October 5, 2012

என்று தணியும் ! என்று விடியும் ?





படிக்காத திருடன்
பணத்தை கடத்துகிறான்
படிச்ச திருடன்
பள்ளிகூடம் நடத்துகிறான்.

அவன் கத்தியை வைத்து
மிரட்டுகிறான் பயந்தோம்
இவன் கல்வியை வைத்து
மிரட்டுகிறான் பணிந்தோம்
சுடுநீரில் புழுவாக நெளிந்தோம்
கேட்க கேட்க கொடுத்தே அழிந்தோம் .

கல்வியிலும் கலப்படம் நீதி இல்லை _ அந்த
கயவர்களை தட்டிகேட்க நாதி இல்லை
மாற்ற முடியும் என்பது வீண் பேச்சி
மாற வேண்டியது அரசின் மனசாட்சி.

என்று மடியும் கல்வியின் ஊனம்
என்று விடியும் பிள்ளைகளின் வானம் ?

- written & photo Designed
by
வை . நடராஜன்

No comments:

Post a Comment