October 28, 2012

ஏன் இந்த நாடகம்







பருவ மழைக்கு காத்திருந்தான்
விவசாயி - நீ
பருவம் வந்த முதல் காத்திருக்கேன்
இந்த படுபாவி

ஜன்னல் ஓரம் நின்று
தினம் படிக்கிறாய் - எனை
பார்க்காதவள் போல்
ஏனடி நடிக்கிறாய் ?

வேண்டாம் என்றால்
வேண்டிய காதலை நிறுத்து கொள்வேன்
நீ வேண்டுமென்றே இப்படி
செய்தால் , நான் என்ன செய்வேன் ?

பார்க்கும் போது நடிக்கிறாய்
பார்கவில்லைஎனில் துடிக்கிறாய்
பார்க்காமல் நான் கடந்து விட்டால் - கோவத்தில்
உன் தம்பியை ஏனடி அடிக்கிறாய் ?

நான் விரும்பி பார்த்தல்
நீ பூமியை பார்ப்பாய் - நான்
திரும்பி விட்டால்
என்னை பார்ப்பாய்

காதலுக்கு கண்தான்
ஊடகம்
எத்தனை நாள் இந்த
நாடகம் ?

No comments:

Post a Comment