November 27, 2012

திருச்சிற்றம்பலம்






கூறிய வேலில் நெஞ்சை குத்திலும்
சீரிய பாம்பின் நஞ்சை அருந்திலும்
சாவின் பிடியில் மாட்டிகொண்டிலும்-என்
நாவில் வந்திடும் நமசிவாயமே

அஞ்சி ஓடிய மக்களை காக்க
நஞ்சு உண்ட என் நாத வாழ்க!
பஞ்சு போன்ற உன் மென்மையான
பிஞ்சி உள்ளம் என்றும் வாழ்க!!

உன்னை மறவேனோ உயர் நலம் அடைவேனோ
உன்னை மறந்தினும் உயிருடன் வாழ்வேனோ
கண்ணை இழந்தினும் காற்றை இழந்தினும்
என்னை படைத்த உன்னை மறப்பேனோ

பித்தனே பெருமானே என்றழைத்த சுந்தரருக்கு
அத்தனை அருள் தந்து அவர் பாவால் அகமகிழ்ந்து
இத்தனை காலமும் இருள் இல்லா உன் முகத்தை காண
எத்தனை காலம் நான் ஏக்கத்தில் தவிப்பேன் நமசிவயாவே ...

- வை . நடராஜன்

No comments:

Post a Comment