சாலை ஓரம் சாக்கடை இருந்தால்
நாய்களும் ஆடுகளும் கூட தாண்டி போய் விடுகின்றன
ஆனால் ,
தமிழன் போதையில் புரள்கிறான்
சாக்கடை சேற்றை சந்தனமாய் நினைத்து ,
உடல் உறுப்புகளை ஊரே பார்கிறது -
நம் இனத்தின் பெருமை சில மில்லியிடம் தோற்கிறது..
'' புகழோடு வாழ்ந்து வந்த
தமிழ் மகனை _ சாக்கடை
புழுவோடு புரள வைத்த
புண்ணியவான்களே ''
இன்றைய தமிழகத்தில் ...
கோட்டைக்கு குறுக்கு வழி
கோடம்பாக்கம்
கல்லறைக்கு குறுக்கு வழி
கள்ளுக்கடை
வை . நடராஜன்
No comments:
Post a Comment