December 27, 2012

நீ வாழ்வின் பொருளுரை





குண்டாக இருந்தேன்
உணக்காக இளைத்தேன்
மண்டாக இருந்தேன்
உணக்காக படித்தேன்

செண்டான உந்தன்
உயிர் கொள்ள துடித்தேன்
வண்டாக அலைந்து
வழியின்றி களைத்தேன்

கல்லாக இருந்தேன்
கால் பட்டு மலர்ந்தேன்
வில்லாக இருந்தேன்
விழி கண்டு உடைந்தேன்

மொழியின்றி இருந்தேன் -உன்னால்
கவி கோடி படைத்தேன்

எதற்காக பிறந்தேன்- என
நானும் அழுதேன் -
உனை கண்ட பிறகு
மரணத்தை வெறுத்தேன்

புயல் பட்ட படகாய்
பொருளின்றி அலைந்தேன்
நீ வந்த பின்தான்
பொருளோடு வாழ்ந்தேன்

சோம்பலின் பிடியால் உழைப்பை
தேடாமல் இருந்தேன்
உனக்காக வேண்டி
ஓடாக உழைத்தேன்

தனியான எனக்கு
உலகத்தில் யாருமில்லை - நீ
துணையாக பின்பு
உலகமே தேவையில்லை

தாயாக தயவாக
துணையாக வந்தாய்
நோய் தீர்க்கும் மறந்தாக
அணையாக வந்தாய்

பாறையை சிலையாக்கினாய்
பாலையை விளையக்கினாய்
வாழ்கையில் முடமாய் இருந்தேன்
வந்து நீ வளமாகினாய்

உதிர்ந்த தரைதொட்ட எனை
உயிர் கொடுத்து தலை சூடினாய்
வறண்ட என் வாழ்வை செழிக்க
நதியாக தினம் ஓடினாய்

அத்தனையும் தந்தாய் எனக்கு
அணியே நன்றி உனக்கு ..
நான் நானாக
நீ தாயாக ....

No comments:

Post a Comment