January 4, 2014

ஒரு தலைவர்

ஒரு தலைவர் இளமையில் கல்வி
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை கல்விக்காகவே
வாழ்ந்தார்

ஒரு தலைவர் இளமையில் பகுத்தறிவு
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பகுத்தறிவுக்காகவே
வாழ்ந்தார் ..

ஒரு தலைவர் இளமையில்
பணம் இல்லாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பணதிர்க்காகவே
வாழ்ந்தார்

எல்லோரும் தலைவனாய்
ஆவதுமில்லை - ஆனா
எல்லோரும் நல்லவராய்
இருப்பதில்லை..வரும் போது
நல்லவராய் வந்தவரெல்லாம்
இறக்கும் போது நல்லவராய்
இறப்பதில்லை ..

- வை . நடராஜன்

No comments:

Post a Comment