December 14, 2012

அன்பான தமிழர்களே






காவிரி தீர்க்க முடியாத
பிரச்சனை அல்ல
தீர்க்க கூடாத பிரச்சனை

பிரச்சனை தீர்ந்து விட்டால்
நீங்கள் விவசாயம் பண்ணலாம் - ஆனால்
நாங்கள் அரசியல்
பண்ண முடியாது ..

நீங்கள் வாட வேண்டும்
நாங்கள் வாழ வேண்டும் - ஆனால்
மறக்காமல் எங்களுக்கு
மின்சாரம் வேண்டும்

தண்ணீர் தரமாட்டோம்
அது எங்கள் மாநில சொத்து
மின்சாரம் தாருங்கள்
அது நம் நாட்டு சொத்து .

எங்கள் அணையில் இருப்பது
வெறும் தண்ணீர் அல்ல
உங்கள் பாவம் - பரவாயில்லை

ஆடு வெட்டுபவனும்
அரசியல் பண்ணுபவனும்
பாவம் புண்ணியம் பார்த்தால்
வாழ இயலாது

இன்னும் ஆயிரம் ஆண்டானாலும்
எங்களை வீழ்த்த முடியாது ..
எங்கள் மாநிலத்தில் கன்னடர்கள்
மட்டும் வாழ்கிறார்கள் - ஆனால்

உங்கள் மாநிலத்தில் ....

தலித் , வன்னியர்
பிராமணர் , தேவர்
அ தி மு க , தி மு க
ஆளும் கட்சி ,எதிர் கட்சி
இஸ்லாம் ,ஹிந்து
எல்லோரும் இருகிறீர்கள் - ஆனால்
ஒன்றுப்பட்ட தமிழர்களை தவிர .


நீங்கள் சேர போவதில்லை
நாங்கள் மாற போவதில்லை
மின்சாரத்தை நிறுத்தி விடாதிர் - ஏனின்
நாம் இந்தியார்கள் மறந்து விடாதீர்

நாங்கள் கன்னடர்கள்
திராவிடர்கள் என கேள்விப்பட்டோம்
நீங்கள் தமிழர்கள்
திராவிடர்கள் என ஏமாற்றபட்டீர்

நாங்கள் கன்னடர்களாக வாழ்கிறோம்
நீங்கள் தமிழர்களாக வாழுங்கள்

- கன்னட அரசியல் அன்பர்கள் ####

3 comments:

  1. Replies
    1. Engakittathan tasmacum, manadamailaduvum, kaneer sintha vaikkum seriulum, cinimavum irukkumvarai eppadi unara mudium...?

      Delete
  2. tamizanin unmai nilaiyai thelivaga kurippittu irukeergal. ungal pathivugal anaitthum samoogathai appadiye prathi palikkarathu.thodarattum ungal pani

    ReplyDelete