October 17, 2012

புல் திண்ற புலி





ஒரு அடர்ந்த காடு ,  அன்று அழகிய காலை பனியில் நினைந்த புல்களை
அந்த புலி ரசித்து தின்று கொண்டு இருந்தது , அப்பொழுது அங்கே வந்த மற்றொரு புலி அதை
பார்த்து பெரும் அதிர்ச்சியும் கோவமும் அடைந்து அந்த புலியிடம் சென்று , ''அட பாவி என்ன செய்கிறாய் ? !!!
நம் இனத்தின் மானத்தையே வாங்கி விட்டாயே ...
மானிடர்கள் நம் குணத்தை வைத்து பெருமையாக பழமொழி கூட சொல்லுவார்கள் .
நீயோ இப்படி செய்கிறாய் .. இதை யாரேனும் பார்த்தல் நம் இனத்துக்கு பெரும்
அவமானம் .இதை பொறுமையாக கேட்டுகொண்டு இருந்த அந்த புலி ''
நண்பா என சொல்லிக்கொண்டு எழுந்து நின்றது அதின் முன்னங்கால் வலது பாதம் முற்றிலும் சிதைந்து இருந்தது .
என் பாதங்களை பார் ஒரு வேட்டையின் போது விபத்தில் இழந்து விட்டேன் .
சிலவாரங்களாக உணவு கிடைக்காமல் நடக்க இயலாமல் பெரும் துன்பத்தில்
இருந்தேன் . பசியின் கொடுமையில் வேட்டையாட முடியாத நிலையில் இருந்த சமயத்தில்
ஒரு துறவி என்னை பார்த்தார் .என் நிலையில் இறக்க பட்ட அவர் நான் புல்
இலைதழைகளை சாப்பிடும் குணத்தை தருகிறேன் நீ வருந்தாமல் இங்கேயே வாழு என்றார் .

நான் சொன்னேன் '' சுவாமி என்ன இது  ? என்னை போய் புல் உண்ண சொல்கிறிர்கள் ,
இது இழுக்கு அல்லவா ? அவர் சொன்னார் '' உணவில் இழுக்கு என்ன ? எல்லாம்
கிடைக்கும் என்பதால் தானே .. சைவம், அசைவம், பழையது, தாழ்ந்தது, என்றெல்லாம்
பாகு பாடு .. ஒரே பசிக்கு ஒரே உணவு என்ற நிலை அமைந்தால் கவுரவம் பார்த்து மடிந்து விடுவார்களா.. ?

தன்மானம் வேறு தலைகனம் வேறு .உங்களுக்கு புல் உண்ணும் வகையில் பல் இல்லை . அப்படியே உண்டாலும்
புல்லின் சக்தியால் உங்களால் வாழ இயலாது . மற்ற படி அதில் அவமானம் இல்லை
அகவே இந்த மலை அடிவாரத்தில் வாழும் எல்லா புலிகளும் புல் உண்டு வாழ
நான் வரம் தருகிறேன் '' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் .
இதை கேட்ட இந்த புலியும் மிகவும் மகிழ்ச்சியில் இனி நானும்
வேட்டையாடி உடலை வருத்த போவதில்லை .என இரண்டும்
பல காலங்களாக அங்கேயே வாழ்ந்தன .இவைகளின் அகோர பசியினால் பெரும்பாலான
புல்களை புலிகள்மட்டும் திண்ண . அங்கே வாழ்ந்த ஒரு மான்கள் கூட்டம் மிகவும் கலக்கம் அடைந்தன ,
தன இனதிற்கு உனக்கு கிடைக்காமல் போக புலிகளை எதிர்க்கவும் சக்தி
இன்றி கவலையில் வாழ்ந்தன .அப்பொழுது அங்கே வந்த ஒரு மந்திரவாதி இவைகளில்
கவலைகளை அறிந்து  ''இனி அந்த புலிகளுக்கு புல் தின்னும் ஆற்றலும் மறையட்டும்
என சொல்லி சென்று விட்டார்'' .பின் அந்த காலிழந்த புலி வேட்டையாட முடியாமல்
புல்லும் செறிகாமல் பசியில் சில நாளில் மாண்டு போனது .


கதையின் கரு :

இந்த  சமுதாயம் இந்த  புலி , மந்திரவாதி என இருவரையும் கொண்டதாகும் .
உண்மையில் இயலாத இருந்த புலியை கண்டு சோம்பேறி ஆனா புலியை போன்ற மனிதர்களும் ,
சோம்பேறித்தனம் இயலாமைக்கும் வித்யாசம் பார்க்க தெரியாத மந்திரவாதி போல
சில மனிதர்கள் உணவு பதிலாக '' உழைத்து உன் '' என்ற வீண் உபதேசம்
பண்ணியும் காலம் கழிக்க .
இறுதியில் மடிவது என்னவோ அடி பட்ட புலி போல இயலாதவர்களே ..


- வை . நடராஜன் .

No comments:

Post a Comment