December 14, 2012

பூங்கா நகர் நிலையம்







அடுக்கு மல்லி தலை சூடி நீ
அலுவகத்துக்கு செல்லும் போதும்
அந்த
அழுக்கு புகை வண்டி கூட
அழகு தங்க ரதமானது

நீ தண்டவாளத்தை
கடந்த போது
தண்டவாள கருங்கற்கள்
தாமரை பூவாக்க மலர்ந்தன


உன்னை சுமந்து
செல்லும் புகைவண்டிக்கு
ஒவ்வொரு பயணமும்
புனித யாத்திரைதான்

பயணிக்கும் போது
பார்க்கும் பொருள் எல்லாம்
பின்னோக்கி போகும் - நீ
பயணிக்கும் போதுதான்
உனை பார்க்க எல்லாம்
முன்னோக்கி வந்தன

உன்னை கண்டால்
மோகத்தில் தண்டவாளமே
தடம் மாறும்
உன்னோடு பயணித்தால்
கொடைக்கானல் இடமாறும்

உன்னோடு பயணித்தால்
காற்றுக்கும் குளிறடிக்கும் - நீ
ஒரு நாள் விடுபெடுத்தால்
புகை வண்டியும் துடிதுடிக்கும் ...

1 comment: