December 27, 2012

திராவிட மாயை




திராவிடன் என்ற
சாயம் பூசி _ எங்கள்
தமிழெனும் முகத்தை
இழந்தோம்

திராவிட தெலுங்கனை
கண்டதுண்டா _ நான்
திராவிடன் என்றவன்
சொன்னதுண்டா ?

கேரளவன் சொன்னதை
கேட்டதுண்டா _ கன்னடன்
சொன்னதை கண்டதுண்டா ?

எங்களை மட்டும்
திராவிட மாயையில்
மயக்கிய உங்களுக்கு
மதியும் உண்டா ???

திராவிடம் எனும் மாலையை
கழுத்தில் கொண்டு
பலியாடாய் கிடக்குது தமிழினம்
திராவிடம் சொல்லிக்கொண்டு
திரியும் மூடர்களை
நம்பிக்கொண்டு கிடப்பது அறிவீனம் ......

நம்மினத்தை எவனும் மதிக்கவில்லை
அது ஏன் உங்களுக்கு புரியவில்லை ?
சுற்றும் எவனும் மதிக்கவில்லை - சில
சுயனலவாதிகளுக்கு ஏன் புரியவில்லை ?

திராவிடம் ,
சிலர் ஓட்டுக்கு உதவும்
தமிழ்நாட்டுக்கு உதவாது

திராவிட கூச்சல் என்று மடியும்
தமிழின உணர்வு என்று விடியும் ?

2 comments:

  1. உங்கள் அனைத்து படைப்புகளும் அருமை,
    அதிலும் தமிழ் சமூகம் சார்ந்த கவிதைகள்
    என் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருந்தது.... நன்றி

    ReplyDelete