December 27, 2012

அடுப்பு எங்களுக்கு ..அல்வா உங்களுக்கா ?







பங்கு வேண்டும் வெறிபிடித்து
கோரிக்கை கேட்ப்போம் - அங்கே
வெடித்து எதினும் நடந்து விட்டால்
வேடிக்கை பார்ப்போம்

மின்சாரம் இல்லாமல் வேதனையாய்
உள்ளது - எந்த
சோதனைகளையும் தாங்கதான்
தமிழகம் உள்ளதே


அழிவை கூட தாங்கி கொள்ளும்
எங்களினம் - வெறும்
கழிவை கூட ஏற்றுகொள்ளா
சுயநலம்

தமிழினமே ,

உணவின்றி குன்ற குன்ற
உயிர் வாழ வழியில்லை
உணர்வின்றி போனால்
உயிர் வாழ்ந்தும் பயனில்லை

மயிருக்கும் மரியாதை
உடம்போடு இருந்தால்தான்
மனிதனுக்கு மரியாதை
உணர்வோடு வாழ்ந்தால்தான்

அடுப்பு சட்டி எங்கள் மீது
அல்வா மட்டும் அடுத்தவனுக்கா ?
பாடு படும் எங்கள் தியாகம்
பங்கு மட்டும் கெடுதவனுக்கா ?

ஒத்த இந்தியனாக நாம்
வாழவேண்டும் - ஆனால்
மத்த இந்தியனுக்காக நாங்கள்
ஏன் சாகவேண்டும் ????

1 comment:

  1. #உணவின்றி குன்ற குன்ற
    உயிர் வாழ வழியில்லை
    உணர்வின்றி போனால்
    உயிர் வாழ்ந்தும் பயனில்லை

    மயிருக்கும் மரியாதை
    உடம்போடு இருந்தால்தான்
    மனிதனுக்கு மரியாதை
    உணர்வோடு வாழ்ந்தால்தான்#

    I love India nu நான் சொல்லுவதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சுங்க!

    ReplyDelete