December 27, 2012

ஏமாற்றி வாழ்வதை விட



ஏமாற்றி வாழ்வதை விட
ஏழையாய் வாழலாம்
பாவ வழியை விட
பசியிலே சாகலாம்

உடலும் உயிரும்
பிரியும் வரை
பிழைத்து கொள்வேன் - தினம்
ஒரு வேளை உணவு என்பினும்
உழைத்து உண்பேன்

கடமை எனக்கு
கஞ்சி உற்றும் அதுபோதும் - மற்றவர்
உடமை கவர்ந்து
உண்ணமாட்டேன் ஒருபோதும்

2 comments:

  1. யோவ் மனுஷநாயா நீ,

    இவ்வளவு எளிமையா சொல்ற,
    இவ்வளவு பயங்கரமான விசயமா இருந்தாலும்!!!!

    ReplyDelete
  2. புகைப்படம், கவிதை இரண்டுமே மனதை நெகிழச்செய்கிறது!
    வாழ்த்துக்கள்! இதுபோல நிறைய எழுதுங்க!

    ReplyDelete