October 2, 2012

மரம் வளர்வதே .. நாம் வாழத்தான்



பணம் காய்க்கும்
மரம் இங்கு ஏதுமில்லை _ ஆகவே
அதையெல்லாம் வேரறுத்து
பணம் பெற்றோம்.

பணம் காசு
மணி வைரம் என
அலைந்தோம் _ நாளை
பசி வந்து உணவின்றி
நாம் அழிவோம்.

ஆறறிவு வளர்ச்சி தான்
நிலவை தொட்டோம் _ அது
அளவுற்கு மீறி போய்தான்
நிலத்தை கெடுத்தோம்.

நீர் காற்று உணவின்றி
காலம் வரும் _ அன்று
நாம் பண்ண பாவமெல்லாம்
கண்ணில் வரும் .

- வை . நடராஜன்

No comments:

Post a Comment