December 14, 2012

உனக்காக வாழ வேண்டும்







என் கவிதையின் கருவானவள்
என் காதலின் உருவானவள்
என் வாழ்கையின் பொருளானவள்
என் கண்ணிரில் அருவானவள்

பேரிலே தமிழை கொண்டாள்
பேச்சிலே மழலை கொண்டாள்
தேரிலே மலரை சுட்டி - அவள்
தேவதை பருவம் கொண்டாள்

புகைப்பதும் பிடிக்காது என்பாள்
பொய் சொன்னால் பிடிக்காது என்பாள்
பகைப்பதும் பிடிக்காது என்பாள் - என்னை
பார்த்தாலே பிடிக்காது என்றாள்

கரம் கோர்த்து பேசிய வார்த்தை
சிரம் சாய்ந்து அழுத தருணம்
மரம் நிழலில் மறைவாய் முத்தம் - எல்லாம்
கனவாக கலைந்தது

நெஞ்சம் அழுகின்றது
நினைவை தருகின்றது
கைகள் தொழுகின்றது - கண்கள்
காண விழைகின்றது

உனக்காக வாழ வேண்டும்
உன்னோடு வாழ வேண்டும்
முத்தங்கள் மோகம் வேண்டும்
சண்டைகள் கோவம் வேண்டும்
உன் கண் பார்த்து சாக வேண்டும்
உன் கல்லறையிலும் பாகம் வேண்டும்

- வை .நடராஜன்

Image from Google
thanks for that painter ..

1 comment: