December 14, 2012

இறைவா ......






பெற்றது யாரென்று
தெரியவில்லை - இனி
எப்படி வாழ்வது
புரியவில்லை

யோசிக்காமல் என்னை
பெற்றுவிட்டாள் - அன்னை
யாசிக்கும் கும்பலிடம்
விற்று விட்டாள்

தெருவிலே கையேந்த
விட்டு விட்டாய் - என்னை
கருவிலே கொல்லாமல் ஏன்
விட்டு விட்டாய் ?

வளர்க்க முடிந்தால் மட்டும்
பிள்ளை பெறுங்கள் - அன்றி
எல்லாவற்றையும் அடக்கி கொண்டு
சும்மா இருங்கள் .

இறைவா ......

பணக்காரராய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் - அன்றி
பசிக்காத வயிறாவது
இருத்தல் வேண்டும்

1 comment:

  1. yeppadi ungallukku mattum ivvalavu arumaiyaga kavithai ezutha varugirathu. nandri

    ReplyDelete