January 4, 2014

.......அழகு .......






கல்லுக்கு அழகு
ஆண்டவன் தோற்றதில்
புல்லுக்கு அழகு
அரண்மனை தோட்டதில்

வில்லுக்கு அழகு
வீரனின் தோளிலே
சொல்லுக்கு அழகு
புலவரின் நாவிலே

மைல் இறகு அழகு
மாதவன் சிரத்திலே
மன்னவன் அழகு
மக்களின் அறத்திலே

கோவத்தின் அழகு
கடும்கொடுமை காண்கையிலே
கொள்கையின் அழகு
வறியவரை பேணுகையிலே

பருவத்தின் அழகு
காதலை தாண்டயிலே
பணத்தின் அழகு
பசித்தவனையும் தீண்டயில்


இல்லற அழகு
இன்புறும் மஞ்சத்தில்
பெண்ணுக்கு அழகு
பொறுமை கொள்ளும் நெஞ்சத்தில்

சொந்தத்தின் அழகு
கூடி நல் வாழ்க்கையிலே
சொர்கத்தின் அழகு
வீரனாய் வீழ்கையிலே

மலர்களின் அழகு
மங்கையின் கூந்தலில்
மங்கையின் அழகு
மானம்தான் காப்பதில்

அருவிக்கு அழகு
விரைந்து வீழ்தல்
வாழ்கைக்கு அழகு
மறைந்தும் வாழ்தல்

வள்ளுவன் அழகு
தமிழ் தந்த குறளிலே
தமிழுக்கு அழகு நிகர்
தரணியில் ஏதுமில்லை

- வை . நடராஜன்

1 comment: