன்
சொன்னதுண்டா ?
கேரளவன் சொன்னதை
கேட்டதுண்டா _ கன்னடன்
சொன்னதை கண்டதுண்டா ?
எங்களை மட்டும்
திராவிட மாயையில்
மயக்கிய உங்களுக்கு
மதியும் உண்டா ???
திராவிடம் எனும் மாலையை
கழுத்தில் கொண்டு
பலியாடாய் கிடக்குது தமிழினம்
திராவிடம் சொல்லிக்கொண்டு
திரியும் மூடர்களை
நம்பிக்கொண்டு கிடப்பது அறிவீனம் ......
நம்மினத்தை எவனும் மதிக்கவில்லை
அது ஏன் உங்களுக்கு புரியவில்லை ?
சுற்றும் எவனும் மதிக்கவில்லை - சில
சுயனலவாதிகளுக்கு ஏன் புரியவில்லை ?
திராவிடம் ,
சிலர் ஓட்டுக்கு உதவும்
தமிழ்நாட்டுக்கு உதவாது
திராவிட கூச்சல் என்று மடியும்
தமிழின உணர்வு என்று விடியும் ?
நீ வாழ்வின் பொருளுரை
குண்டாக இருந்தேன்
உணக்காக இளைத்தேன்
மண்டாக இருந்தேன்
உணக்காக படித்தேன்
செண்டான உந்தன்
உயிர் கொள்ள துடித்தேன்
வண்டாக அலைந்து
வழியின்றி களைத்தேன்
கல்லாக இருந்தேன்
கால் பட்டு மலர்ந்தேன்
வில்லாக இருந்தேன்
விழி கண்டு உடைந்தேன்
மொழியின்றி இருந்தேன் -உன்னால்
கவி கோடி படைத்தேன்
எதற்காக பிறந்தேன்- என
நானும் அழுதேன் -
உனை கண்ட பிறகு
மரணத்தை வெறுத்தேன்
புயல் பட்ட படகாய்
பொருளின்றி அலைந்தேன்
நீ வந்த பின்தான்
பொருளோடு வாழ்ந்தேன்
சோம்பலின் பிடியால் உழைப்பை
தேடாமல் இருந்தேன்
உனக்காக வேண்டி
ஓடாக உழைத்தேன்
தனியான எனக்கு
உலகத்தில் யாருமில்லை - நீ
துணையாக பின்பு
உலகமே தேவையில்லை
தாயாக தயவாக
துணையாக வந்தாய்
நோய் தீர்க்கும் மறந்தாக
அணையாக வந்தாய்
பாறையை சிலையாக்கினாய்
பாலையை விளையக்கினாய்
வாழ்கையில் முடமாய் இருந்தேன்
வந்து நீ வளமாகினாய்
உதிர்ந்த தரைதொட்ட எனை
உயிர் கொடுத்து தலை சூடினாய்
வறண்ட என் வாழ்வை செழிக்க
நதியாக தினம் ஓடினாய்
அத்தனையும் தந்தாய் எனக்கு
அணியே நன்றி உனக்கு ..
நான் நானாக
நீ தாயாக ....
ஒருவனின் கவிதை அல்ல
ஆன்மிகம் தேட வேண்டாம்
அண்ணதானம் போட வேண்டாம்
மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த
மகேஸ்வரனே உங்களை வணங்குவார் ..
இருப்பதை வைத்து
சிறப்பாய் வாழ்வோம்
குடிப்பதை வைத்து
என்ன வளர்ச்சி ?
வேரிலே விசமென்றால்
ஏது மலர்ச்சி ?
ஊற்றில் விடத்தை கலந்து
ஊருக்கு அனுப்பி என்ன பயன் ?
நாற்றை எல்லாம் கருக விட்டு
வேலியை கட்டி என்ன பயன் ?
மனமும் உடலும் கெடுத்தபின்
மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ?
குளத்தில் நீரை கெடுத்து விட்டு
குடத்தை வாங்கி என்ன பயன் ?
சமுதாயமே சீரழிந்த பின்
சாலையும் ஆலையும் எதற்கு ?
தமிழகத்தில் எல்லா சாலைகளும்
சுடுகாடு நோக்கி போகிறது .
உடலும் மனமும் போதையிலே
நாடே வீணாய் ஆகிறது
மாநிலம் ,
வசதியாக இல்லையெனும்
பரவாயில்லை -தமிழினம்
நிம்மதியாக வாழ
வழி காட்டுங்கள் ..
ஒருவனின் கவிதை அல்ல
ஒரு இனத்தின் அழுகை
December 15, 2012
என் கடைசி கடிதம்
வானம் காய்ந்தது
வாழ்க்கை ஓய்ந்தது
மானம் காக்கும் துணி கூட
உழைத்து தேய்ந்தது
கல்லணை கட்டியது முதல்
கஞ்சிக்கு பஞ்சமில்லை...
கர்நாடகாவை பிரித்தது முதல்
அழுதது கொஞ்சமில்லை...
மழைநீரும் தூறவில்லை
மனரணமோ ஆறவில்லை
மின்சாரத்தோட ஓசை இல்லை
மீண்டும் பிறக்க ஆசையில்லை
சீக்கிரமே சாக வேண்டும்...
அதற்குள் சென்னை சென்று
பார்க்க வேண்டும் ..
அங்கே ,
கார் தயாரிக்க கரண்ட் இருக்கு -எங்க
கஞ்சிக்கு வழியில்லை
பீர் தயாரிக்க கரண்ட் இருக்கு
நெஞ்சி பொறுக்க வில்லை
ஹுன்டாயும் போர்டும்
உலகெல்லாம் ஏற்றுமதி...
உண்ண அரிசி பருப்பெல்லாம்
உள்ளுரில் இறக்குமதி
அமெரிக்காவுக்கு உழைக்க
ஐ டி வளர்த்தாலும்,
அடுத்த வேலை உணவுக்கு
சாப்ட்வேரையா சாப்பிடுவீர் ?
அங்கே ,
PUB'm Club'm கரன்டுல
ஜொலிக்குது - எங்க
பம்பும் செட்டும் வறண்டு
வறண்டு .. வலிக்குது :(
எத்தொழில் செய்தினும்
காசு வரும் - ஆனால்
இத்தொழிலில் மட்டும்தானே
உணவு வரும் ?
தலைநகர் வளர்வதில்
தவறொன்ன்னும் இல்லை - ஆனால்
தலைமட்டும் வளர்வது
வளர்ச்சி இல்லை
உழைத்து களைத்து
விளைத்தவன் விவசாயி - அதை
அடித்து பிடித்து
வாங்கியவன் வியாபாரி
தண்ணீர் , மின்சாரம் ,
தரகர், நஷ்டம் ,என்னென்று நான் சொல்ல
வாழ தெரியாமல் சாகவில்லை
வாழ முடியாமல் போகிறேன்
சச்சின் சதத்தையும்
ஷாருக்கான் படத்தையும்
கொண்டாடும் நீங்கள் - நாட்டு
உணவுக்கு உழைத்து
உணவே கிடைக்காமல்
உயிர் விடும் நாங்கள்
ஊருக்கே உழைத்தோம்
ஒரு வாய்க்கு போராட்டம்
வசதி வாய்ப்பு கூடவில்லை
நிம்மதியாக கூட வாழவில்லை
கடைசி ஆசை ..
இறைவா... ..
புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இழிவான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...
- இப்படிக்கு
உங்கள் தமிழன் , உழவன் ..
- வை .நடராஜன்
December 14, 2012
அன்பான தமிழர்களே
காவிரி தீர்க்க முடியாத
பிரச்சனை அல்ல
தீர்க்க கூடாத பிரச்சனை
பிரச்சனை தீர்ந்து விட்டால்
நீங்கள் விவசாயம் பண்ணலாம் - ஆனால்
நாங்கள் அரசியல்
பண்ண முடியாது ..
நீங்கள் வாட வேண்டும்
நாங்கள் வாழ வேண்டும் - ஆனால்
மறக்காமல் எங்களுக்கு
மின்சாரம் வேண்டும்
தண்ணீர் தரமாட்டோம்
அது எங்கள் மாநில சொத்து
மின்சாரம் தாருங்கள்
அது நம் நாட்டு சொத்து .
எங்கள் அணையில் இருப்பது
வெறும் தண்ணீர் அல்ல
உங்கள் பாவம் - பரவாயில்லை
ஆடு வெட்டுபவனும்
அரசியல் பண்ணுபவனும்
பாவம் புண்ணியம் பார்த்தால்
வாழ இயலாது
இன்னும் ஆயிரம் ஆண்டானாலும்
எங்களை வீழ்த்த முடியாது ..
எங்கள் மாநிலத்தில் கன்னடர்கள்
மட்டும் வாழ்கிறார்கள் - ஆனால்
உங்கள் மாநிலத்தில் ....
தலித் , வன்னியர்
பிராமணர் , தேவர்
அ தி மு க , தி மு க
ஆளும் கட்சி ,எதிர் கட்சி
இஸ்லாம் ,ஹிந்து
எல்லோரும் இருகிறீர்கள் - ஆனால்
ஒன்றுப்பட்ட தமிழர்களை தவிர .
நீங்கள் சேர போவதில்லை
நாங்கள் மாற போவதில்லை
மின்சாரத்தை நிறுத்தி விடாதிர் - ஏனின்
நாம் இந்தியார்கள் மறந்து விடாதீர்
நாங்கள் கன்னடர்கள்
திராவிடர்கள் என கேள்விப்பட்டோம்
நீங்கள் தமிழர்கள்
திராவிடர்கள் என ஏமாற்றபட்டீர்
நாங்கள் கன்னடர்களாக வாழ்கிறோம்
நீங்கள் தமிழர்களாக வாழுங்கள்
- கன்னட அரசியல் அன்பர்கள் ####
மரணம்
வெளியே நடக்கும் மரண செய்தி
செவிகள் வரைக்கும் ஒலிக்கும்
வேண்டியவரின் மரணம் மட்டும்
இதயம் சென்று வலிக்கும்.
அடித்து துடித்து அழுபவர்களுக்கு
ஆயுள் வரை தண்டனை - அங்கே
அடக்கமாகி போனவர்களுக்கு
ஆயுள் தண்டனையில் விடுதலை .
கர்வம் காமம் கோபம்
எல்லாம் திமிறி கொண்டு திரியும்
கடைசி மூச்சை இழந்த பிணத்தை
கண்டால் உண்மை புரியும் .
பூக்காத மொட்டின் மேல்
புயல் அடித்தது - தாயை
பார்க்காத பிஞ்சிகளும்
புதைகின்றது .
சேர்க்காத பாவங்களை
செய்த ஜென்மங்களும்
தள்ளாத வயது வரை
திரிகின்றது .
வாழ்க்கை தரிசாய் போனவர்களுக்கு
மரணம் பரிசாய் தெரியும்
வாழ்க்கையை வாழாமல் போனால்
அது வலியாய் உறையும் .
காமம் இல்லையெனில்
காதலில் சுவையில்லை
மரணம் இல்லையெனில்
வாழ்க்கையில் பொருளில்லை
உடல் காமத்தில் வந்தது
உயிர் கடனாய் தந்தது
தந்தவன் எடுத்து கொள்வான்
தப்பிக்க வழியுமில்லை
கொடுத்தவன் எடுத்து கொள்வான்
அவன் மேல் பழியுமில்லை .
உனக்காக வாழ வேண்டும்
என் கவிதையின் கருவானவள்
என் காதலின் உருவானவள்
என் வாழ்கையின் பொருளானவள்
என் கண்ணிரில் அருவானவள்
பேரிலே தமிழை கொண்டாள்
பேச்சிலே மழலை கொண்டாள்
தேரிலே மலரை சுட்டி - அவள்
தேவதை பருவம் கொண்டாள்
புகைப்பதும் பிடிக்காது என்பாள்
பொய் சொன்னால் பிடிக்காது என்பாள்
பகைப்பதும் பிடிக்காது என்பாள் - என்னை
பார்த்தாலே பிடிக்காது என்றாள்
கரம் கோர்த்து பேசிய வார்த்தை
சிரம் சாய்ந்து அழுத தருணம்
மரம் நிழலில் மறைவாய் முத்தம் - எல்லாம்
கனவாக கலைந்தது
நெஞ்சம் அழுகின்றது
நினைவை தருகின்றது
கைகள் தொழுகின்றது - கண்கள்
காண விழைகின்றது
உனக்காக வாழ வேண்டும்
உன்னோடு வாழ வேண்டும்
முத்தங்கள் மோகம் வேண்டும்
சண்டைகள் கோவம் வேண்டும்
உன் கண் பார்த்து சாக வேண்டும்
உன் கல்லறையிலும் பாகம் வேண்டும்
- வை .நடராஜன்
Image from Google
thanks for that painter ..
தாஜ் மஹாலை ..
என் அக்கா கேட்டார்கள்
உன் கவிதைகளை உன்னவள்
படிப்பாளா ????
சாலையில் கோலம்
போட்டோம் சாலைகள்
ரசித்ததில்லை
காளைமேல் வண்ணம்
அடித்தோம் காளைகள்
ரசித்ததில்லை
சுரங்கத்தை தோண்டும்
உழைப்பாளி வைரத்தை
வாங்கியதில்லை
ஓய்வா இருந்தாலும்
இதயம் ஓய்வாக
தூங்கியது இல்லை
தனக்கான தாஜ் மஹாலை
மும்தாஜும் பார்ததில்லை
உனக்கான என் கவிதைகளை
நீயும் படித்ததில்லை
சாதி வெறி
மகன் : அப்பா ஓரின சேர்கை என்றால் என்ன ?
அப்பா : டாய் இதெல்லாம் தேவையா .. போய் படிடா
மகன் : நீங்கள் சொன்னால் அடுத்த நான் வேலையை பார்க்க
போவேன் , இல்லையெனில் Internet'l பார்க்க போவேன் ..
அப்பா : ஒரே இனத்தை சேர்ந்த இருபாலரும் சேர்வது டா .
மகன் : அப்ப , என் இனத்து பெண் என் இனத்து ஆணுக்குதான்
உன் ஆண் இனத்து ஆண் உன் இனத்து பெண்ணுக்குதான்
என்று சாதி வெறியில் அலையும் எல்லோரும்
''ஓர் இன சேர்கையாளர்களா'' அப்பா ?
அப்பா : நீ வார்த்தையை தப்பாய் புரிந்து கொண்டாய் .
மகன் : சிறியவர்கள் வார்த்தையைதான் தப்பாக புரிந்து கொள்வோம்
நீங்கள் வாழ்க்கையை தப்பாக புரிந்து கொண்டு வாழ்கிரிர்கள் .
பூங்கா நகர் நிலையம்
அடுக்கு மல்லி தலை சூடி நீ
அலுவகத்துக்கு செல்லும் போதும்
அந்த
அழுக்கு புகை வண்டி கூட
அழகு தங்க ரதமானது
நீ தண்டவாளத்தை
கடந்த போது
தண்டவாள கருங்கற்கள்
தாமரை பூவாக்க மலர்ந்தன
உன்னை சுமந்து
செல்லும் புகைவண்டிக்கு
ஒவ்வொரு பயணமும்
புனித யாத்திரைதான்
பயணிக்கும் போது
பார்க்கும் பொருள் எல்லாம்
பின்னோக்கி போகும் - நீ
பயணிக்கும் போதுதான்
உனை பார்க்க எல்லாம்
முன்னோக்கி வந்தன
உன்னை கண்டால்
மோகத்தில் தண்டவாளமே
தடம் மாறும்
உன்னோடு பயணித்தால்
கொடைக்கானல் இடமாறும்
உன்னோடு பயணித்தால்
காற்றுக்கும் குளிறடிக்கும் - நீ
ஒரு நாள் விடுபெடுத்தால்
புகை வண்டியும் துடிதுடிக்கும் ...
இறைவா ......
பெற்றது யாரென்று
தெரியவில்லை - இனி
எப்படி வாழ்வது
புரியவில்லை
யோசிக்காமல் என்னை
பெற்றுவிட்டாள் - அன்னை
யாசிக்கும் கும்பலிடம்
விற்று விட்டாள்
தெருவிலே கையேந்த
விட்டு விட்டாய் - என்னை
கருவிலே கொல்லாமல் ஏன்
விட்டு விட்டாய் ?
வளர்க்க முடிந்தால் மட்டும்
பிள்ளை பெறுங்கள் - அன்றி
எல்லாவற்றையும் அடக்கி கொண்டு
சும்மா இருங்கள் .
இறைவா ......
பணக்காரராய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் - அன்றி
பசிக்காத வயிறாவது
இருத்தல் வேண்டும்
December 1, 2012
November 27, 2012
திருச்சிற்றம்பலம்
கூறிய வேலில் நெஞ்சை குத்திலும்
சீரிய பாம்பின் நஞ்சை அருந்திலும்
சாவின் பிடியில் மாட்டிகொண்டிலும்-என்
நாவில் வந்திடும் நமசிவாயமே
அஞ்சி ஓடிய மக்களை காக்க
நஞ்சு உண்ட என் நாத வாழ்க!
பஞ்சு போன்ற உன் மென்மையான
பிஞ்சி உள்ளம் என்றும் வாழ்க!!
உன்னை மறவேனோ உயர் நலம் அடைவேனோ
உன்னை மறந்தினும் உயிருடன் வாழ்வேனோ
கண்ணை இழந்தினும் காற்றை இழந்தினும்
என்னை படைத்த உன்னை மறப்பேனோ
பித்தனே பெருமானே என்றழைத்த சுந்தரருக்கு
அத்தனை அருள் தந்து அவர் பாவால் அகமகிழ்ந்து
இத்தனை காலமும் இருள் இல்லா உன் முகத்தை காண
எத்தனை காலம் நான் ஏக்கத்தில் தவிப்பேன் நமசிவயாவே ...
- வை . நடராஜன்
வீரர்களை இழந்தோம் !! வீரத்தை அல்ல ...
முன்னம் பறிகொடுத்தோம்
முள்ளிவாயில் பரிதவித்தோம்
திண்ணம் தீ சூழ
திசை எங்கும்
உயிர் கொடுத்தோம்
எண்ணம் ஈடேறும்
எதிர்காலம் சூடேறும்
வண்ணம் தமிழ் ஆட்சி
வலியோடு பீடேறும் .
சிங்கள பாவிகள்
சிதையும் நாள் தூரமில்லை
நான்கு திசையெங்கும்
ஆர்ப்பரிக்கும் கடல் நீரும்
நாளும் சூடேறும் -அழும்
எங்கள் கண்ணீரும் - ஒருநாள்
பொங்கி வரும்
பொதுவுடைமை சொல்லி தரும்
பொங்குவது தமிழனா ? கடலா ?
காலம்தான் தீர்ப்பு தரும்
கருமேகம் மறைப்பதினால்
கதிரவன் அழிவதில்லை
காற்று மோதிவிட்டால்
கருமேகம் பிழைப்பதில்லை
எங்கள் பக்கம் எதிர்கால
காற்றடிக்கும்
எங்கள் இனத்தை தர்மமே
மீட்டெக்கும்
ஆயிரம் ராஜபக்சே
அரியணை ஏறினாலும்
ஆயிரம் ஆண்டுகள்
அடக்குமுறையில் ஊறினாலும்
தன்னை காத்து கொள்ள
தமிழுக்கு தெரியுமடா - அன்று
தமிழன் யார் என்று
தரணிக்கு புரியுமடா
அந்நியனின் கால் நக்கி
ஆயுதங்களை மேல் தூக்கி
என்னினத்தை அழித்தவர்களே
எதிர்காலம் பதில் சொல்லும் .
இன்னும் ஆயிரம்
அண்ணனை பெற்றேடுக்க
அன்னை தமிழுக்கு
கருவிலே இடமுண்டு - ஆனால்
இந்த ஒருவரை சமாளிக்கவே
உலகமே உங்களுக்கு உதவியது .
எச்சை பதவி பெற்று
எட்டப்பன் தொழிலை கற்று
பிச்சை பணத்திற்காக
பெற்றவளை தெருவில் விற்ற
பச்சை துரோகிகளே
பாவத்தின் மூட்டைகளே
இனத்தின் அழிவுகளே
வரலாற்று கழிவுகளே
ஆண்டுகள் பல ஆனாலும்
ஆயிரம் உயிர் போனாலும்
ஈழம் அடைவோமடா
எதிர்காலம் விடியுமடா .
நாளை வெல்லும்போது
நானும் நீயும் இருக்க மாட்டோம் - ஆனால்
எதிர்கால தமிழினம்
வெற்றி முரசு கொட்டும் - அன்று
நிகழ்கால ஒரே சாட்சி
சூரியன் கை தட்டும் ......
தமிழர்களே ..
எதற்காகவும் அழாதீர்
எவரிடமும் தொழாதீர்
நம்பிக்கை வீரத்தை
இரு விழியில் பொறித்திருப்போம்
தர்மம் காக்க வரும்
அது வரை பொறுத்திருப்போம் .
November 26, 2012
மட்டமான பொருள்
உனக்காக பலவற்றை
இழந்தேன் - ஆனால்
உன்னை இழந்த பின்தான்
தெரிந்தது ,
நான் இழந்ததிலையிலே
மட்டமான பொருள்
நீ தான் என்று ..
- வை . நடராஜன்
November 21, 2012
ஒரு பைந்தமிழ் கிராமத்தின் பருவ காதல்
வாடி புள்ள வாழலாம் :
வானத்துல சாமி இருக்கு
வாழ்க்கையில அன்பு இருக்கு
ஊனம் என்று எதுவுமில்லை
உழைக்க நல்ல தெம்பு இருக்கு
சாதி சனம் எதுவுமில்லை
சாமி கூட இல்ல புள்ள
கம்பு காடும் காராம் பசுவும்
நம்பும் நமக்கு சாமி புள்ள
சோசியம் சாதகம் எல்லாம்
சோம்பேறி சொன்ன வேதம் புள்ள
சோடி கிளி நீ கூட இருந்தா
எமகண்டம் ராகுகாலம் ஒண்ணுமில்ல
கஞ்சி ஒ கூழோ எதுவோ பெண்ணே
மனசு நிறைய வாழலாம்
நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும் இன்றி
குழந்தை போல வாழலாம்
வஞ்சி கொடி வாடி புள்ள
வச்சி இருக்கன் நெஞ்சிக்குள்ள
ரெண்டு பெரும் சேந்து கொஞ்சி
பெத்துகுவோம் பத்து புள்ள
கூர வீட்ல இருந்தாலும்
குணத்துல நானும் அரசனடி
அழகோ பணமோ தேவ இல்ல - உன்
ஆயுசுக்கும் நான்தான் புருசனடி
தங்கம் வையரம் தேவையில்லை
ஒரு தென்னங்கன்னு போதுமடி
புள்ள போல வளப்போம் - நாம்ப
போனாலும் ஊருக்கு உதவுமடி
நூறு ரூபா சீல தாண்டி
வாங்கி தர வசதி இருக்கு - ஆனா
நூறு வருசம் போனா கூட
உன்ன சுமக்க நெஞ்சிருக்கு
வேப்ப மர காத்திருக்கு
வெள்ளி நிலா விளக்கிருக்கு
தோப்பு குயில் கூடுயிருக்கு
தொணைக்கு ரெண்டு ஆடுருக்கு
கட்டிலிலே வேர்வை சிந்தி
வயசு பசியை போக்குவோம்
கழனியிலே வேர்வ சிந்தி
வயத்து பசிக்கு ஆக்குவோம்
மாடி ஊடு இல்லையடி
மனசில் கள்ளம் இல்லையடி
ஓடி ஆடி ஒழச்சி உன்ன
உசிர பாத்துக முடியுமடி
தரிசு நிலம் காடு இருக்கு
குடிசை வீடு மாடு இருக்கு
வெரசா வாடி வாழ்க்கையில
பெருசா வாழ்ந்து காட்டுவோம்
விவாகரத்து
விதிபயனோ
வினைபயனோ
விண் கோள்களின்
சதி பயனோ
கோடி ஆசையில்
துவங்கிய வாழ்க்கை
கோர்டில் போய்தான்
முடிகின்றன ..
மலர்ந்த பூவை முகர்ந்து விட்டால்
சேற்றில் கிடக்கும் ஆரணம்
புரிந்து கொள்ள மறுபதே
பிரிந்து செல்ல காரணம்
நவக்கிரக தோசமெல்லாம்
நலிந்த மூட காரணம்
நலன்பு உயர் தியாகம்
களிந்த வாழ்வின் ஆரணம்
தொட்டு மகிழ்ந்த துணைக்காக
விட்டு கொடுப்பது தோல்வி அல்ல
கர்வம் கொண்டு எரித்து கொள்ள
வாழ்க்கை ஒன்னும் வேள்வவி அல்ல
தர்க்கம் கர்வம்
வாழ்க்கையிலே கொண்டு
தனிமையில் தான்
மடியனுமா ?
நாள் பார்த்து
நல் நாழிகை பார்த்து
நல்லோர்கள் வாழ்த்துகையில்
கைகோர்ந்த இதயம்
கசந்து பிரிந்து
வெதும்பணுமா??
கர்வம் கோவம்
சந்தேகம் சச்சரவு
ஆயிரம் சொன்னாலும் -அடிப்படை
வாழ தெரியவில்லை
யாரேனும் ஒருவருக்கு
அல்லது இருவருக்கும்
வாழ்க்கை வழக்காகிறது
சட்டம் வழி காட்டுகிறது
வாழ இயலவில்லை என
வாழ தெரியாதவர்கள்
பொய்யுரைத்து
வழக்கை நடத்தி
வாழ்க்கையை கெடுகின்றன ..
ஐ நா என்ன மைத்துக்கு ?
ஆண்டவனை காணவில்லை
ஐ நாவோ பேணவில்லை
கஷ்டப்படும் இனத்திற்கு
கை கொடுக்க யாருமில்லை
எரிவது எமினம் என்றால்
நெருப்பிலே நெய்யை ஊற்றும்
அதிகார வர்க்கம் விரைவில்
அடியோடு அழிந்து போகும்
புத்த பகவான் சொன்ன
புத்த தர்மம் எங்கே ?
பச்சை குழந்தைகள்
மீது பாஸ்பரஸ் குண்டு
யுத்த தர்மம் எங்கே ?
புத்ததை கொன்றது
இலங்கை
அதை பொழுதுபோக்காய்
ரசித்தது உலகம்
கையளவு கஞ்சுமில்லை
கதறும் தமிழன் வயதுக்கு
எதையுமே தடுக்காத
ஐ நா என்ன மைத்துக்கு ???
November 10, 2012
உனக்காக அழுதல் பெருமை
தொழுதாலும் ஊறுக்கு
தொழுதல் பெருமை
பழித்தாலும் நீதிக்கு
பழித்தல் பெருமை
விழுதாலும் அருவியாய்
விழுதல் பெருமை
அழுதாலும் உனக்காக
அழுதல் பெருமை .
மனமெல்லாம் வலித்தாலும்
மகிழ கண்டேன்
தினதோறும் அழுதாலும்
திவ்யம் கண்டேன்
கணம் நெஞ்சில்
களிவில்லை - இருந்தும் பெண்ணே
குணவத்திகாக அழுவதில்
பெருமை கொண்டேன் .
அள்ளிக்கொள்ள நீயுமில்லை
சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை
சாய்ந்து அழ தோளுமில்லை
அழுதாலும் ஈரமில்லை .
வாசலில் கோலமில்லை
வாழ்க்கையில் ஆரமில்லை
வார்த்தையில் சாரமில்லை
வழிதுணை யாருமில்லை .
மனதிலே காயம் கண்டேன்
மழைத்துளி கானல் கண்டேன்
மலர்விழி மங்கையவள்
மனம் கொள்ள மோகம் கொண்டேன் .
நீறுக்கு காத்திருக்கும்
வெடித்த நிலத்தை போல
சோறுக்கு காத்திருக்கும்
பசித்த மழலை போல
வானம் பாத்திருக்கும்
அடைபட்ட கிளியை போல
வசந்தமே உனக்காக
காத்திருப்பேன் காதலுடன் .
துணையே வருவாய்
வாழ்வோம் நிறைவாய்
விழுதாலும் அருவியாய்
விழுதல் பெருமை
அழுதாலும் உனக்காக
அழுதல் பெருமை .
மனமெல்லாம் வலித்தாலும்
மகிழ கண்டேன்
தினதோறும் அழுதாலும்
திவ்யம் கண்டேன்
கணம் நெஞ்சில்
களிவில்லை - இருந்தும் பெண்ணே
குணவத்திகாக அழுவதில்
பெருமை கொண்டேன் .
அள்ளிக்கொள்ள நீயுமில்லை
சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை
சாய்ந்து அழ தோளுமில்லை
அழுதாலும் ஈரமில்லை .
வாசலில் கோலமில்லை
வாழ்க்கையில் ஆரமில்லை
வார்த்தையில் சாரமில்லை
வழிதுணை யாருமில்லை .
மனதிலே காயம் கண்டேன்
மழைத்துளி கானல் கண்டேன்
மலர்விழி மங்கையவள்
மனம் கொள்ள மோகம் கொண்டேன் .
நீறுக்கு காத்திருக்கும்
வெடித்த நிலத்தை போல
சோறுக்கு காத்திருக்கும்
பசித்த மழலை போல
வானம் பாத்திருக்கும்
அடைபட்ட கிளியை போல
வசந்தமே உனக்காக
காத்திருப்பேன் காதலுடன் .
துணையே வருவாய்
வாழ்வோம் நிறைவாய்
November 4, 2012
என் மங்கை :
இதழ் சொல்லும் மங்கை
இதயத்தில் மங்கை
இரவெல்லாம் தூங்காத
இரு விழியில் கங்கை
உணை காணா நேரம்
விழிகின்ற கண்ணீர்
உணை காண வேண்டும்
தொழுகின்ற கைகள்
காணாத நெஞ்சம்
கண்ணீரில் நிறைந்து
உனான உயிரும்
ஓடாமல் உறைந்து
என்வான வெளியில்
வெளிச்சங்கள் குறைந்து
எந்நாளும் இருளில்
என் வாழ்க்கை மறைந்து
உணை காண வேண்டும்
தினம் தோறும் எண்ணம்
உன்னை வேண்டி தானே
உயிரோடு இன்னும்
உன் தோளில் சாய்ந்து
நான் அழுவ வேண்டும்
கண்ணீரை துடைத்து நீ
தழுவ வேண்டும்
செந்தாழ செவந்தி
செந்துர பூவே
செவ்வான இதழ் கண்ட
அணியான தீவே
உணை காணா நேரம்
அனல் மேல் தவித்தேன்
இனை கண்ட நெஞ்சம்
கணை கண்ணில் துடித்தேன்
உன் நெஞ்சம் எனை வெறுத்தால்
ரத்தத்தில் கொட்டும்
உன் மஞ்சம் உன் நெஞ்சம்
எனக்காக மட்டும்
என் சொல்லாடும் கவிக்கு
தாயாக இருக்காய் - உன்
தள்ளாடும் காலத்திலும்
சேயாக நினைவேன்
மழை வந்த பின்பு
மண்ணெல்லாம் ஈரம்
மங்காத உன்னை
காணாத நேரம்
தூங்காத நானும்
துடிக்கின்ற மீனாய்
வலி தவறி விழி கசியும்
விணான கேனாய்
உன்னை உன்னல் சமயம்
எனை வலிக்கும் இன்னல்
இவன் வேண்டும் வரமே
இவன் கண்ட அறமே
வருவாய் என் வளியே வாழ்வோம்
ஒன்றாய் - வாழ்வில் நாம்
என்றும் களிவோம்
நன்றாய்
- வை . நடராஜன்
Photo courtesy : Google
களவியல் - புணர்ச்சிமகிழ்தல்
ஆசை தான் அதிகமானால்
அங்கம் தான் புனிதமாகும்
தேகங்கள் கூடலிலே
மோகத்தால் மூச்சடைக்கும்
ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அணைத்தவளே ஆடையாக _ அவள்
இதழ் என்னை ஈரமாக்க
எங்கள் ,
நிர்வாண கோலத்திலே
நிலவுகே மோகம் வரும்
அதிகாலை பகலவன் பார்த்தால்
அவனுகே கூச்சம் வரும்
ஐந்தடி உடல் மூலம்
அகிலத்தை ரசித்தேன் _ அவள்
அழகிய இதழிலே அமுதத்தை
ருசித்தேன்
அந்த தீண்டாத கொடி முல்லையை
நான் தின்னாத இடமில்லை
தாண்டாத எல்லை தாண்டி
பண்ணாத செயல் இல்லை
தேகத்தின் இடமெல்லாம்
இதழ் படா இடமில்லை
வறண்ட என் தேகத்திலே
திரண்ட அவள் முத்த மேகம்
புரண்டு புரண்டோம் காலை வரை
தீரவில்லை தேக மோகம்
மோகத்தில் மோதிய பின்
தேகத்திலே சூடு _ அவள்
தேகமெல்லாம் ருசித்த பின்
தேவையா தேன் கூடு ?
வானமே போர்வை ஆயின
வாசமே வேர்வை ஆயின
நக கீறல் கோலமாயின
முகமெல்லாம் ஈரமாயின
போர்வையில் நெளிந்தோம்
வேர்வையில் நினைந்தோம்
வேகத்தில் களைத்தோம்
வெற்றியில் திளைத்தோம்
மோகத்தில் பயணம்
மோட்சத்தை அடைந்தோம்
வேகத்தில் தேகம்
மோகத்தில் உடைந்தோம்
போதும் என்று சொல்லி சொல்லி
நடித்தாள்
_ என்னை
போக சொல்லி கொண்டே அணைத்து
பிடித்தாள்
எந்த ஆண்மகனும் ருசிக்காத
அழகிய தேன் கிண்ணம் _ அவளை
ஆயிரம் முறை ருசித்தாலும்
அடங்காது ஆண் சின்னம்
நீ தொடதான் நான் பிறந்தேன்
நான் தொடதான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ ?
- வை . நடராஜன்
திருநீறு
ஒரு பெரியவர் நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு
சாலையில் சென்று கொண்டு இருந்தார்
எதிரே வந்த ஒரு நாஸ்தீகர் , '' என்ன ஐயா ' நீங்கள் கடவுளை கும்பிடுபவர் என்று காட்டிக்கொள்ள .
இந்த '' வெள்ளை பட்டை விளம்பரம் தேவையா ??
பெரியவர் சொன்னார்
,
அய்யா !! இந்த விளம்பரம் விலையற்ற வெறும் சாம்பல் ஆனால் .
நீங்கள் பகுத்தறிவு என்று காட்டிக்கொள்ள , செலவு செய்து வாங்கிய '' கருப்பு சட்டை விளம்பரம் தேவையா ???
- வை . நடராஜன்
Photo courtesy : Mr Martin Don
November 1, 2012
தமிழன் என்ன எலியா ?
நியூட்ரினோ ஆய்வகம் என்று
தேனி மலை குடைந்து விட்டான்
நியூகிளியர் கொண்டு வந்து
கூடங்குளம் கெடுத்து விட்டான்
தமிழகம் மட்டும் ஆய்வகமா ? உனக்கு
தமிழர்கள் எல்லோரும் சுண்டெலியா ?
கேரளவன் மலை எல்லாம் ஹனிமூனுக்கா ?
தமிழக மலை மட்டும் ஆய்வகத்துக்கா ?
உங்களுக்கு வேண்டும் என்றால்
நாடாய் எங்களை பார்க்கிறீர்கள்
நாங்கள் வேண்டியதை கேட்டால்
நாய் போல ஏய்க்கிறீர்கள்
தோண்டி சுரண்டி வெட்டி எடுத்து
எல்லா வளமும் போகுதடா
தண்ணீரை கேட்டால் மட்டும்
தகராறு ஆகுதடா
எங்கள் எதிர்கால சந்ததியை
பணயம் வைத்து இந்த
நிகழ்கால தேவைக்கு
அணு நிலையம் வைத்தீர்
துக்கம் வந்தால் எல்லாமே
எங்களுக்கு மட்டும் _ எனில்
வெட்கமின்றி கேட்கலாமோ
பங்கை மட்டும் ?
மழை நீரை தேக்கி வைக்க
அணைகட்டும் நிலை மாறி _ எங்கள்
மறத்தமிழன் உயிர் குடிக்க
ஆணை கட்டும் அரக்கனடா
இயற்கை நீரை இடை மறித்து
தடுத்துவிட்டு இல்லையேன்னு
செயற்கை வேடம் போடுபவனுக்கு
சேவை செய்யவா நாங்கள் பிறந்தோம் ?
எங்கள் அணை எங்கள் தண்ணி'
என்று நீ சொல்லும்போது _ எங்கள்
நிலக்கரியும் மின்சாரம் மட்டும்
எப்படி உனக்கு பொதுவில் வரும் ?
எங்கள் படகெல்லாம் கடலிலே
போய் _ பின் பாடையாக
வருகிறதே ..
அடித்தவனை தட்டி கேட்க
நாதி இல்லை உங்களுக்கு
அடுத்த கண்டம் தாண்டி போகும்
அக்னி தான் எதற்கு ?
கச்சத்தீவை பிரித்து கொடுத்தீர்
அண்டை நாட்டு நட்புகாக ..
ஏன் ?
கஷ்மிரையும் கொடுங்கலேன்
அதே போல நட்புகாக
நான் இந்தியாவை பிரிக்க
ஒன்றும் நினைக்க வில்லை _ ஏனெனில்
நம் இந்தியா இன்னும்
ஒன்றாய் சேரவே இல்லை .....
நிலம் மட்டும் சேர்ந்து விட்டால்
நாடாகுமா ?
மனம் எல்லாம் ஒன்று சேர
எத்தனை நாளாகுமோ ........
இந்தியன் என்று சொல்ல
பெருமை கொள்வோம் _ ஆனால்
இந்தியன் என்பதற்காக
ஏமாற மாட்டோம்
- வை . நடராஜன்
நான் இயற்கை பேசுகிறேன்
அன்னையை அடகு வைத்து
ஆடம்பரமாய் வாழ்வது போல
என்னையே அழித்து வாழும்
மதியற்ற மானிடர்களே.
பெரும் மழையும் எரிமலையும்
பூகம்பம் புயல் காற்றும்
நான் செய்யும் பெரும்நாசம்
என் வீடு என் குழந்தைகளை
சுயநலத்தில் கருவறுக்கும்
உங்களை படைத்தது
நான் செய்த பெரும் பாவம்
நான் படைத்தேன்
எனை அழித்தீர்
நீர் படைத்த மதத்தை காக்க
பெரும் செல்வம் கொடை அளித்தீர்
மூடர்களே ,
வீடே எரியும் போது
விளக்கிற்கு எண்ணெய் எதற்க்கடா ?
இயற்கையை அழித்த பின்
இறைவனும் மதமும் எதற்க்கடா ?
பூமியை காப்பாற்று
நான் , கெஞ்சவில்லை
உங்களை காப்பாற்றிகொளுங்கள்
எச்சரிக்கிறேன்
உங்களால் எனக்கு
சில கால வலி - உங்களுக்கு
நிரந்தர அழிவு .. .
- வை . நடராஜன்
Photography By : Brent Stirton , National Geographic Society .
October 28, 2012
எங்க ஊரு நாட்டாமை குடும்பம்
ஒரு நாட்டின் நம்பிக்''கை''யான குடும்பம் #
அண்ணன் ஆள கெடுத்தான்
தம்பி தாலிய அறுத்தான்
ஒண்ணா உக்காந்து
உல வச்சி ஊர கெடுத்தான்
பிச்சகாரன் தட்ட புடிங்கி
எச்ச சோறு தின்ன
சித்தபனும் சண்டை போடான்
சித்தமாலும் பங்கு கேட்டா
உள்ளூர் கோழிய
உல வச்சி திருடி திண்ணு
வெளியூரு மருமகள்
வீங்கி நல்லா பெருத்துபுடா
மாடு மேச்ச மருமகனுக்கு
மாடி வீடு தங்க தேரு
கோமணம் கட்டி சுத்தின மாகான்
கோட்டு சூட்டுல அலையுது பாரு
அடுத்த வீட்டு ஆட்டை திருடி
அலையறா அக்காகாரி
தவிச்ச விட்டில போய்
தண்ணிய வாங்கி தறுதலையா
சுத்தறான் தம்பிகாரன்
செத்து போன தாத்தாவுக்கு
சொத்து எண்ணம் பக்கமே இல்ல
பெத்து போட்டா புள்ளைங்களுக்கு
சொத்த திருட வெக்கமே இல்ல
# இது வெறும் கற்பனையே . எந்த தனி மனிதனையோ . எந்த அரசியல்
கட்சியோ குறிப்பிடவில்லை .
வரதட்சனை
பல இடங்களில்
வசதிக்காக
மாப்பிளை விட்டார் கேட்கும்
பிச்சை ..
பல இடங்களில்
தன் வசதியை காட்ட
பெண் விட்டார் செய்யும்
விளம்பரம்
- வை . நடராஜன்
ஏன் இந்த நாடகம்
பருவ மழைக்கு காத்திருந்தான்
விவசாயி - நீ
பருவம் வந்த முதல் காத்திருக்கேன்
இந்த படுபாவி
ஜன்னல் ஓரம் நின்று
தினம் படிக்கிறாய் - எனை
பார்க்காதவள் போல்
ஏனடி நடிக்கிறாய் ?
வேண்டாம் என்றால்
வேண்டிய காதலை நிறுத்து கொள்வேன்
நீ வேண்டுமென்றே இப்படி
செய்தால் , நான் என்ன செய்வேன் ?
பார்க்கும் போது நடிக்கிறாய்
பார்கவில்லைஎனில் துடிக்கிறாய்
பார்க்காமல் நான் கடந்து விட்டால் - கோவத்தில்
உன் தம்பியை ஏனடி அடிக்கிறாய் ?
நான் விரும்பி பார்த்தல்
நீ பூமியை பார்ப்பாய் - நான்
திரும்பி விட்டால்
என்னை பார்ப்பாய்
காதலுக்கு கண்தான்
ஊடகம்
எத்தனை நாள் இந்த
நாடகம் ?
ஒரு ஈழத்தின் பெண்
என் வானின் மதி கூட
நெருப்பாக சுட
என் தோட்ட மலர் கூட
வாசங்கள் கெட
யான் வளர்த்த பசு
காம்பில் விடமாக வர
தேன் கலந்த கனியெல்லாம்
கைபட்டால் கெட
ஊன் கொண்ட
உயிர் கூட சுமையாக பட
யான் கண்ட உறவெல்லாம்
பகையாக வர
யாழ் இசையும் எனை
கண்டு அழுகின்றது
தோள் சாயிந்து அழ
நெஞ்சம் விழைகின்றது
அன்னத்தின் இரு
விழியும் அன்பாக
வெள்ளத்தின் தத்தளிக்கும்
கன்றாக
உள்ளத்தின் சுமையெல்லாம்
ஒன்றாக
உயிரோடு எனை வறுத்தி
கொன்றாக
வான் பார்த்த
வெளி களத்தில்
ஊர் பார்க்க
என் பெண்மையை
சேர் பட்ட மலராக
சேர்ந்து பலர் கெடுத்தார்கள்
உடல் வெந்த என்
கணவன் - துடி துடித்த
கை குழந்தை
மலர் எரிந்த
பெரும் கொடுமை
பலர் குடித்த
என் பெண்மை
ஈனத்தின் இழிவாக
வாழ்கின்றேன்
ஈழத்தில் பிறந்ததால்
வீழ்கின்றேன்
ஒரு சீதை உயிர் காக்க
ஊர் கூட்டி வந்த ராமா - இங்கே
ஓராயிரம் சீதைகளை சீரழித்தார்
எங்கே போனாய் ?
மான் மயில்கள் மா எருது
தேன் மலர்கள் பல வாழ
மீன் வாழ கூட நதி உண்டு
நான் வாழ வழி இல்லை
ஈழத்தில் நான் பிறந்தேன்
வேறென்ன பிழை செய்தேன் ?
மழை வெய்யில்
என்றென்றும் மேனியிலே
உடை அணிந்த
மிருகமாய் வேலியிலே
இன்பத்தை இது வரை
நான் காணவில்லை
எனை அழைக்க
காலனுக்கு ஏன் தோணவில்லை
எங்களுக்கு
மரணம் விடுதலை
பிழைத்தோம் பெரும்
பிழை ..
October 23, 2012
October 22, 2012
ஒரு முட்டாள்
மரத்தை வெட்டி
மழைக்கு ஏங்கினான்
மனையை விற்று
மாட்டை வாங்கினான்
பாலுக்காக மாட்டை
விற்றான்
பாம்பின் சிலைக்கு
படையல் வைத்தான்
நேரில் வந்ததும்
அடித்தே கொன்றான்
காகிதம் வாங்க
கையை இழந்தான்
கழுதையை ஓட்ட
காகிதம் எறிந்தான்
கப்பலை கவிழ்க்க
கல்லை எடுத்தான்
கட்டிலை வாங்க
தூக்கத்தை தொலைத்தான்
காதலுக்காக
தற்கொலை செய்தான் .
- வை . நடராஜன்
October 19, 2012
இருக்கும் வரை
இருக்கும் வரை ஆயிரம் சண்டை
இறுமாப்பில் பேசாமல் உதறுவார்
இறந்த பின் காலை பிடித்து
பேசு பேசு என கதறுவார் .
- வை . நடராஜன்
இறுமாப்பில் பேசாமல் உதறுவார்
இறந்த பின் காலை பிடித்து
பேசு பேசு என கதறுவார் .
- வை . நடராஜன்
October 17, 2012
புல் திண்ற புலி
ஒரு அடர்ந்த காடு , அன்று அழகிய காலை பனியில் நினைந்த புல்களை
அந்த புலி ரசித்து தின்று கொண்டு இருந்தது , அப்பொழுது அங்கே வந்த மற்றொரு புலி அதை
பார்த்து பெரும் அதிர்ச்சியும் கோவமும் அடைந்து அந்த புலியிடம் சென்று , ''அட பாவி என்ன செய்கிறாய் ? !!!
நம் இனத்தின் மானத்தையே வாங்கி விட்டாயே ...
மானிடர்கள் நம் குணத்தை வைத்து பெருமையாக பழமொழி கூட சொல்லுவார்கள் .
நீயோ இப்படி செய்கிறாய் .. இதை யாரேனும் பார்த்தல் நம் இனத்துக்கு பெரும்
அவமானம் .இதை பொறுமையாக கேட்டுகொண்டு இருந்த அந்த புலி ''
நண்பா என சொல்லிக்கொண்டு எழுந்து நின்றது அதின் முன்னங்கால் வலது பாதம் முற்றிலும் சிதைந்து இருந்தது .
என் பாதங்களை பார் ஒரு வேட்டையின் போது விபத்தில் இழந்து விட்டேன் .
சிலவாரங்களாக உணவு கிடைக்காமல் நடக்க இயலாமல் பெரும் துன்பத்தில்
இருந்தேன் . பசியின் கொடுமையில் வேட்டையாட முடியாத நிலையில் இருந்த சமயத்தில்
ஒரு துறவி என்னை பார்த்தார் .என் நிலையில் இறக்க பட்ட அவர் நான் புல்
இலைதழைகளை சாப்பிடும் குணத்தை தருகிறேன் நீ வருந்தாமல் இங்கேயே வாழு என்றார் .
நான் சொன்னேன் '' சுவாமி என்ன இது ? என்னை போய் புல் உண்ண சொல்கிறிர்கள் ,
இது இழுக்கு அல்லவா ? அவர் சொன்னார் '' உணவில் இழுக்கு என்ன ? எல்லாம்
கிடைக்கும் என்பதால் தானே .. சைவம், அசைவம், பழையது, தாழ்ந்தது, என்றெல்லாம்
பாகு பாடு .. ஒரே பசிக்கு ஒரே உணவு என்ற நிலை அமைந்தால் கவுரவம் பார்த்து மடிந்து விடுவார்களா.. ?
தன்மானம் வேறு தலைகனம் வேறு .உங்களுக்கு புல் உண்ணும் வகையில் பல் இல்லை . அப்படியே உண்டாலும்
புல்லின் சக்தியால் உங்களால் வாழ இயலாது . மற்ற படி அதில் அவமானம் இல்லை
அகவே இந்த மலை அடிவாரத்தில் வாழும் எல்லா புலிகளும் புல் உண்டு வாழ
நான் வரம் தருகிறேன் '' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் .
இதை கேட்ட இந்த புலியும் மிகவும் மகிழ்ச்சியில் இனி நானும்
வேட்டையாடி உடலை வருத்த போவதில்லை .என இரண்டும்
பல காலங்களாக அங்கேயே வாழ்ந்தன .இவைகளின் அகோர பசியினால் பெரும்பாலான
புல்களை புலிகள்மட்டும் திண்ண . அங்கே வாழ்ந்த ஒரு மான்கள் கூட்டம் மிகவும் கலக்கம் அடைந்தன ,
தன இனதிற்கு உனக்கு கிடைக்காமல் போக புலிகளை எதிர்க்கவும் சக்தி
இன்றி கவலையில் வாழ்ந்தன .அப்பொழுது அங்கே வந்த ஒரு மந்திரவாதி இவைகளில்
கவலைகளை அறிந்து ''இனி அந்த புலிகளுக்கு புல் தின்னும் ஆற்றலும் மறையட்டும்
என சொல்லி சென்று விட்டார்'' .பின் அந்த காலிழந்த புலி வேட்டையாட முடியாமல்
புல்லும் செறிகாமல் பசியில் சில நாளில் மாண்டு போனது .
கதையின் கரு :
இந்த சமுதாயம் இந்த புலி , மந்திரவாதி என இருவரையும் கொண்டதாகும் .
உண்மையில் இயலாத இருந்த புலியை கண்டு சோம்பேறி ஆனா புலியை போன்ற மனிதர்களும் ,
சோம்பேறித்தனம் இயலாமைக்கும் வித்யாசம் பார்க்க தெரியாத மந்திரவாதி போல
சில மனிதர்கள் உணவு பதிலாக '' உழைத்து உன் '' என்ற வீண் உபதேசம்
பண்ணியும் காலம் கழிக்க .
இறுதியில் மடிவது என்னவோ அடி பட்ட புலி போல இயலாதவர்களே ..
- வை . நடராஜன் .
October 16, 2012
Subscribe to:
Posts (Atom)