October 2, 2012

அலுவலக அரசியல்வாதிகள்






உயர்ந்த பதவியில்
இருப்பவர் எல்லாம்
தெரிந்த ஞானி அல்ல

உயர பறக்கும்
குப்பைக்கு தான்
சிறகு தேவை இல்லை

கழுகை போல
காயிதமும் மேலே
பறக்கும் நன்று
காற்று நின்று
விட்டால் உண்மை
புரியும் அன்று .

அதிகாரம் இருப்பதினால்
ஆண்டவனும் இல்லை
அடியாட்கள் வேலை செய்ய
அலுவலகம் தேவை அல்ல .

மழையில் நனைந்த
ஆடையில் தான்
அழுத்தம் அதிகம் இருக்கும்
மனதில் கர்வம்
வந்து விடின் _ அழிவு
அன்று பிறக்கும்

உன் கிழே பணிபுரிவோர்
ஏளனமும் அல்ல _ அவர்
ஏறி வர திறமை உண்டு
வாய்ப்பு வரவில்லை

அடுத்தவரின் கால்
பிடித்தால் அடிமை போல
உழைப்பாய்_ நீங்கள்
அறிவை மட்டும்
நம்பிருந்தால் எங்கேயும்
பிழைப்பாய்

அடுத்தவரின் குடி கெடுத்து
வாழவதெல்லாம் வாழ்வா ? நீ
அடித்த பந்து போல் திரும்பும்
அன்று நீ வீழ்வாய் !

மேலே வளர வேண்டுமெனில்
அறிவை வளர்த்து கொள்க _ நீங்கள்
மேலே உயர்ந்து வளர்ந்து விட்டால்
அன்பை வளர்த்து கொள்க !

- வை . நடராஜன்

No comments:

Post a Comment