October 8, 2012

அறிவற்ற தொண்டர்களும் !! அற்ப தலைவர்களும் !




காட்டுத்தேன் கசக்குமாம் தலைவர் சொன்னார்
கருந்தேள் கடிக்காதாம் தலைவர் சொன்னார்
பாட்டிசைக்கும் பன்றி இருக்காம் தலைவர் சொன்னார்
மாட்டுமடியில் மாங்காய் காய்க்கும்  தலைவர் சொன்னார்

இவை அனைத்தும் கண் பொத்தி கேட்குகொண்டோம் __எங்கள்
இனத்தலைவன் சொல்லியதால் ஏற்றுகொண்டோம்
தண்ணிரில் கலந்த பால் பிரியாது - என்
தலைவனுக்கு பொய் சொல்ல தெரியாது .

தலைவன் தலைமயிர் இழந்தவுடன் _ அவர்
தலைமுறையின் வால் பிடிப்போம்
விலையற்ற அடிமைபோல
விடியும் வரை கால் பிடிப்போம்

அறிவை வளர்க மறந்துவிட்டோம்
அடிமையாய் வாழ பிறந்துவிட்டோம்
அழகாக பேசுவார் உத்தமனாய்
அதை நம்பிதானே நாங்கள் கெட்டோம்

No comments:

Post a Comment