December 14, 2012

தாஜ் மஹாலை ..




என் அக்கா கேட்டார்கள்
உன் கவிதைகளை உன்னவள்
படிப்பாளா ????


சாலையில் கோலம்
போட்டோம் சாலைகள்
ரசித்ததில்லை
காளைமேல் வண்ணம்
அடித்தோம் காளைகள்
ரசித்ததில்லை

சுரங்கத்தை தோண்டும்
உழைப்பாளி வைரத்தை
வாங்கியதில்லை
ஓய்வா இருந்தாலும்
இதயம் ஓய்வாக
தூங்கியது இல்லை


தனக்கான தாஜ் மஹாலை
மும்தாஜும் பார்ததில்லை
உனக்கான என் கவிதைகளை
நீயும் படித்ததில்லை

2 comments: