October 9, 2012

அன்றொரு நாள் , நானும் !! நீயும் !!!




தனிமையில் நாமிருந்தோம்
தழுவத்தான் நீ இருந்தாய்
தாழிட்ட வீட்டினிலே
தாகத்தில் நாமிருந்தோம்

விளக்கு தான் அணைந்து விட
விதரதாபம் பிணைந்து வர
அருகினிலே நெருங்க நெருங்க
ஆசைகளோ பெருகி வர

அரை அடி தூரத்தில்
அச்சம் தான் அணை போட
வாய்ப்புதனை வீணாக்கி
வந்த வழி திரும்பிவிட்டேன்

இல்லம் போய் சேர்ந்தவுடன்
செல்லமாய் நீ சொன்னாய் .....

'' சுவர் தாண்டி வீடு வந்த
 திருட்டு பூனையே
 சுவையான பால் இருந்தும்
 பயந்து போனியே .. ''

நாணத்துடன் நான் சொன்னேன் ,

'' நீ வயதுக்கு வந்த வீணையடி - நானோ
வாசிக்க தெரியாத கேனையடி ...

No comments:

Post a Comment