October 2, 2012

நேசியுங்கள் .. யாசிகாதீர்கள்





விரும்பினால் விருப்பம்
கேளுங்கள்
விலகினால் பிச்சை

கேட்காதீர்கள்

ஆயிரம் தான்
அழகு இருப்பினும்
ஆண்மையை அடகு
வைக்காதீர்

மரியாதையில் தொடங்கும்
காதல்
காமத்தில் முடியும்
மரியாதை அற்ற வாழ்க்கை
என்னத்தை கொடுக்கும் ?

நேசித்து வருவதன்றோ
காதல்
அதை யாசித்து கெஞ்சுவதில்
என்ன வாழ்க்கை ?


அன்பற்ற நெஞ்சிற்க்காக
நோகாதீர்
ஆசையினால் அடிபணிந்து
போகாதீர்


- வை . நடராஜன்

No comments:

Post a Comment