தொழுதினும் ஊறுக்கு
தொழுதல் பெருமை
பழித்தினும் நீதிக்கு
பழித்தல் பெருமை
விழுதினும் அருவியாய்
விழுதல் பெருமை
அழுதினும் உனக்காக
அழுதல் பெருமை .
மனமெல்லாம் வலித்தாலும்
மகிழ கண்டேன்
தினதோறும் அழுதாலும்
திவ்யம் கண்டேன்
கணம் நெஞ்சில்
களிவில்லை - இருந்தும்
குணவத்திகாக அழுவதில்
பெருமை கொண்டேன் .
அள்ளிக்கொள்ள நீயுமில்லை
சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை
சாய்ந்து அழ தோளுமில்லை
அழுதாலும் ஈரமில்லை .
வாசலில் கோலமில்லை
வாழ்க்கையில் ஆரமில்லை
வார்த்தையில் சாரமில்லை
வழிதுணை யாருமில்லை .
மனதிலே காயம் கண்டேன்
மழைத்துளியில் கானல் கண்டேன்
மலர்விழி மங்கையவள்
மனம் கொள்ள மோகம் கொண்டேன் .
நீறுக்கு காத்திருக்கும்
வெடித்த நிலத்தை போல
சோறுக்கு காத்திருக்கும்
பசித்த மழலை போல
வானம் பாத்திருக்கும்
அடைபட்ட கிளியை போல
வசந்தமே உனக்காக
காத்திருப்பேன் காதலுடன் .
- வை . நடராஜன்
No comments:
Post a Comment