January 4, 2014

VIP




ஐயிம்பது ருபாய் கொடுதால்-ஆண்டவனை
அருகில் சென்று பார்க்கலாம்
பத்து ருபாய் இருந்தால்
பாதி தூரதில் பார்க்கலாம்
பணம் இல்லாதவர் பார்க்க
படனம் கொஞ்சம் சிரமம்

பணத்தோடு போனால்
நின்று பார்க்கும் இடம்
நிச்சையக்கபடுகிறது ,,
பக்தியோடு போனால்
நாம் எங்கே நின்றாலும்
நம்மை அவர் பார்த்து விடுவார்

VIP என்பவன் கோயிலுக்குதான்
வந்தவர் எல்லோரும் சமம் ஆண்டவனுக்குதான்
ஐயிரை பிடித்து முன்பே போவதினால்
ஆண்டவன் அவசரம் காட்டுவதில்லை
ஓரமாய் நின்று பார்ப்பவன் பக்தியில்
ஓர வஞ்சனை காட்டுவதில்லை

- வை . நடராஜன்

No comments:

Post a Comment