தங்கத்தின் மதிப்பு உயர உயர
மனித உயிரின் மதிப்பு
குறைந்து கொண்டே வருகிறது
அக்ஷய திரிதியை நகை வாங்கினால்
அதிர்ஷ்டம் என்றார் .. எங்கே அவர்
வாங்கிய நகைகள் வாழ்க்கையை
அழிகின்றன .. எங்கே பதில் ?
தங்கத்தை தோண்டி எடுத்து நாம் -
மனிதனை புதைத்து கொண்டு இருக்கிறோம்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
அறத்தை சொன்னவன் வள்ளுவன் என்று
பெருமை பட்டு கொள்கிறோம்
கை காசுக்காக கழுத்தை அறுக்கும்
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு
பெண்களை காமத்துக்காகவும்
களவுக்காகவும் அழிக்க துவங்கிவிட்டது
சமுதாயம் ...
என் செய்ய ......
பால் ஊட்டும் தாய்மார்களும்
பெரிய பெரிய படிப்புகளை சொல்லி
பணத்தை கற்க சொல்லி தருகிறார்கள்
நல்ல நல்ல புத்தகங்களை காட்டி
பண்பை வளர்க்க சொல்வதில்லை .
- வை . நடராஜன்
No comments:
Post a Comment