December 27, 2012

ஒருவனின் கவிதை அல்ல






ஆன்மிகம் தேட வேண்டாம்
அண்ணதானம் போட வேண்டாம்
மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த
மகேஸ்வரனே உங்களை வணங்குவார் ..

இருப்பதை வைத்து
சிறப்பாய் வாழ்வோம்
குடிப்பதை வைத்து
என்ன வளர்ச்சி ?
வேரிலே விசமென்றால்
ஏது மலர்ச்சி ?

ஊற்றில் விடத்தை கலந்து
ஊருக்கு அனுப்பி என்ன பயன் ?
நாற்றை எல்லாம் கருக விட்டு
வேலியை கட்டி என்ன பயன் ?

மனமும் உடலும் கெடுத்தபின்
மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ?
குளத்தில் நீரை கெடுத்து விட்டு
குடத்தை வாங்கி என்ன பயன் ?

சமுதாயமே சீரழிந்த பின்
சாலையும் ஆலையும் எதற்கு ?

தமிழகத்தில் எல்லா சாலைகளும்
சுடுகாடு நோக்கி போகிறது .
உடலும் மனமும் போதையிலே
நாடே வீணாய் ஆகிறது

மாநிலம் ,
வசதியாக இல்லையெனும்
பரவாயில்லை -தமிழினம்
நிம்மதியாக வாழ
வழி காட்டுங்கள் ..

ஒருவனின் கவிதை அல்ல
ஒரு இனத்தின் அழுகை

No comments:

Post a Comment