November 21, 2012

விவாகரத்து





விதிபயனோ
வினைபயனோ
விண் கோள்களின்
சதி பயனோ

கோடி ஆசையில்
துவங்கிய வாழ்க்கை
கோர்டில் போய்தான்
முடிகின்றன ..

மலர்ந்த பூவை முகர்ந்து விட்டால்
சேற்றில் கிடக்கும் ஆரணம்
புரிந்து கொள்ள மறுபதே
பிரிந்து செல்ல காரணம்

நவக்கிரக தோசமெல்லாம்
நலிந்த மூட காரணம்
நலன்பு உயர் தியாகம்
களிந்த வாழ்வின் ஆரணம்

தொட்டு மகிழ்ந்த துணைக்காக
விட்டு கொடுப்பது தோல்வி அல்ல
கர்வம் கொண்டு எரித்து கொள்ள
வாழ்க்கை ஒன்னும் வேள்வவி அல்ல

தர்க்கம் கர்வம்
வாழ்க்கையிலே கொண்டு
தனிமையில் தான்
மடியனுமா ?

நாள் பார்த்து
நல் நாழிகை பார்த்து
நல்லோர்கள் வாழ்த்துகையில்
கைகோர்ந்த இதயம்
கசந்து பிரிந்து
வெதும்பணுமா??

கர்வம் கோவம்
சந்தேகம் சச்சரவு
ஆயிரம் சொன்னாலும் -அடிப்படை
வாழ தெரியவில்லை
யாரேனும் ஒருவருக்கு
அல்லது இருவருக்கும்

வாழ்க்கை வழக்காகிறது
சட்டம் வழி காட்டுகிறது
வாழ இயலவில்லை என
வாழ தெரியாதவர்கள்
பொய்யுரைத்து
வழக்கை நடத்தி
வாழ்க்கையை கெடுகின்றன ..

1 comment: