October 13, 2012

பேய் அரசாண்டால்




மகளுக்கு அணிய
தங்கம் வேண்டி
மனையாளை விற்றுவிட்டனர்
முன்னேற வழிவேண்டி
முதலைகளை உள்ளே விட்டனர்

உள்நாட்டு வணிகனை
கல்லறையில் புதைத்து
வெளிநாட்டு பொருகளை
கொண்டு வந்தனர்

நாட்டை உயர்த்துமாம்
சொல்லி விட்டார் _ ஆயின்
எந்த நாடு என்பதை
மறந்து விட்டார் ..

வால்மார்ட் பொருள் எல்லாம்
வகை வகையாய் போகுதையா _ இங்கே
கடை வைத்துருந்த உடல் எல்லாம்
கட்டையிலே வேகுதையா .

மாட்டுக்கு புல் வேண்டி
மடியை நீர் விற்றுவிட்டால் ...
வீட்டுக்கு பால் வேண்டி
எங்கே போய் பிச்சை கேட்பீர் ?




கேலிசித்திரம் - நன்றி : திரு .பாலா

No comments:

Post a Comment