January 11, 2014

முதல்வர்


Transfers

 :

வயித்துக்காக திருடுபவர்களை
துறத்தும் அதிகாரிகள்
வசதிக்காக திருடும் அரசியல்வாதிகளை
தொட்டால் ...
துறத்தப்படுகிறார்கள் .

- வை . நடராஜன் ..

சுதந்திரம்

கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிய
நாடு - இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான்
இருக்கிறது ....

அன்று கைகளை கட்டிவிட்டு
திருடினார்கள்
இன்று நம் கண்களை கட்டி விட்டு
திருடுகிறார்கள் ..

அன்று திருடியவன் யார் என்று
தெரிந்தது அடிக்க வீரம் இல்லை
இன்று திருடுபவர்களை
எண்ண கூட நேரமில்லை .

இந்தியா சுதந்திரம் பெற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

- வை . நடராஜன்

ரோட்டுக்கடை


உனக்காக அழுதல் பெருமை .



தொழுதினும் ஊறுக்கு
தொழுதல் பெருமை
பழித்தினும் நீதிக்கு
பழித்தல் பெருமை
விழுதினும் அருவியாய்
விழுதல் பெருமை
அழுதினும் உனக்காக
அழுதல் பெருமை .

மனமெல்லாம் வலித்தாலும்
மகிழ கண்டேன்
தினதோறும் அழுதாலும்
திவ்யம் கண்டேன்
கணம் நெஞ்சில்
களிவில்லை - இருந்தும்
குணவத்திகாக அழுவதில்
பெருமை கொண்டேன் .

அள்ளிக்கொள்ள நீயுமில்லை
சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை
சாய்ந்து அழ தோளுமில்லை
அழுதாலும் ஈரமில்லை .
வாசலில் கோலமில்லை
வாழ்க்கையில் ஆரமில்லை
வார்த்தையில் சாரமில்லை
வழிதுணை யாருமில்லை .

மனதிலே காயம் கண்டேன்
மழைத்துளியில் கானல் கண்டேன்
மலர்விழி மங்கையவள்
மனம் கொள்ள மோகம் கொண்டேன் .

நீறுக்கு காத்திருக்கும்
வெடித்த நிலத்தை போல
சோறுக்கு காத்திருக்கும்
பசித்த மழலை போல
வானம் பாத்திருக்கும்
அடைபட்ட கிளியை போல
வசந்தமே உனக்காக
காத்திருப்பேன் காதலுடன் .

- வை . நடராஜன்

வீரர்களை இழந்தோம் !! வீரத்தை அல்ல



***...***
----------------------------------------------------------------------

முன்னம் பறிகொடுத்தோம்
முள்ளிவாயில் பரிதவித்தோம்
திண்ணம் தீ சூழ
திசை எங்கும்
உயிர் கொடுத்தோம்

எண்ணம் ஈடேறும்
எதிர்காலம் சூடேறும்
வண்ணம் தமிழ் ஆட்சி
வலியோடு பீடேறும் .

சிங்கள பாவிகள்
சிதையும் நாள் தூரமில்லை

நான்கு திசையெங்கும்
ஆர்ப்பரிக்கும் கடல் நீரும்
நாளும் சூடேறும் -அழும்
எங்கள் கண்ணீரும் - ஒருநாள்
பொங்கி வரும்
பொதுவுடைமை சொல்லி தரும்
பொங்குவது தமிழனா ? கடலா ?
காலம்தான் தீர்ப்பு தரும்

கருமேகம் மறைப்பதினால்
கதிரவன் அழிவதில்லை
காற்று மோதிவிட்டால்
கருமேகம் பிழைப்பதில்லை

எங்கள் பக்கம் எதிர்கால
காற்றடிக்கும்
எங்கள் இனத்தை தர்மமே
மீட்டெக்கும்

ஆயிரம் ராஜபக்சே
அரியணை ஏறினாலும்
ஆயிரம் ஆண்டுகள்
அடக்குமுறையில் ஊறினாலும்

தன்னை காத்து கொள்ள
தமிழுக்கு தெரியுமடா - அன்று
தமிழன் யார் என்று
தரணிக்கு புரியுமடா

அந்நியனின் கால் நக்கி
ஆயுதங்களை மேல் தூக்கி
என்னினத்தை அழித்தவர்களே
எதிர்காலம் பதில் சொல்லும் .

இன்னும் ஆயிரம்
அண்ணனை பெற்றடுக்க
அன்னை தமிழுக்கு
கருவிலே இடமுண்டு - ஆனால்
இந்த ஒருவரை சமாளிக்கவே
உலகமே உங்களுக்கு உதவியது .

எச்சை பதவி பெற்று
எட்டப்பன் தொழிலை கற்று
பிச்சை பணத்திற்காக
பெற்றவளை தெருவில் விற்ற

பச்சை துரோகிகளே
பாவத்தின் மூட்டைகளே
இனத்தின் அழிவுகளே
வரலாற்று கழிவுகளே

ஆண்டுகள் பல ஆனாலும்
ஆயிரம் உயிர் போனாலும்
ஈழம் அடைவோமடா
எதிர்காலம் விடியுமடா .

நாளை வெல்லும்போது
நானும் நீயும் இருக்க மாட்டோம் - ஆனால்
எதிர்கால தமிழினம்
வெற்றி முரசு கொட்டும் - அன்று
நிகழ்கால ஒரே சாட்சி
சூரியன் கை தட்டும் ......

தமிழர்களே ..

எதற்காகவும் அழாதீர்
எவரிடமும் தொழாதீர்

நம்பிக்கை வீரத்தை
இரு விழியில் பொறித்திருப்போம்
தர்மம் காக்க வரும்
அது வரை பொறுத்திருப்போம் .

- வை . நடராஜன்

எங்கே போனாய்


January 10, 2014

மொழி காப்போம்



இனிதான மொழிக்காப்போம் !!
இறக்கும்வரை தமிழ் காப்போம் .............


பொதிகை மலை தலை கலைத்து 
புறப்படும் தென்றல் - அருகே 
அடிவார வயல் வெளியில் 
வாசத்தை தெளிக்கும் 

வயல் நடுவே வரப்பினிலே
வரிசையில் பெண்கள்
கயல் தமிழில் கானம் பாட
காற்றினில் கமழும்

தேன்கலந்த கனிக்கூட
தமிழிடம் தோற்க்கும் - அந்த
தேவ பாஷை சமஸ்கிரதம்
தேகமும் வேர்க்கும்

ஊன் கலந்த உயிரெல்லாம்
தமிழ் மொழியாக்கும் - இந்த
உடல் விட்டு போகும் வரை
தமிழ் மொழி காக்கும்

கரை நின்றும் கால் தேடி
கடல் நீர் நினைக்கும்
சிறை பட்டினும் குயிலிசை
காதினில் மணக்கும்

இடர்ப்பட்ட நெஞ்சம்
இன்னல்கள் காணும்
சுடர் விட்டு ஒளி வந்தால் - இருள்
சூனியம் ஆகும்

அறியாதவனை அப்பன் என்று
சொல்வது மடமை - பிள்ளைக்கு
புரியாத பெயர் வைப்பது
அதனினும் கொடுமை

தள்ளாத வயதினிலே
வறுமை கொடுமை - தாய்
தமிழ் மொழியை மறப்பது
அதனினும் இழிமை


விழியிழந்து போனவன்
ஒளியை இழந்தான் - அன்னை
மொழி மறந்து போனவன்
மானத்தை இழந்தான்

அன்னம்தான் எல்லோர்க்கும்
அளந்திட வேண்டும் - பாரில்
பசியின்றி வாழும் - நல்
நிலை வர வேண்டும்

எண்ணம்தான் மேன்மையில்
சிறந்திட வேண்டும் - இனி
எப்பிறவியும் தமிழனாய்
பிறந்திட வேண்டும்

மொழிமறந்து வாழ்வதினில்
யோக்கியமென்ன - தமிழ்
மொழிகாக்க இறப்பவதை விட
பாக்கியமென்ன ...

உணவிட்டு உயிர் காப்போம்
உயிர் கொடுத்தினும் மொழி காப்போம்

- வை நடராஜன்

எத்தகைய வாழ்க்கையை

நாம் அழும் போது ஆறுதல் சொல்பவர்களும்
நாம் அழுவதை பார்த்து ஆறுதல் அடைபவர்களும்
எத்தனை பேர் உள்ளனர் என்பதை பார்த்து
அதில் வரும் எண்ணிகையை வைத்து புரிந்து கொள்ளலாம் .................

நாம் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறோம் என்று.



தில்லையில் ஆட செய்தாய்
தினமுன்னை பாட செய்தாய்
திங்களை சிரத்தில் வைத்தாய்
தியாகத்தை அகத்தில் வைத்தாய்

எண்ணத்தில் உன்னை வைத்தாய்
ஏட்டிலே பண்ணாய் வைத்தாய்
திண்ணமும் எண்ண வைத்தாய்
தினமுன்னை தொழுக வைத்தாய்

உண்மையை உணர  செய்தாய்
உளமார உருக  செய்தாய்
அம்மையை இடையில் வைத்தாய்
அப்பரை இணங்க வைத்தாய்

காலனை நடுங்க செய்தாய்
காலமும் உணர செய்தாய்
வாசகர் உருக செய்தாய்
திருவாசகம் பெருக செய்தாய்

நஞ்சினை அகத்தில் வைத்தாய்
நவமணி கண்ணில் வைத்தாய்
ஏந்தினை மனதில் உன்னை
ஏக்கத்தில் நினைவில் வைத்தாய்

சாம்பலை பூச  செய்தாய்
சகலமும் வாசம் செய்தாய்
சடைமுடி எழிலினுள்
கங்கையை வாழ செய்தாய்

கனிதனை அருள செய்தாய்
கண்முட இருள செய்தாய்
பனிபடர் சிகரத்திலே
பரம்பொருளே வாசம் செய்தாய்

தோடுடைய செவியானே அழகு
தேனுடைய தமிழை  வைத்தாய்
மானுடைய கரத்தில் அம்பர்
மேனடைய அருளை  வைத்தாய்

செற்றுடைய இடதில் எல்லாம்
நாற்றுடைய நெல்லை வைத்தாய்
காற்றுடைய புவியில் என்றும்
கானத்தை கமழ செய்தாய்

பித்தனும் ஆனாய்
பிரம்படி பெற்றாய்
சித்தனும் ஆனாய்
சிவனடி போற்றி
அத்தனும் அடங்கிய அரும்பெருள்
கடலே
நத்தவம் கோலமே
நம சிவாயமே

- வை , நடராஜன் 

January 4, 2014

எம் இனத்தின் நிலைமை :


எம் இனத்தின் நிலைமை :

எங்கே ஈழம் ?
இழவு இலங்கை ,
கொதிக்கும் கூடங்குளம்,
குமுறும் மீனவன்

குளிர் காய எதுவுமில்லை எனில்
கூப்பிடுடா தமிழனை
கட்டி வைத்து எரிய வைத்து
கண் கொட்ட ரசிப்போம்
கரிக்கட்டை ஆன பின்பு
பங்கு போட்டு ருசிப்போம் -என

சுற்றமும் பகைவர்கள் _மனித
சுவை கண்ட மிருகங்கள்
குற்றமும் கொடுமையும் கண்டோம்
எங்கே அந்த தெய்வங்கள் ???

- வை . நடராஜன்

எங்கள் நாட்டில்

எங்கள் நாட்டில் பொருளாதார மேதைகள்
வெள்ளையும் சொள்ளையுமாக திரிகின்றனர்
நாடு மட்டும் அம்மணமாக ஆகிறது

ஆனந்த விகடன் - இதழ் - 4.9.2013





ஆனந்த விகடன் - இதழ் - 4.9.2013

சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் மோசமான நிலையைப் பற்றி இந்த வார ஆனந்த விகடனில் "ஆண் திமிர் அடக்கு" என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது . பக்கம் ( 93 )

ஆண் ஆதிக்கம் , காம கண்ணோட்டம், என்று பல பார்வைகளில் அலசும் தவிர்க்க முடியாத கட்டுரை , மறுக்க முடியாத உண்மை . அதில் " செய்ய வேண்டியவை " என்ற பெட்டிச் செய்தியில் ,

1) கட்டற்று பெண்களின் உடலை போக பொருளாக மாற்றும் சினிமா , தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறை உருவாக்க வேண்டும் .

2) இந்த மாற்றங்களை நமது வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். பெண்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும் விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தரவேண்டும்.

இந்த இரண்டு கருத்தையும் ஆனந்த விகடனில் படித்தேன். பெண்கள் வாழவும் , ஆண்கள் மாறவும் தேவையான கருத்து .

பெண்களை போகப் பொருளாகக் காட்டும் சினிமா , தொலைக்காட்சி கட்டுப்பாடு வேண்டுமென்று எழுதிய ஆனந்த விகடனின் உண்மை நிலை என்ன ?

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு நடிகையின் மார்பும் , இடுப்பும் விகடனின் விருந்து , டைம் பாஸ் என்ற அவர்கள் குழுமத்தின் பிரத்யேக புத்தகத்தில் பக்கங்களில் எல்லாம் பெண்களின் அங்கங்கள். டீக்கடைகளிலும் , பேப்பர் கடைகளிலும் , தொங்க விடும் விளம்பர ஆபாசப் படங்கள் வளரும் மாணவர்களுக்கும் , வளர்ந்த ஆண்களுக்கும் , நல்ல சிந்தனையைத் தரும் என்று விகடன் நினைக்கிறதா ???

திரைப்படங்களின் கட்டுப்பாடு வேண்டும் என்று எழுதிய கருத்தினை நான் ஏற்கிறேன் . ஆனால் அந்த நடிகைகளின் அங்கங்களை அச்சிட்டு வியாபாரம் செய்யும் உங்களுக்கு வேண்டாமா கட்டுப்பாடு??

" இன்பாக்ஸ் " நடிகைகளின் பேட்டி , அட்டைப்படம் என ஒவ்வொரு பக்கத்திலும் , நடிகைகளின் ஆபாசப் படங்கள் .

இது பல வருடங்களாக நடக்கின்றது . அப்படியொரு கீழ்த்தரமான படங்களைக் காட்டி அந்த ஆண்களின் மனதில் நீங்களும்தானே விஷம் ஏற்றி உள்ளீர்கள் ... மாற வேண்டியது சமூகம் என்றால் நீங்கள் முதலில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.ஆண்களின் டைம் பாஸ் எல்லாம் பெண்களின் அங்கம் தான் என்று சொல்லாமல் செயல்படும் உங்கள் வழக்கத்தை மாற்றுங்கள்.

உங்கள் இதழின் உள்ளே அறிவுள்ள பகுதிகள் இருக்கின்றது . அதை நான் மறுக்கவில்லை . ஆனால் வியாபாரத்திற்கு அழகுப் பெண்களின் அழகைத்தான் நம்புகிறீர்கள்.இதுதான் நீங்கள் பெண்மைக்குத்தரும் மரியாதையா ? விகடன் மட்டும்தான் இந்த செயலைச் செய்கிறது என்று கூறவில்லை . இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இதே பாணியில் தான் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

இத்தனை நாள் இப்படி பெண்களை வைத்து பிழைப்பு நடத்திய விகடன் இன்று ஆண்களுக்கு அறிவுரை செய்ததால் இந்த கேள்வியை எழுப்புகிறேன்...

இப்படி நீங்கள் உங்கள் இதழை விற்பதை மதிப்பிற்குரிய ஐயா, S.S.வாசன் அவர்களின் ஆன்மா பார்த்தால் மிகவும் மனம் வெதும்பி ரத்தக் கண்ணீர் வடிக்கும் .

ஆண்களிடம் மாற்றம் விரும்பும் உங்களிடம் உடனடியாக வேண்டும் ஒரு மிகப்பெரிய மாற்றம்.

திரைப்படம் , நாடகம் , பத்திரிக்கை என அனைத்து ஊடகங்களிலும் பெண்மையை போகப் பொருளாகக் காட்டும் நிலையை மாற்ற நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ வாழ்த்துகள்..

- வை.நடராஜன்

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள்

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள்: இந்தியா திட்டம்

அக்னி ஏவுகணை ஆயிரம் இருப்பினும்
ஆண்மை என்பது கொஞ்சமும் இருக்கணம்

எங்கள் படகெல்லாம் பாடையாக
திரும்புகிறது _ எங்கள்
கடலோரம் தினம் தினம்
அழுகின்றது

நீங்களோ

கொன்று குவிக்கும் பாவிகளுக்கு
கொல்ல பயிற்சி கொடுக்குறீர்கள் _ உங்கள்
மனையுள் புகுந்து மகளை கெடுக்க வருபவனுக்கு
வயகரா வாங்கி தந்து வழி அனுப்பி வைப்பிர்ரா ????

- வை.நடராஜன்
பிச்சகாரன் சாப்பிடும் வரை பிச்ச எடுப்பான் ..
அரசியவாதி சாகும் வரை பிச்சை எடுப்பான் ..

பழகி கொள்ளுங்கள்

பால் குடித்து பழகி கொள்ளுங்கள்
பசி போகும்
பால் கறக்க கற்று கொள்ளுங்கள்
வறுமை போகும்
கை ஏந்த கற்றுக்கொண்டால்
வயறு நிறையும்
கை வலிக்க உழைக்க போனால்
வாழ்க்கை நிறையும்

உனக்காக வாழ வேண்டும்



உனக்காக வாழ வேண்டும் :::
-------------------------------------------

என் கவிதையின் கருவானவள்
என் காதலின் உருவானவள்
என் வாழ்கையின் பொருளானவள்
என் கண்ணிரில் அருவானவள்

பேரிலே தமிழை கொண்டாள்
பேச்சிலே மழலை கொண்டாள்
தேரிலே மலரை சுட்டி - அவள்
தேவதை பருவம் கொண்டாள்

புகைப்பதும் பிடிக்காது என்பாள்
பொய் சொன்னால் பிடிக்காது என்பாள்
பகைப்பதும் பிடிக்காது என்பாள் - என்னை
பார்த்தாலே பிடிக்காது என்றாள்

கரம் கோர்த்து பேசிய வார்த்தை
சிரம் சாய்ந்து அழுத தருணம்
மரம் நிழலில் மறைவாய் முத்தம் - எல்லாம்
கனவாக கலைந்தது

நெஞ்சம் அழுகின்றது
நினைவை தருகின்றது
கைகள் தொழுகின்றது
கண்கள் விழைகின்றது

உனக்காக வாழ வேண்டும்
உன்னோடு வாழ வேண்டும்
முத்தங்கள் மோகம் வேண்டும்
சண்டைகள் கோவம் வேண்டும்
உன் கண் பார்த்து சாக வேண்டும்
உன் கல்லறையிலும் பாகம் வேண்டும்

- வை .நடராஜன்
அற்ப்பனுக்கு வாழ்வு வந்தா மொட்ட மாடில AC வைப்பானாம் .

ஹிட்லரின் நாய்



ஹிட்லரின் நாய் அறியாது - அவன்
இத்தனை பாவம் செய்தவன் என்று
வயித்துக்கு ரொட்டி போட்டான்
வாழ்ந்தவரை அன்பு காட்டியது .

ரொட்டி போட்ட கரங்களில் - பலரை
சுட்டுபோட்ட ரத்த கறைக
இருந்து அதற்கு கவலை இல்லை
எதிர்க்க அதற்கு தெரியவில்லை

நன்றி மட்டும் அறிந்த நாய்க்கு
நல்லவன் கெட்டவன் அறியாது
அறிந்து புரிந்து வாழ்வதற்க்கு
ஆறாம் அறிவு கிடையாது

இத்தனை வருடம் கடந்த பின்
எதற்கு இந்த கவிதை ?
எத்தனை மனிதர்கள் இன்றும் அந்த
ஹிட்லரின் நாய்போல் வாழகண்டேன்

துரோகமும் வஞ்சமும் கொண்டவனையும்
தோரணை கட்டி புகழ்கின்றனர்
ஊழலில் மிதக்கும் தலைவனை கூட
உலகத்தின் உத்தமன் என்கின்றனர்

திருடுபவனுக்கு துணை காத்த நாயாய்
திருந்தாத தொண்டனாய் அலைகின்றனர்
ஊருக்கே தெரியும் அயோக்கியன் என்று
ஊரெல்லாம் கட்அவுட் வைக்க விழைகின்றனர்

எங்கினும் ஒழுக்கமற்ற தலைவன் நாட்டில்
நாளை வருங்கால பிள்ளைகள் பாவ காட்டில்
காமத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்து - இந்த
கயவர்களின் கையிலே விட்டு விட்டால்

கழுத்தளவு நீரில் தள்ளி விட்டு -பிள்ளைக்கு
கால் காக்க ஷு வாங்கி என்ன பயன் ?

எவன் துரோகி எவன் திருடன் என
குணம் பார்த்து முடிவெடுங்கள் ..
பாவி அவன் என அறிந்தால்
விட்டு விடுங்கள் ..

நல்ல தலைவனை
தேர்ந்தேடுத்து நம் பிள்ளைகளை
வாழ விடுங்கள்

வை . நடராஜன்

இன்றைய தமிழகத்தில் ...



சாலை ஓரம் சாக்கடை இருந்தால்
நாய்களும் ஆடுகளும் கூட தாண்டி போய் விடுகின்றன
ஆனால் ,
தமிழன் போதையில் புரள்கிறான்
சாக்கடை சேற்றை சந்தனமாய் நினைத்து ,

உடல் உறுப்புகளை ஊரே பார்கிறது -
நம் இனத்தின் பெருமை சில மில்லியிடம் தோற்கிறது..

'' புகழோடு வாழ்ந்து வந்த
தமிழ் மகனை _ சாக்கடை
புழுவோடு புரள வைத்த
புண்ணியவான்களே ''

இன்றைய தமிழகத்தில் ...

கோட்டைக்கு குறுக்கு வழி
கோடம்பாக்கம்
கல்லறைக்கு குறுக்கு வழி
கள்ளுக்கடை

வை . நடராஜன்

கடவுள் மறுப்பு




கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட நாத்திகர்கள் இந்து கோயில்களின் நிலங்களையோ, மண்டபங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என இந்து சமய அறநிலையத் துறை, அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் அத்தனை கோயில்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இது ஒரு பெரும் தவறான முன் உதாரணமான செயல், தரம் தாழ்ந்த செயல் என நினைக்கிறேன், கடவுள் மறுப்பவர்கள் கோயில் நிலங்களை பயன்படுத்தக்கூடாது என்பது .. கடவுளை மறுப்பவரை விட கடவுளை அதிகம் காயம் படுத்தி இருக்கும் ...

சரவணபவனில் சாப்பிட வருபவர்கள் முருகன் பக்தர்களாய் தான் இருத்தல் வேண்டுமா ?
இஸ்லாமியர்களை தவிர வேறு யாருக்கும் பெட்ரோல் இல்லை என அரபு சொன்னால் என்ன செய்விர்கள் ? கிறிஸ்தவர்களை தவிர வேறு யாருக்கும் பேஸ்புக் கூகுள் பயன்பட தடை என அமெரிக்க அரசாங்கம் சொன்னால் .. பகுத்தறிவாளர் அண்ணா பெயரில் உள்ளதால் அண்ணா பல்கலைகழகத்தில் கடவுளை கும்பிடும் பிள்ளைகள் படிக்க கூடாது என்று நாளை வேறு ஒரு அரசாங்கம் சொன்னால் என்ன செய்வது ....
நாஸ்திகர்கள் கருப்பு நிறம் அணிவதால் கடவுள் சிலைகளுக்கு வெள்ளை அடித்து விடுவார்களா ?
மனதில் இப்படி எல்லாம் எண்ணம் ஓடுகிறது...

பெரியார் பகுத்தறிவு பெற்றினும் இறுதி வரை "ராமசாமி'' என்ற தன் பெயரை மாற்றிக்கொள்ள வில்லை ...

பூம்புகார் படத்தில் சமண துறவியாக கே பி சுந்தரம்மாள் நடித்தார்கள் .. அவர்கள் பெரும் முருக பக்தர் , அது நாஸ்திகரான கருணாநிதியின் படம்..

கடவுளின் பெயரால் பிரிவினை வேண்டாம், எல்லோரும் இந்நாட்டு உறவுகள் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உள்ளது

- வை . நடராஜன்

ஒரு தலைவர்

ஒரு தலைவர் இளமையில் கல்வி
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை கல்விக்காகவே
வாழ்ந்தார்

ஒரு தலைவர் இளமையில் பகுத்தறிவு
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பகுத்தறிவுக்காகவே
வாழ்ந்தார் ..

ஒரு தலைவர் இளமையில்
பணம் இல்லாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பணதிர்க்காகவே
வாழ்ந்தார்

எல்லோரும் தலைவனாய்
ஆவதுமில்லை - ஆனா
எல்லோரும் நல்லவராய்
இருப்பதில்லை..வரும் போது
நல்லவராய் வந்தவரெல்லாம்
இறக்கும் போது நல்லவராய்
இறப்பதில்லை ..

- வை . நடராஜன்

சிரித்துவிடாதீர்கள்



இதற்க்கெல்லாம் சிரித்துவிடாதீர்கள் !

சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் , திரைக்கு வர இருக்கும் ஒரு தமிழ் படத்தின் விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது . படத்தின் பெயர் " ஆல் இன் ஆல் அழகு ராஜா " . அதில் ஒரு நகைச்சுவை நடிகரும் , கதாநாயகனும் பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சியில் வரும் நகைச்சுவை வசனத்தைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள். மனதில் சிறு கவலையுடன் நான் சென்று விட்டேன் . இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பிரபல திரையரங்கத்திற்கு நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற பொழுது மீண்டும் அதே திரைப்படத்தின் விளம்பரத்தினை திரையிட்டார்கள் . அந்த வசனங்களைக் கேட்டு அன்றும் அரங்கில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தார்கள் ! கைத்தட்டல்கள் விண்ணைக் கிழித்தது ! சக மனிதனின் சிரிப்பைக் கண்டு முதல் முறையாக நான் வருந்தினேன் . காரணம் ! அந்த சிரிப்பு நம் பண்புகளை கொன்ற சிரிப்பு , கலை வியாபாரிகளின் மானங்கெட்ட வார்த்தையை கண்டு நாம் மதிகெட்டு சிரிக்கிறோம் .

திரையரங்கிற்குச் செல்லும் நாம் அனைவரும் இந்த புகையிலை, புகைப்பிடித்தல் ஒழிப்பு விளம்பிரத்தினை பார்த்திருப்போம். வாழவேண்டிய அந்த " முகேஷ் " இனி யாரும் சாகக் கூடாது என்று கண்மூடும் முன் நமக்கு வழிகாட்டுவது போல் இருக்கும்.
அதில் வரும் நாயகன் " மதுமட்டுமில்லாமல் சிகரெட்டும் இருந்தா நல்லா இருக்கும் "" என்று சொல்ல , அந்த நகைச்சுவை நடிகர் - அந்த விளம்பரத்தில் வரும் அந்த முகேஷ் என்ற இளைஞரைப் போல் கரகரவென கிண்டலாய் பேச , யாரது என்று நாயகன் கேட்க , நம்ம முகேஷ் என்று இவர் சொல்ல , யார் நம்ம முகேஷ் அம்பானியா என்று கேட்பார். அதற்கு, இல்லப்பா , நம்ம குட்கா முகேஷ் னு சொல்லுவார் - பின்னர் பொதுநலம் கருதி வெளியுடுவோர் என்ற ஏமாற்று வார்த்தைகளுடன் முடிகிறது அந்த ட்ரைலர்!

இறந்த ஒரு மனிதனை சிரிக்க வைக்க பணயமாக உபயோகிப்பது நாகரீக மனிதனின் வழக்கமோ ? வெறும் வியாபாரத்திற்காக விளம்பரத்துக்காக எதை சொன்னாலும் சிரித்து விடுவார்கள் மக்கள் என நினைக்கும் அந்த கலை வியாபாரிகள் மனித நேயத்தை மறக்கிறார்கள் . ஆனால் அதையும் கூட நகைச்சுவை என நினைத்து வரவேற்கும் நம் இனம் உண்மையில் ' கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியா ???? '
நான் அதில் நடித்தவர்களையோ , இயக்குனரையோ , அந்த நிறுவனத்தையோ குறை கூற விரும்பவில்லை . காரணம் , அவர்கள் வெறும் வியாபாரிகள் ! பணத்திற்காக கலையை எப்படியேனும் விற்பார்கள். நாம் கொஞ்சம் பண்பட்டு தொட வேண்டும் . காய்கறி கடைகளில் வியாபாரி பழைய புதிய காய்கள் அனைத்தையும் சேர்த்துதான் வைத்திருப்பார் . நாம்தான் நல்லது எது ? தீயது எது ? என்று இனம் காண வேண்டும் .

இந்த கொடூர நிகழ்வை அந்த முகேஷ் என்பவரின் பெற்றோர் பார்த்திருந்தால் , அவர்களுக்குள் என்ன கேள்வி எழுந்திருக்கும் !? ஊரெல்லாம் பார்த்து மகிழவா என் மகன் நோயுற்று இறந்தான் !
2011 ஆம் அண்டு உலக கோப்பை இலங்கையில் நடந்த போது அரங்கில் இலங்கை மக்கள் மகிழ்ச்சியாக ஆட்டத்தை ரசித்தார்கள் .. மனதில் வருந்தினேன் தன் சக நாட்டில் பல லட்சம் மனிதர்கள் இறந்தும் இன்னும் பலர் உண்ண உறங்க இடமெல்லா தவிக்கும்போது எப்படி இவர்களால் விளையாட்டை ரசிக்க முடிகிறது ? மனிதம் எங்கே ?

வட நாட்டு ஊடகம் எல்லாம் கூட மனித துயரை கண்டுக்காமல் இருந்ததை நினைத்து வருந்தினேன் ... இன்றோ என் சக தமிழன் நகைசுவை என்ற பெயரில் துயருற்று இறந்த ஒருவனை எவ்வாறு நக்கல் அடித்து பேச முடிகிறது .. அவர்கள் வியாபாரிகள் பணம் போதும் நல்லது கெட்டது பார்க்காதவர்கள் .. அதை ரசிக்கும் நம் மன நிலை என்னவாயுற்று ?
கலை மட்டும் அறிவார்ந்தது அல்ல கலையை ரசிப்பதும் அறிவார்ந்தது ஆகும் .

மன்னர் ராஜ ராஜ சோழன் வெறும் மன்னராக மட்டும் இருந்து இருந்தால் நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிவன் கோயில்களைப் போல் தஞ்சையிலும் ஒரு சிவன் கோயில் இருந்து இருக்கும் . ஆனால் அவரின் கலை ரசிப்பு நாணத்தின் பலன்தான் இன்று உலகமே வியக்கும் அளவிற்கு தஞ்சை பெரியகோயில் அழகியலுடன் இன்று நிமிர்ந்து நிற்கிறது .. நாமும் ரசனையை வளர்ப்போம் . பணத்திற்காக எதை காட்டினாலும் ரசிப்பார்கள் எதை பேசினாலும் சிரிப்பார்கள் என்ற மனித பொறுப்பற்ற கலந்கைர்களை நிரகற்றிப்போம்.இது அந்த படத்தின் எதிர்ப்பு அல்ல . அதை தொடர்ந்து இதை போல் பொறுப்பற்ற தரமற்ற விசயத்தை இன்னும் எல்லாம் சொல்ல வருவார்களோ என்ற பயம் . திரை துறையினரே மாறுங்கள் இந்த இனத்தை மாற்றாதீர்கள் ஒருவர் இறப்பை நகைத்து சொல்லி அதை ரசிக்கும் அளவுக்கு இந்த இனம் தரமற்று போய் விட்டதா ..

நாங்கள் யார் இழவையும் சிரித்து ரசிக்கும் இனம் அல்ல..
இது வரை அந்த பட டிலோரை பார்காதவர்கள் கூட இந்த பதிவை கண்டதும் பார்க்க முயல்வார்கள் .. இது மனித இயல்பு ,, ஆனால் அதில் வரும் வசனங்கள் நகைசுவை என்று ரசிப்பது மனித தன்மையற்ற செயல்.

மனிதர் நோக மனிதர் பார்ப்பது
பாவம் என்றான் பாரதி .. நாமோ
ஒரு நொந்த மனிதரை ஒரு மனிதர்
கிண்டல் செய்கிறார்கள்
அதை ரசிக்கின்றோம்....
நல்லவை வளரட்டும்

- வை . நடராஜன்...

கடவுள் உருவம் என்ன ?





பக்தியில் திளைக்கும் வரை
பற்பல உருவில் இருப்பார்
பசித்தவன் கண்ணுக்கு
உணவின் உருவில் இருப்பார்

படிப்பவன் மனதிலே
நூலின் உருவில் இருப்பார்
பார்வையே இல்லாதவர்க்கு
எந்த உருவில் இருப்பார் ?

காமத்தின் ஆட்சி வந்தால்
காதலின் உருவில் இருப்பார்
கடன் பட்ட கைகளுக்கு
காசின் உருவில் இருப்பார்

உடல் கெட்டு போனவர்களுக்கு
மருத்துவர் உருவில் இருப்பார்
மனம் கெட்ட பித்தர்களுக்கு
எந்த உருவில் இருப்பார் ?

கடும் வெயில் நேரத்திலே
காலனி உருவில் இருப்பார்
கருகிய பயிருக்கு
வான் மழை உருவில் இருப்பார்

இருட்டிலே இருக்கையிலே
ஒளியின் வடிவில் இருப்பார்
இறந்து நாம் செல்கையிலே
எந்த வடிவில் இருப்பார் ?

தடிக்கி நாம் விழுகையிலே
தாங்கும் கையில் இருப்பார்
தண்ணீரில் முழுகும் போது
காற்றின் உருவில் இருப்பார்


மெய் உணர்ந்த ஞானிகளுக்கு
அன்பின் உருவில் இருப்பார்
கை குழந்தை கண்களுக்கு
எந்த உருவில் இருப்பார் ?

- வை . நடராஜன்

உண்ணாவிரதம்

காந்தி உண்ணாவிரதம் இருந்தே பல கோரிக்கையில் வெற்றி பெற்றார் .. பல விஷயங்களை சாதித்தார்.
இதை இன்று இருந்தால் அவரால் சாதித்து இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான் ... உண்ணாவிரதம் இருப்பதை விட இருப்பவர்களை உணர்வுகளை மதிப்பதும் ஒரு மாண்புதான் ...அந்த மாண்பு அன்றைய ஆங்கிலரிடம் இருந்தது . இன்றைய பல ஆட்சியர்களிடம் இல்லை ...

இன்று சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லி உண்ணாவிரதம் இருந்த எவரும் செததில்லை .
எல்லா சாகும்வரை உண்ணாவிரதமும் பாதி வழியில்
முடிந்து விடும் .. இரண்டே காரணம்
ஒன்று அரசின் அடக்குமுறை , இரண்டு அவர்களுக்கு
அவர்கள் எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்து இருக்கும்

இன்றைய உண்ணாவிரதங்கள் வெற்றி பெறா போராகவும் , வேடிக்கை நாடகங்கள் ஆகவும் முடிகின்றன ...

திலீபன் , பொட்டி ஸ்ரீ ராமுலு போன்றவர்களின் உண்மையான உண்ணாவிரதங்கள் இனி இல்லை..

என் செய்ய ......



தங்கத்தின் மதிப்பு உயர உயர
மனித உயிரின் மதிப்பு
குறைந்து கொண்டே வருகிறது

அக்ஷய திரிதியை நகை வாங்கினால்
அதிர்ஷ்டம் என்றார் .. எங்கே அவர்
வாங்கிய நகைகள் வாழ்க்கையை
அழிகின்றன .. எங்கே பதில் ?

தங்கத்தை தோண்டி எடுத்து நாம் -
மனிதனை புதைத்து கொண்டு இருக்கிறோம்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
அறத்தை சொன்னவன் வள்ளுவன் என்று
பெருமை பட்டு கொள்கிறோம்
கை காசுக்காக கழுத்தை அறுக்கும்
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு

பெண்களை காமத்துக்காகவும்
களவுக்காகவும் அழிக்க துவங்கிவிட்டது
சமுதாயம் ...

என் செய்ய ......

பால் ஊட்டும் தாய்மார்களும்
பெரிய பெரிய படிப்புகளை சொல்லி
பணத்தை கற்க சொல்லி தருகிறார்கள்
நல்ல நல்ல புத்தகங்களை காட்டி
பண்பை வளர்க்க சொல்வதில்லை .

- வை . நடராஜன்

பங்கு


சோத்தையும் பங்கு போடும் காக்கைகள்
சொத்துக்காக அடித்து கொள்ளும் சொந்தங்கள்
கூரை வீட்டையும் பகிர்ந்து கொள்ளும் சேவல்கள்
கோடி இருந்தாலும் அடித்து கொள்ளும் ஜென்மங்கள்
கேடு கெட்ட மனிதனுக்கு ஆறறிவை தந்த
எங்கே அந்த தெய்வங்கள் ?

- வை .நடராஜன்

மானம்


DMK


காவி துண்டு ஆஸ்தீகம் பேசும்
கருப்பு துண்டு நாஸ்தீகம் பேசும்
மஞ்சள் துண்டு என்ன பேசும் ?

தீபாவளி இனிப்புக்கும்
அம்மன் கூழுக்கும்
நாஸ்தீகம் பேசும் அந்த நாக்கு
கிறிஸ்மஸ் கேக்
ரமலான் நோம்பு காஞ்சி குடிக்கும் போது மட்டும்
பகுத்தறிவை மறந்து விடுகிறது

- வை .நடராஜன்

பிறமனை நோக்கா ...





வாலிக்கு ராமனை தெரியவில்லை
ராமனுக்கு வாலி குறைவுமில்லை
வாலிக்குள் ராமன் இருந்து இருந்தால்
ராமனுக்கு வில்லில் வேலையில்லை

- வை . நடராஜன்

மன்னித்துவிடு


எழுதும் தமிழில் அழகு
ஏனோ நாவில் அமிலம்
பழகும் போது ரசித்தேன்
பிரிந்தால் ஏனோ பழித்தேன்

அழைக்கும் தூரம் சென்றாள்
அமைதியாய் இருந்து கொன்றாள்
எத்துனை பிழையேன் நான்
எதற்கிந்த பிழையான நா ?

மங்கை மனம் புங்கை மலர்
மன்னிக்க மலராதோ ?
கோவை இதழ் கொஞ்சும் கிளி
கோவம் தான் குறையாதோ ?

குணத்தில் கொஞ்சம்
கோவம் உண்டு
கோவத்தில் கொஞ்சம்
பாவம் உண்டு
பாவத்தில் நல் பங்கும் உண்டு
பதுமையே மன்னிக்க இடமும்
உண்டு

அழுவதிலே தோஷமில்லை
அன்பிலே வேஷமில்லை
மங்கையே பாவம் பிள்ளை
மன்னித்தால் பாவமில்லை

தவறிழைத்த நீதிபதி நீ
தண்டனை பெற்ற நிரபராதி நான்
நாவில் பிழை ஞானம் இழந்தேன்
கோவில் சிலையே கோவம் கடிந்தேன்

மன்னித்துவிடு மானம் போகாது
சூரியன் சுட்டு வானம் சாகாது

- வை . நடராஜன்

உத்தமனே




உத்தமனே போவதேனோ _ என
ஊரே அழுவ வேண்டும் _ உன்
உயர்ந்த வாழ்வை நினைத்து அவர்
உள்ளம் தொழுவ வேண்டும்

உத்தமனாய் இறந்தவரின் உடலை
மண்ணு தின்னும் _ அந்த
உயர்ந்தவரின் புகழை மட்டும்
உலகம் என்றும் எண்ணும்

எதனை நீ பெற்றாலும்
போகும் போது தனியே
எதனை நீ கொடுத்தாயோ _
கூட வரும் துணையே

பதவி பணத்தில் திளைத்த போதும்
பயணம் ஒரு நாள் முடியும்
உதவி செய்த உள்ளத்தைதான்
உலகம் நெஞ்சில் பதியும்

அரசியல் தலைவன் ஆயிரம்
உண்டு.. இங்கே
அன்பு தலைவன் போனாயே
ஆறுதல் எங்கே ..

- வை . நடராஜன்

விபத்து



இரு சக்கர வாகன விபத்து

மாட்டை மோதி கிழே விழுந்து
விட்டேன் ..

வீட்டில் எல்லோரும்
மாட்டின் மீது தான்
தப்பு என்றார்கள்

அப்பா மட்டும்தான் சரியாக கேட்டார்

எந்த மாடு ?

.வை - நடராஜன்

VIP




ஐயிம்பது ருபாய் கொடுதால்-ஆண்டவனை
அருகில் சென்று பார்க்கலாம்
பத்து ருபாய் இருந்தால்
பாதி தூரதில் பார்க்கலாம்
பணம் இல்லாதவர் பார்க்க
படனம் கொஞ்சம் சிரமம்

பணத்தோடு போனால்
நின்று பார்க்கும் இடம்
நிச்சையக்கபடுகிறது ,,
பக்தியோடு போனால்
நாம் எங்கே நின்றாலும்
நம்மை அவர் பார்த்து விடுவார்

VIP என்பவன் கோயிலுக்குதான்
வந்தவர் எல்லோரும் சமம் ஆண்டவனுக்குதான்
ஐயிரை பிடித்து முன்பே போவதினால்
ஆண்டவன் அவசரம் காட்டுவதில்லை
ஓரமாய் நின்று பார்ப்பவன் பக்தியில்
ஓர வஞ்சனை காட்டுவதில்லை

- வை . நடராஜன்

.......அழகு .......






கல்லுக்கு அழகு
ஆண்டவன் தோற்றதில்
புல்லுக்கு அழகு
அரண்மனை தோட்டதில்

வில்லுக்கு அழகு
வீரனின் தோளிலே
சொல்லுக்கு அழகு
புலவரின் நாவிலே

மைல் இறகு அழகு
மாதவன் சிரத்திலே
மன்னவன் அழகு
மக்களின் அறத்திலே

கோவத்தின் அழகு
கடும்கொடுமை காண்கையிலே
கொள்கையின் அழகு
வறியவரை பேணுகையிலே

பருவத்தின் அழகு
காதலை தாண்டயிலே
பணத்தின் அழகு
பசித்தவனையும் தீண்டயில்


இல்லற அழகு
இன்புறும் மஞ்சத்தில்
பெண்ணுக்கு அழகு
பொறுமை கொள்ளும் நெஞ்சத்தில்

சொந்தத்தின் அழகு
கூடி நல் வாழ்க்கையிலே
சொர்கத்தின் அழகு
வீரனாய் வீழ்கையிலே

மலர்களின் அழகு
மங்கையின் கூந்தலில்
மங்கையின் அழகு
மானம்தான் காப்பதில்

அருவிக்கு அழகு
விரைந்து வீழ்தல்
வாழ்கைக்கு அழகு
மறைந்தும் வாழ்தல்

வள்ளுவன் அழகு
தமிழ் தந்த குறளிலே
தமிழுக்கு அழகு நிகர்
தரணியில் ஏதுமில்லை

- வை . நடராஜன்

கண்ணன்



பாற்கடல் திருமாலும்
பார் பார்க்க முடிவெடுத்தான்
ஆயர் குல இடையவனாய்
அவனியிலே உருவெடுத்தான்

வாசுதேவன் குடியிலே
வழியெல்லாம் மழை நினைந்தான்
சேஷன் அவன் குடை பிடிக்க
சேமமாய் இடம்பெயர்ந்தான்

கம்சனவன் இடர் எல்லாம்
கண்ணனவன் விசை உடைத்தான்
கை குழல் தினமெடுத்து
கானத்தில் இசை படைத்தான்

வண்டுகள் பூக்களையும்
மறந்துதான் வந்தன
கறவைகளும் புல் மறந்து
கானத்தில் உறைந்தன

செண்டுகள் மலர்ந்துதான்
செல்லும்வழி படர்ந்தன - கண்ணன்
கண்டு கன்னியர் எல்லாம்
காதலில் உள்கலந்தனர்

கோபாலன் குழல் எடுத்தான்
கோபியரின் மனம் கெடுத்தான்
பூபாளம் தான் இசைத்தான்
புல் பனியா உயிர் குடித்தான்

பார்த்திபன் வில் தளர்ந்து
பாசத்தில் கண் கசிந்தான்
பார்த்தனவன் படைநடுவே
கீதை எனும் இசை மொழிந்தான்

ராதையவள் மயங்கிடவே
ராகத்தில் குழல் எடுத்தான்
கீதை எனும் பாடத்தில்
கீர்த்திக்கு நிழல் கொடுத்தான்

மதுராவில் உயிர் எடுத்தான்
மதயானை உயிர் குடித்தான்
விதுராவின் குடில் புசித்தான்
விளையாட்டாய் தினம் ரசித்தான்

கண்ணனவன் கள்வனென
கள்ளன் அவன் பெயரெடுத்தான்
மன்னனாக அரச்சுனனுக்கு
மாதவனே தேரெடுத்தான்

காம்புதனில் விடம் அறிந்து
கள்ளியவள் உயிர் குடித்தான்
பாம்பு தலை பாதம் பட்டு
மலை பிளந்து குடை பிடித்தான்

சுடர் ஒளியே சுவை பாகே
சுனை நீராய் புத்துடுவாய்
இடர் இங்கு இனிவேண்ட
இடையவனே ஏற்றுடுவாய்

கண்ணனே காவியம்
களிநெஞ்சின் ஓவியம்
கண்ட வாழ்வு கரையும்வரை
கண்ணன்தான் யாவையும்

கண்ணனே ஊன்று கோள்
கனிவுடன் எனை ஏற்றுக்கொள்
மன்னவன் மாதவனை
மனதார போற்றிக்கொள்

- வை . நடராஜன்

ஓம் நாம சிவாய




,, ஓம் நாம சிவாய ,,


விறிசடையும் புலியுடையும்
விண்ணான அம்பலத்தான்
பரி களைந்து நரி பிறந்து
நாடகம்தான் ஆட்டுவித்தான்
செறியுணவும் சிறு உறக்கம்
மணம் மறந்து அனுதினமும்
அரிபெடுத்து ஓடும் ஆற்று
அடிமனலாய் கலந்திடவே

ஊன் நினைத்து உள்ளுருகி
உலகெல்லாம் பொய்யாக
மான் கரமும் மதிமுடியும்
மாதவன் தான் மெய்யாக
யானுணர்ந்த பொருளுமிங்கே
யாதுமில்லை யாருமில்லை
தேன்கலந்த மலர் அணிந்த
ஈசனின்றி பேறுமில்லை

விண்ணோரும் அறியாத
விந்தை தனை விளையாடும்
மண்ணோடு மாலும்வரை
மந்தையாய் அடி தேடி
பண்ணோடு புகழ் இசைந்து
பசி காத்து உயிர் கசிந்து
உன்னோடு உறைவிடமாய்
உமையவனே எற்றுகொள்வாய்

சதை பிண்டம் உடலெடுத்து
சாகும்வரை நெறிமறந்து
எதை எதையோ மனம் நினைத்து
எந்தனைதன் மனம் மறந்து
வதை பட்டு வாடும் மணம்
ஆசையுள் அடரும் வரை
சிதையுட்டு போகம் ஒழி
சிற்றம்பலம் தேடும் முறை

கழல் கொண்டு காலாட
உமையவளும் உடனாட
கருமேகம் இடர்புகுந்து
கதிரவனின் ஒழி படர்ந்து
ஊழ் வினையின் உடன் மறைந்து
உள் ஒளியின் நிலை அடைந்து
தாழ் பணிந்து நிற்குமெனை
தாயே காத்து ஏற்றுக்கொள்வாய்

கல் மிதந்து கரையடந்த
அப்பரின் அருந்தமிழின்
சொல்லுணர்ந்து உள்ளுறைந்து
திருக்கதவும் தான் திறந்து
பல்லுயிரும் எடுத்து வந்து
பரமன் புகழ் பாடி விட்டு
புல் இதழில் பனித்துளியாய்
பரமனிடம் கலந்திடவே

எமையாளும் எம்பெருமான்
எனையேற்று கொண்டிடுவாய்
இமை நாளும் நீர் நினைந்து
உன்னை நினைத்து உயிர் கசிந்து
சுமையான இவ்வாழ்வை
சுவையற்ற இல்வாழ்வை
உமையாண்ட நாதனே
அறுத்தெடுத்து ஏற்றுடவாய்

பாதத்தில் கழலாட
பார்வதிதான் உடனாட
வேதத்தின் மெய்ப்பொருளாம்
வேந்தனை மணம் தேட
பூதத்தின் ஐயுள்ளும்
அணுவுள்ளும் அவனாட
நாதத்தின் இசையுள்ளும்
நாதனின் கழலாட

ஊன் பெற்றேன்
உயிர் பெற்றேன்
உள்நெஞ்சின் ஊன் பெற்றேன்
யான்பெற்ற பிறவி முலும்
ஊன் இடரும் நோய் பெற்றேன்
காதல் ஆசை காமமென
கலி மலத்தில் நாரிற்றேன்
போதுமிந்த பிறவி பிணி
போகுமிடம் ஈசனிடம்
யாதுமின்றி யாருமில்லை
யாசிப்பது ஈசனடி

- வை . நடராஜன்