October 16, 2012

கருப்பு சட்டை கறையாகி விட்டது




போலி மதவாதிகள்
எல்லா மதங்களிலும் உள்ளனர் - ஆனால்
போலி நாத்திகவாதிகள் இந்து
மதத்தை மட்டுமே பேசுவார்கள்

செவிகள் குறை என்றால்
இசையில் பிழை இல்லை
செய்தவன் பாவத்திற்கு - எந்த
இறைவனும் பொறுப்பில்லை

பகுத்தறிவு கடவுளை மறுக்கவே
மனிதனை இழிவு படுத்த அல்ல

அன்று தாழ்த்தப்பட்டோர்
நிலத்திலே ஆரியர்கள் களையாகி
வளச்சியை கெடுத்தனர்

பெரியார் .. களையெடுக்க சொன்னார் ,
ஆனால் இன்று களை எடுப்பதே
கலையாக்கி விட்டனர்
விவசாயம் பண்ணாமல்

அவர் மீண்டும் வந்தால் ..
கருப்பு சட்டை போலிகளை கண்டு
காவி சட்டைகளை கூட மன்னித்துவிடுவார் .

No comments:

Post a Comment