November 4, 2012

என் மங்கை :





இதழ் சொல்லும் மங்கை
இதயத்தில் மங்கை
இரவெல்லாம் தூங்காத
இரு விழியில் கங்கை

உணை காணா நேரம்
விழிகின்ற கண்ணீர்
உணை காண வேண்டும்
தொழுகின்ற கைகள்

காணாத நெஞ்சம்
கண்ணீரில் நிறைந்து
உனான உயிரும்
ஓடாமல் உறைந்து
என்வான வெளியில்
வெளிச்சங்கள் குறைந்து
எந்நாளும் இருளில்
என் வாழ்க்கை மறைந்து

உணை காண வேண்டும்
தினம் தோறும் எண்ணம்
உன்னை வேண்டி தானே
உயிரோடு இன்னும்

உன் தோளில் சாய்ந்து
நான் அழுவ வேண்டும்
கண்ணீரை துடைத்து நீ
தழுவ வேண்டும்


செந்தாழ செவந்தி
செந்துர பூவே
செவ்வான இதழ் கண்ட
அணியான தீவே
உணை காணா நேரம்
அனல் மேல் தவித்தேன்
இனை கண்ட நெஞ்சம்
கணை கண்ணில் துடித்தேன்

உன் நெஞ்சம் எனை வெறுத்தால்
ரத்தத்தில் கொட்டும்
உன் மஞ்சம் உன் நெஞ்சம்
எனக்காக மட்டும்

என் சொல்லாடும் கவிக்கு
தாயாக இருக்காய் - உன்
தள்ளாடும் காலத்திலும்
சேயாக நினைவேன்

மழை வந்த பின்பு
மண்ணெல்லாம் ஈரம்
மங்காத உன்னை
காணாத நேரம்
தூங்காத நானும்
துடிக்கின்ற மீனாய்
வலி தவறி விழி கசியும்
விணான கேனாய்

உன்னை உன்னல் சமயம்
எனை வலிக்கும் இன்னல்
இவன் வேண்டும் வரமே
இவன் கண்ட அறமே

வருவாய் என் வளியே வாழ்வோம்
ஒன்றாய் - வாழ்வில் நாம்
என்றும் களிவோம்
நன்றாய்

- வை . நடராஜன்

Photo courtesy : Google

No comments:

Post a Comment