December 14, 2012

மரணம்






வெளியே நடக்கும் மரண செய்தி
செவிகள் வரைக்கும் ஒலிக்கும்
வேண்டியவரின் மரணம் மட்டும்
இதயம் சென்று வலிக்கும்.


அடித்து துடித்து அழுபவர்களுக்கு
ஆயுள் வரை தண்டனை - அங்கே
அடக்கமாகி போனவர்களுக்கு
ஆயுள் தண்டனையில் விடுதலை .

கர்வம் காமம் கோபம்
எல்லாம் திமிறி கொண்டு திரியும்
கடைசி மூச்சை இழந்த பிணத்தை
கண்டால் உண்மை புரியும் .

பூக்காத மொட்டின் மேல்
புயல் அடித்தது - தாயை
பார்க்காத பிஞ்சிகளும்
புதைகின்றது .

சேர்க்காத பாவங்களை
செய்த ஜென்மங்களும்
தள்ளாத வயது வரை
திரிகின்றது .

வாழ்க்கை தரிசாய் போனவர்களுக்கு
மரணம் பரிசாய் தெரியும்
வாழ்க்கையை வாழாமல் போனால்
அது வலியாய் உறையும் .

காமம் இல்லையெனில்
காதலில் சுவையில்லை
மரணம் இல்லையெனில்
வாழ்க்கையில் பொருளில்லை

உடல் காமத்தில் வந்தது
உயிர் கடனாய் தந்தது
தந்தவன் எடுத்து கொள்வான்
தப்பிக்க வழியுமில்லை
கொடுத்தவன் எடுத்து கொள்வான்
அவன் மேல் பழியுமில்லை .

No comments:

Post a Comment