October 28, 2012

எங்க ஊரு நாட்டாமை குடும்பம்






ஒரு நாட்டின் நம்பிக்''கை''யான குடும்பம் #

அண்ணன் ஆள கெடுத்தான்
தம்பி தாலிய அறுத்தான்
ஒண்ணா உக்காந்து
உல வச்சி ஊர கெடுத்தான்

பிச்சகாரன் தட்ட புடிங்கி
எச்ச சோறு தின்ன
சித்தபனும் சண்டை போடான்
சித்தமாலும் பங்கு கேட்டா


உள்ளூர் கோழிய
உல வச்சி திருடி திண்ணு
வெளியூரு மருமகள்
வீங்கி நல்லா பெருத்துபுடா

மாடு மேச்ச மருமகனுக்கு
மாடி வீடு தங்க தேரு
கோமணம் கட்டி சுத்தின மாகான்
கோட்டு சூட்டுல அலையுது பாரு

அடுத்த வீட்டு ஆட்டை திருடி
அலையறா அக்காகாரி
தவிச்ச விட்டில போய்
தண்ணிய வாங்கி தறுதலையா
சுத்தறான் தம்பிகாரன்

செத்து போன தாத்தாவுக்கு
சொத்து எண்ணம் பக்கமே இல்ல
பெத்து போட்டா புள்ளைங்களுக்கு
சொத்த திருட வெக்கமே இல்ல

# இது வெறும் கற்பனையே . எந்த தனி மனிதனையோ . எந்த அரசியல்
கட்சியோ குறிப்பிடவில்லை .

1 comment: