January 4, 2014

கடவுள் மறுப்பு




கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட நாத்திகர்கள் இந்து கோயில்களின் நிலங்களையோ, மண்டபங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என இந்து சமய அறநிலையத் துறை, அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் அத்தனை கோயில்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இது ஒரு பெரும் தவறான முன் உதாரணமான செயல், தரம் தாழ்ந்த செயல் என நினைக்கிறேன், கடவுள் மறுப்பவர்கள் கோயில் நிலங்களை பயன்படுத்தக்கூடாது என்பது .. கடவுளை மறுப்பவரை விட கடவுளை அதிகம் காயம் படுத்தி இருக்கும் ...

சரவணபவனில் சாப்பிட வருபவர்கள் முருகன் பக்தர்களாய் தான் இருத்தல் வேண்டுமா ?
இஸ்லாமியர்களை தவிர வேறு யாருக்கும் பெட்ரோல் இல்லை என அரபு சொன்னால் என்ன செய்விர்கள் ? கிறிஸ்தவர்களை தவிர வேறு யாருக்கும் பேஸ்புக் கூகுள் பயன்பட தடை என அமெரிக்க அரசாங்கம் சொன்னால் .. பகுத்தறிவாளர் அண்ணா பெயரில் உள்ளதால் அண்ணா பல்கலைகழகத்தில் கடவுளை கும்பிடும் பிள்ளைகள் படிக்க கூடாது என்று நாளை வேறு ஒரு அரசாங்கம் சொன்னால் என்ன செய்வது ....
நாஸ்திகர்கள் கருப்பு நிறம் அணிவதால் கடவுள் சிலைகளுக்கு வெள்ளை அடித்து விடுவார்களா ?
மனதில் இப்படி எல்லாம் எண்ணம் ஓடுகிறது...

பெரியார் பகுத்தறிவு பெற்றினும் இறுதி வரை "ராமசாமி'' என்ற தன் பெயரை மாற்றிக்கொள்ள வில்லை ...

பூம்புகார் படத்தில் சமண துறவியாக கே பி சுந்தரம்மாள் நடித்தார்கள் .. அவர்கள் பெரும் முருக பக்தர் , அது நாஸ்திகரான கருணாநிதியின் படம்..

கடவுளின் பெயரால் பிரிவினை வேண்டாம், எல்லோரும் இந்நாட்டு உறவுகள் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உள்ளது

- வை . நடராஜன்

No comments:

Post a Comment