January 4, 2014

உண்ணாவிரதம்

காந்தி உண்ணாவிரதம் இருந்தே பல கோரிக்கையில் வெற்றி பெற்றார் .. பல விஷயங்களை சாதித்தார்.
இதை இன்று இருந்தால் அவரால் சாதித்து இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான் ... உண்ணாவிரதம் இருப்பதை விட இருப்பவர்களை உணர்வுகளை மதிப்பதும் ஒரு மாண்புதான் ...அந்த மாண்பு அன்றைய ஆங்கிலரிடம் இருந்தது . இன்றைய பல ஆட்சியர்களிடம் இல்லை ...

இன்று சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லி உண்ணாவிரதம் இருந்த எவரும் செததில்லை .
எல்லா சாகும்வரை உண்ணாவிரதமும் பாதி வழியில்
முடிந்து விடும் .. இரண்டே காரணம்
ஒன்று அரசின் அடக்குமுறை , இரண்டு அவர்களுக்கு
அவர்கள் எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்து இருக்கும்

இன்றைய உண்ணாவிரதங்கள் வெற்றி பெறா போராகவும் , வேடிக்கை நாடகங்கள் ஆகவும் முடிகின்றன ...

திலீபன் , பொட்டி ஸ்ரீ ராமுலு போன்றவர்களின் உண்மையான உண்ணாவிரதங்கள் இனி இல்லை..

No comments:

Post a Comment