October 22, 2012

ஒரு முட்டாள்





மரத்தை வெட்டி
மழைக்கு ஏங்கினான்

மனையை விற்று
மாட்டை வாங்கினான்

பாலுக்காக மாட்டை
விற்றான்

பாம்பின் சிலைக்கு
படையல் வைத்தான்

நேரில் வந்ததும்
அடித்தே கொன்றான்

காகிதம் வாங்க
கையை இழந்தான்

கழுதையை ஓட்ட
காகிதம் எறிந்தான்

கப்பலை கவிழ்க்க
கல்லை எடுத்தான்

கட்டிலை வாங்க
தூக்கத்தை தொலைத்தான்

காதலுக்காக
தற்கொலை செய்தான் .


- வை . நடராஜன்

No comments:

Post a Comment