உத்தமனே போவதேனோ _ என
ஊரே அழுவ வேண்டும் _ உன்
உயர்ந்த வாழ்வை நினைத்து அவர்
உள்ளம் தொழுவ வேண்டும்
உத்தமனாய் இறந்தவரின் உடலை
மண்ணு தின்னும் _ அந்த
உயர்ந்தவரின் புகழை மட்டும்
உலகம் என்றும் எண்ணும்
எதனை நீ பெற்றாலும்
போகும் போது தனியே
எதனை நீ கொடுத்தாயோ _
கூட வரும் துணையே
பதவி பணத்தில் திளைத்த போதும்
பயணம் ஒரு நாள் முடியும்
உதவி செய்த உள்ளத்தைதான்
உலகம் நெஞ்சில் பதியும்
அரசியல் தலைவன் ஆயிரம்
உண்டு.. இங்கே
அன்பு தலைவன் போனாயே
ஆறுதல் எங்கே ..
- வை . நடராஜன்
No comments:
Post a Comment