July 19, 2012

உதவுங்கள்




அவர்களை

இல்லாதவர்கள் என நினைத்தால்
கர்வம் வரும் _ வாழ
இயலாதவர்கள் என
நினையுங்கள் கருணை
வரும்

கோயில் குருக்கள் கையிலும் தட்டுண்டு
கோயில் தெருக்கள் கையிலும் தட்டுண்டு
அதை தட்சணை  என பேசுவார் _ இதை
பிச்சை என ஏசுவார்

தேவனுக்கு பசிக்காது  தெரிந்து கொள்க _ அவன்
தேவை எல்லாம் தெருவில் தான் புரிந்து கொள்க
படைத்தவன் மேல் பால் ஊற்றல்
பக்தியின் முதல் நிலை _ இந்த
பசித்தவனின்  பசியாற்றல் ஞானத்தின்
கடை நிலை

படைக்காமல் இருப்பதினால் பாவமில்லை _ இறையை
படாமல் போனாலும் தோஷமில்லை
வாடாத மலர் சூடவும் தேவைஇல்லை  _ அந்த
வரியோர்கள் வாழ்த்துக்கு நிகருமில்லை
ஈகைக்கு நிகரான யோகமில்லை _ இட்ட
தர்மத்தின் நிகரான யாகமில்லை

நாவுக்கு மெய்யழகு
நகத்துக்கு மையழகு
பிறையாக இருந்தாலும்
கருவானில் நிலவழகு
குறைவாக இருந்தாலும்
தர்மம் தான் கையழகு

அதர்மத்துக்கு வளையாமல்
பிளந்து எடுங்கள் _ ஆனால்
தர்மத்தை மட்டும் கையில்
வளைந்து கொடுங்கள்

பிச்சையாய் போட்டால்
அவர் வயிறு  நிறையும் _ அதை
தர்மமாய் கொடுங்கள்
மனதும் நிறையும்

உண்டியலின் காணிக்கை
கோயிலை சேரும்_ நீ
உணவளித்த புண்ணியம்
கடவுளை சேரும்

ஒரு ருபாய் என்றாலும்

எரிகின்ற கற்பூரத்தை விடுங்கள் _ அங்கே
ஏங்குகின்ற கையிலே கொடுங்கள்








July 16, 2012

முதியோர் இல்லம்






மகனே ..


அலங்கார மீன்தொட்டி இருக்கின்ற
உன் வீட்டில் _ உன்னை
அலங்காரமிட்டவளுக்கு  வாழ
ஒரு இடமில்லையா

உன்னை தோளோரம்
தூக்கி சுமந்த எனக்கு
உன் வீட்டு
கதவோரம் இருக்க கூட
இடமில்லையா

நதி போல ஓடி ஓடி
உன்னை வளமாக்கினேன் _ என்னை
நாய் போல்  நடத்துவதை
கண்டு நெஞ்சை குளமாக்கிநேன்

ஒரு வேலை

உன் மடியிலே இறந்து இருந்தால்
உன் மகனாக பிறந்து இருப்பேன் _ ஆனால்
உன்னை மகனாக பெற்றதுக்கு நான்
மலடியாகவே  இருந்து இருப்பேன்

என் கடைசி ஆசை ...

இது பாவிகளை  பெற்ரேடுத்தோர்
வாழுமிடம்

உன்  பாவமும்  இனி
மேலும் கூடகூடாது
என் பேரனும் பாவியாய்
மாற கூடாது







Photo courtesy : Mr Martin Don

கவிஞர் வைரமுத்து அவர்களே





கருணாநிதி தமிழர்களின் அடையாளமாக
விளங்குகிறார்  ....

          - கவிஞர் வைரமுத்து
          (மூன்றாம் உலகப்போர் புத்தக வெளியீட்டு விழாவில் )

......................................................................................................................................

கவிஞர் வைரமுத்து அவர்களே ..


பசிகொண்ட இளம் மீன்கள்
இரை பார்த்து களிப்படையும் _ அந்த
இரை மூலம் வாய் குத்தி
இறுதி வரை துடித்துடிக்கும்

அதை போல் ..உங்கள்

தமிழ் அழகில் களிப்படைந்தோம்
தமிழ் கேட்டு விழிப்படைந்தோம்

ஆனால்

தமிழ்தாயே கேட்க கூசும்
பொய் ஒன்றை விதைத்தீரே
பாரெங்கும் படர்ந்த
எங்கள் தமிழ் நெஞ்சை
சிதைத்தீரே

கவிதைக்கு பொய் அழகு
அது உங்கள் வரிதான் _ ஆனால்
கவிஞனுக்கு பொய் எதற்கு ?
பதில் கூறுங்கள் ..?


அங்கே கைகட்டி கண்கட்டி
கொல்லும் போது _ இங்கே
கைகட்டி பார்த்தவரா
எங்கள் அடையாளம்  ?

அங்கே எல்லாம்
முடிந்த பின்
உரிமையை பத்தி பாடுகிறார்
நடுகடலில் ஊசியை போட்டு
அதை நடுஇரவில் தேடுகிறார்

மாநாட்டில் தனி ஈழம்
மீட்க சொல்வார்
சிதம்பரத்தை பார்த்தும்
மாற்றி சொல்வார்

உண்மைக்கும் இவருக்கும்
ரொம்ப தூரம் _ இதை
அறியாத உன் நிலைமை
ஐயோ பாவம்


உங்கள்  பொய் மூட்டை
கண்டு வியக்கிறாள் அந்த
தமிழ்தாயே கைக்கொட்டி
சிரிக்கிறாள்

முடிகொடுத்து பதவியில்
வைத்த எங்கள்
குடிக்கெடுத்த அவர்
உடன் பிறப்பு கூட்டம் அன்று

உழைத்து பிழைத்து
வந்த எங்கள் நிலத்தை
திருடி பிழைத்து வந்த
கதை மறந்தீரா?

அடுப்பறையில் எரிகின்ற
கரி போல நம் இனமங்கே
 எரிகின்ற  நேரம் கூட _ இங்கே
கடற்கரையில் சில நேரம்
கட்டில் போட்டு உட்கார்ந்த உன்
தலைவனின் நாடகத்தை
மறந்தீரா?

 எத்தனை வழக்குகள்
எத்தனை திருட்டுகள்
அத்தனையும் பார்த்து
கொண்டு அமர்ந்து இருந்தார்
மறந்தீரா?

வயிறுக்கு திருடியது
திருடர் கூட்டம் _ தன்
வசதிக்கு திருடியது _ உன்
தலைவன் கூட்டம்

நின்றுக்கொண்டே  தூங்குவது
குதிரை குணம்
தூங்கும் போதும் திருடுவது
உன் தலைவன் குணம்

உடலை வித்து
உயிர் வளர்த்தாள் விபச்சாரி
அவரோ தமிழை வைத்து
வயிர் வளர்த்த வியாபாரி

அவர் பேசும் தமிழ்
அழகில் அன்று விழுந்தோம்
அந்த பாவம் இன்று வரை
நாங்கள் எழவேயில்லை

தமிழிலே இருக்கும் உங்கள்
ஆண்மை .. உங்கள்
தன்மானத்தில் இல்லாமல்
போனதேனோ

உங்கள் கவி சொற்கள்
தினம் கேட்டு கண்மூடி அகம்
மகிழ்ந்தோம் _ இன்று
உங்கள் கடும் சொற்கள்
பொய் கேட்டு கண்ணீரில்
அகம் நினைத்தோம்

நல்வழியே அறியாத
உங்கள் தலைவர்
எவ்வழியில் எங்களுக்கு
அடையாளம் ஆனார் ?

உங்களுக்கு வியாபாரம்
விளம்பரம் பண்ணீர்கள்_ ஆனால்
எங்களுக்கு அடையாளம் என
எதை வைத்து சொன்னீர்கள் ?


சந்தத்தில் விளையாடும்
உன் சொற்கள் இன்று
சத்தியத்தில் தடுமாறி
விழுந்தது ஏனோ ?

காதல் சொன்னீர்
காமம் சொன்னீர்
வேதம் சொன்னீர்
வீரம் சொன்னீர்

உறுதியில் வாழ  பல
மெய் சொன்னீர் _ ஆனால்
இறுதியில் ஏன் இந்த
பொய் சொன்னீர் ??



July 15, 2012

பெருந்தலைவர் காமராஜர்




துவக்கத்துக்கு கணபதி
தொடர்ந்து வர ஈஸ்வரன்
கல்விக்கு சரஸ்வதி
காசுக்கு லட்சுமி
உணவுக்கு அன்னப்பூரணி
உண்மைக்கு அரிச்சந்திரன்
தியாகத்துக்கு இயேசு
வீரத்துக்கு அனுமன்
அகத்திற்கு பிரம்மர்
ஒழுக்கத்திற்கு ராமர்


இவை அனைத்துக்குமே
ஒருவர்  எங்கள்

  காமராஜர்

கேரளம் மட்டுமல்ல
கடவுளின் தேசம்
எங்கள் தமிழகம்
கூடத்தான்

எங்கள்
கர்ம வீரர் இருந்த வரை








July 12, 2012

தமிழ்த்தாய்







எங்கள் தாய் தந்தை கூடலில்
தரணியில்  வந்தோம் _
 எந்ததலைமுறையின்  புண்ணியமோ
தமிழனாய்  வந்தோம்

வற்றாத நதி முன்னே மழை
வந்தது _ அந்த மழை
வர மூலமாய் முன்
கடல் வந்தது

பற்றாத ஒளி முன்னே
இருள் வந்தது _ உலக
நாகரிகம் வரும் முன்னே
தமிழ் வந்தது

அங்கே காட்டினில் மொழி இன்றி
கையால் பேச _ இங்கே
கன்னித்தமிழ் புலவர்கள்
கவிதை படைத்தார்

அங்கே மலைக்குகை இருளிலே
இரவை கழித்தான் _ இங்கே
மலை குடைந்து பாறையில்
இறையை வடித்தான்

வற்றாத வளமையினால்
அள்ளி தந்தால் _ மானிட
வாழ்வியல் தர்மத்தை
சொல்லிதந்தால்


வள்ளுவன் வாயிலால்
நீதி வளர்த்தாள் _ பல
வள்ளர்கள் தனை தந்து
தர்மம் வளர்த்தாள்

மெய்ஞான வளர்வதில்
வழி காட்டினாள்
பல மெய்ஞான சித்தர்களுக்கு
வலுவேறினால்
அஞ்ஞான இருள் நீக்கி
ஒளி ஏற்றினால் இந்த
விஞ்ஞானம் வளர வளர
தன்னை மெறுகேற்றினால்


தங்கத்தின் இணைக்கு
நிகர் தகரமில்லை   எங்கள்
தமிழ் மொழியின் இனிமைக்கு
நிகருமில்லை

அவள் அங்கத்தின் அணிகளாய்
காப்பியம் கொண்டால் _
சங்கத்தின் காலத்தில்   பெரும்
மேன்மையை கண்டால்

மலர் எல்லாம் மாலையாக
மாறுவதில்லை _ மற்ற
மொழியெல்லாம் தமிழ்
தேனாய் ஊருவதில்லை

சோதனை பல தாண்டி
தீரம் காட்டினாள் பல
சோழனை பெற்றேடுத்து
வீரம் காட்டினாள்

கடவுளின் மொழிதான்
சமஸ்க்ரிதம் என ஒரு
கூட்டத்தின் கூச்சலை
கேட்டதுண்டா  ??

அவர் எம்மொழி பேசினாலும்
கவலை இல்லை _ எங்கள்
செம்மொழி  இல்லையனில்
கடவுளே இல்லை

காமத்தில் பிறந்தது
மனிதர் இனம் _ பூமி
கடைமனிதன் இருக்கும்
வரை தமிழரினம்


இப்பிறப்பு முடியும்
வரை   மெய் பேச வேண்டும் _இனி
எப்பிறப்பு எடுத்தாலும் தமிழ்
பேச வேண்டும்

July 10, 2012

ஓம் நம சிவாய










தேன் உருகும் பூமாலை தேவனின் திருகழுத்தில்
மான் எனும் மதி மயக்கம் மாதவன் திருக்கரத்தில்
வான் எனும் வளிகுடையில்  வாழும் வையகத்தை
நான் மறையுடன் ஆளும் நாம சிவாயமே

சோகம் தன்னை மனதில் அழித்து
மேகம் போலே நல்லருள் பொழிந்து
தியாகம் உருவாய் தரணியை காக்கும்
நாகம் சூடிய நம சிவாயமே

மஞ்சோலை கிளியே  மரகத குயிலே
பூஞ்சோலை மலரே புனல் அனல் நிலமே
சாஞ்சாடும் மயிலே சந்தன மணியே
நாஞ்சாடும் பாமலர் நம சிவாயமே

ஆதியாய் அந்தமாய் அருபெரும் ஜோதியாய்
பாதியாய் பார்வதியாய் பார் தொழுவும்
நீதியாய்   நீலமாய் நின் மலரடி காண
நாதியாய் அளிக்கிறேன் நமசிவாயமே

தில்லை அம்பலமாய் தித்தவ உருவாய்
எல்லை இல்லா கருணை ஏகாந்த பொருளாய்
பிள்ளையாய் பெற்ற உற்ற உறவாய்
நல்லவை அனைத்தும் நம சிவாயமே


எறிபத்தர் ஏனாதி இயற்பகை இயன்குடி
அறிபத்தர் அப்பரும் அப்புதி அடிகளும்
பெரும்பக்தி கொண்ட சுந்தரும் சம்மந்தரும் கண்ட
நமநந்தி அடிகள் போற்றும் நம சிவாயமே


ஆலம் உண்ட  அருபெரும் கடலாய்
காலம் கடந்த கனியருள் மனதாய்
சூலம் தரித்த சுகம் தரும் ஒளியாய்
ஞாலம் போற்றும் நம சிவாயமே



கண்டு கலந்து களிப்புடன் உன்னை
உண்டு உணர்ந்து உளமார நினைத்து
பூவிலே புணர்ந்து புறங்களை மறந்து
நாவிலே தொழுவோம்  நம சிவாயமே


ஆடலாய் அரசாய் அந்தமாய் அமுதாய்
பாடலாய் பாராய் பார்வதி பாடியை
நாடாய் காடாய் நாள்தோறும் பலர்
தேடலாய் விளங்கும்  நம சிவாயமே

தவமுனி உறுவாய் தலைபிறை அழகாய்
பவமணி பதியாய் பனிமலை சுடராய்
இளம்பணி இதமாய் இசை பொருள் சுரமாய்
நவமணி சுடரே நம சிவாயமே


ஞானத்தில் உன்னை வைத்து
ஞாபகத்தில் உன்னை வைத்து
பானத்தில் உன்னை வைத்து
பக்தியில்  உன்னை வைத்து
காணத்தில்  உன்னை வைத்து
கனவிலும்  உன்னை வைத்து
காலதிலும் உன்னை போற்றும் _  எனை
காப்பாய் நம சிவாயமே



July 6, 2012

மகிந்த ராசபக்ச


மலமும் உமிழ்நீரும் கூட
அழகாய்   தெரிகிறது
மகிந்தா  உன் மானங்கெட்ட
முகத்தை காணும் போது

பக்கத்துக்கு பேய்களும்
சீனத்து நாய்களும்
வக்கத்த உனக்கு வலுவேத்த
இல்லை எனில்

திக்கத்து போயிருப்பாய்
திறனி இன்றி வாடி இருப்பாய்
தமிழனின் வீரத்தில்
தறிகெட்டு ஓடி இருப்பாய்
தன்மானமற்றவனாய்
மண் மூடி போயிருப்பாய்


ஆண்மையை வித்து நீ
ஆயுதம் வாங்கினாய் எங்கள்
ஆண்மகன் நினைவிலே தினம்
அச்சத்தில் தூங்கினாய்


இருளிலே விளக்கேற்றி
இல்லத்தை மெருகேற்றி
தெருவிலே கோலமிட அவளை
சுற்றி தேனிக்கள்  ரீங்காரமிட

சிரிப்பிலே குழந்தையாய்
சிந்தையில் ஞானியாய்
நெருப்பிலே உள்ளது போல்
நெறியான தூய்மையாய்

பிறப்பிலே பேரு பெற்ற
எங்கள் மங்கையின் உடல்
தின்ற  மாமிச நாய்களே _ அவர்கள்
அங்கத்தை அறுத்த
அறமற்ற  பாவிகளே


இந்த தோல்வி கண்டு
எங்கள் உணர்வு குறையாது
தரணி அழியும் வரை
தமிழினம் மறையாது


மொத்தமாய் மண் மூடி போனாலும் நாங்கள்
சுத்தமாய்  வாழ்ந்த சுவடு மறைந்தாலும்
பித்தமாய் அலையும் உன் இனத்தின்  முகத்தை
ரத்தமாய் சதையுமாய்  அழிப்போம்  நாங்கள்


ஒரு மாவீரன் போனதில்?. வலி
உள்ளது.  ஆனால்
இன்னம் ஆயிரம் வீரன் வர
வழி உள்ளது

ஆனால்

உங்கள் ஒரு கோடி விந்துக்கள்
ஒன்று கூடி நின்றாலும்
உங்கள் சிங்கள கருவிலே
ஒரு மாவீரன் வரமாட்டான்



இன்று தமிழர்கள் அழிந்தாலும்
தமிழ்த் தாய்க்கு  அழிவில்லை

தமிழ்தாய் இருக்கும் வரை
தமிழ் இனத்துக்கு முடிவில்லை.


பல அன்னிய சாக்கடையால்
அவதரித்த வன் புழுவே  _  நீ
பண்ணிய பாவம் எல்லாம்  _ உன்
பரம்பரையை பழி வாங்கும்.

வாழும் வரை புல்லாக வளைய
மாட்டோம் _  நாங்கள்
வளைந்தாலும் வில்லாக
வீரம் காப்போம்.

எங்களை ஒடுக்கியே  விட்டதாய்
ஓலம்  வேண்டாம் _ சும்மா
தடுக்கி தான் விட்டுவிட்டாய்
மீண்டும் எழுவோம்!!


http://www.facebook.com/Anuvakal

June 28, 2012

ஒரு மரத்தின் எச்சரிக்கை





மானிடர்களே....

உங்கள் சுயநல  போக்கிலே
மாற்றம்  வேண்டும் - இந்த
சுந்தர பூமியை  கொஞ்சம்
காக்க வேண்டும்



அடுப்பிலே எரிவதற்கு உடலை தந்தோம்
அமர்ந்து நீங்கள் இருபதற்கு  உடலை தந்தோம்
துடுபாகி போவதற்கு  உடலை தந்தோம்
துண்டாகி துண்டாகி எல்லாம்   தந்தோம்

கனியாகி காயாகி பசியாற்றினோம்
தாளாகி நூலாகி  படிபேற்றினோம்

கருமேகம் குளிறுற்றி மழையாய்
செய்தோம் _ உங்களை காலமும்
காத்து பெரும்  பிழையை  செய்தோம்

எங்கள் நிகழ்கால வனதை
நீங்கள்  அழிப்பதால்
உங்கள்  எதிர்கால  இனத்துக்கு
எமனாய் முடியும்

உங்கள் சுயநல புத்திக்கு
சொல்லி கொடுங்கள்
வரும் எதிர்கால
வர்க்கத்தை வாழ விடுங்கள்


ஆற்றை எல்லாம் வற்றி விட்டு _ எங்கள்
ஆளை எல்லாம்  வெட்டி   விட்டு
காசை மட்டும் வைத்து கொண்டால்
கஞ்சிக்கும் கனிகும் வழியே இல்லை

கால் கழுவ கூடவும் தண்ணி இல்லை
இதை புத்தியில் ஏற்றினால் பாரமில்லை
அன்றி
உங்கள் அழிவிற்கு காலமும் தூரம் இல்லை

எங்களை இருக்க விட்டால்
இருக்கும் வரை எல்லாம் தருவோம்
இல்லை என்றால்
உங்களை அழித்து விட்டு
மீண்டும் வருவோம்

ஆறறிவை அழித்து விட்டு
மீண்டும் பிழைபோம் _ பின்
ஐந்தறிவை  மட்டும்  கொண்டு
அமைதியில் தழைப்போம்


கருணை அற்ற உங்கள் செயல்
அழிவில் முடியும் _ சொரணை
அற்ற உங்களுக்கு ஒரு  எச்சரிக்கை ..



    _ இப்படிக்கி
        ஒரு மரம்

*ஆறறிவை - மனிதர்கள்
*ஐந்தறிவை  - மிருகங்கள்


June 22, 2012

மங்கை





ஒரு அழகியின்  முகவுரை




கொஞ்சி பேசும் பிஞ்சி  தமிழும்
குழந்தை முகமும்
 செஞ்சி வச்ச சிற்பக்கரமும்
 சிவந்த இதழும்

சொக்க வைக்கும்  அவள் நடையும்
சுழலும் இடையும்
பற்ற  வைக்கும் அவள் விழியும்
பருவ உருவமும்

சிந்தை எல்லாம் அவள் எண்ணமும்
சிவந்த கன்னமும்
விந்தையான அவள் சிரித்தால்
 விழுமே  பள்ளமும்


செம்மையான பிஞ்சு வெள்ளரியாய்
விளைந்த விரலும்
மென்மையான வீணை இசையாய்
இனிய குரலும்


கோவை இதழ் உள்ளினிலே
பளிங்கு பற்கள்
பாவை அவள் பேசுவதே
 கவிதை சொற்கள்


கொஞ்சம் நேரம் அவள் சிரித்தால்
குவியும்   மேகங்கள்
நெஞ்சம் அவளை நினைகயிலே
உருகும் தேகங்கள்


கார் கூந்தல் இடம்
அமர பூக்கள் வாடும்
அவள்  கனியிதழ்   தேன்
சுவைக்க   வண்டுகள் தேடும்


துள்ளி அவள் ஓடும்   அழகில்
மான்கள்    தோற்கும்
கள்ளி அவள் ஆடும் அழகை  மயில்கள்
மறைந்து   பார்க்கும்


அவள் அங்கம் மேலே தங்கம்
வைத்தால் தங்கம் கருகும்
அவள் அன்ன விழியில் கண்ணீர்
பார்த்தால் உலகம் உருகும்


பிறை நிலா  பின்பம் போல
வளைந்த    புருவம்
முழு நிலா  அவளை   கண்டால்
  கொள்ளுமே   கர்வம் .

June 11, 2012

தந்தை


ஒவ்வொரு தந்தைக்கும்   சமர்ப்பணம்

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்த அன்னைக்கு பின்
இது வரைக்கும் என் வாழ்வை
தோள் சுமந்த தோழன்

என்னை கருவாக்க  சில நேரம் 
இன்பம் கண்டார் ..
என்னை உருவாக்க  இன்று
வரை எல்லாம் துறந்தார்

இரவெல்லாம் கண்ணீர்
இதழ்  எல்லாம் உமிழ் நீர்
அன்று மாடியில் தூங்கும் போது
நிலவை ரசிதேன்  _ அவர்
மடியிலே தூங்கிய பின்
நிலவை மறந்தேன்

நான் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ நான்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்

மாலையில் கைபிடித்து
மலையோரம் நட ப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல

நான் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம்  அதுவே

நிலவிலே மனிதன் போன
கதைகள் சொன்னார்
நான் நீதியில் வாழ பல
வழிகள் சொன்னார்

அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது

உழவாத நித்திலே உணவு
இல்லை
உருகாத தங்கத்தில் உருவம்
இல்லை
ஊதாத குழலுக்கு இசையும்
இல்லை
உதை வாங்கா    பிள்ளைக்கு
உயர்வும் இல்லை

என்னை அடித்தவுடன்
அழுவது ஆறு கண்கள்
தாயின் கண்கள் எனை
துடைக்க ஓடி வந்தது
தந்தையின் கண்கள்
அழுவதற்கு மறைவில் சென்றது

நான் படிக்காமல் தூங்கி இருந்த 
நேரதில் கூட _ நான்
படிப்பதற்கு தூங்காமல்
வேலை பார்தார் 

என் எதிர்கால   வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால      வாழ்வையே
பணயம் வைத்தார்

நான் வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
நான் வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி   அனுப்பினார்

எனை கல்லூரி சேர்க்க    டமை
இழந்தார் _ என் கல்விக்கு ஒளி
ஏத்த உடலை  வருத்தார்

என் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ என் கண்ணீரின்
 சமயம் எல்லாம் ஊக்கம்
கொடுதார் .

தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய்  வாழ்கிறார்கள்