June 28, 2012

ஒரு மரத்தின் எச்சரிக்கை





மானிடர்களே....

உங்கள் சுயநல  போக்கிலே
மாற்றம்  வேண்டும் - இந்த
சுந்தர பூமியை  கொஞ்சம்
காக்க வேண்டும்



அடுப்பிலே எரிவதற்கு உடலை தந்தோம்
அமர்ந்து நீங்கள் இருபதற்கு  உடலை தந்தோம்
துடுபாகி போவதற்கு  உடலை தந்தோம்
துண்டாகி துண்டாகி எல்லாம்   தந்தோம்

கனியாகி காயாகி பசியாற்றினோம்
தாளாகி நூலாகி  படிபேற்றினோம்

கருமேகம் குளிறுற்றி மழையாய்
செய்தோம் _ உங்களை காலமும்
காத்து பெரும்  பிழையை  செய்தோம்

எங்கள் நிகழ்கால வனதை
நீங்கள்  அழிப்பதால்
உங்கள்  எதிர்கால  இனத்துக்கு
எமனாய் முடியும்

உங்கள் சுயநல புத்திக்கு
சொல்லி கொடுங்கள்
வரும் எதிர்கால
வர்க்கத்தை வாழ விடுங்கள்


ஆற்றை எல்லாம் வற்றி விட்டு _ எங்கள்
ஆளை எல்லாம்  வெட்டி   விட்டு
காசை மட்டும் வைத்து கொண்டால்
கஞ்சிக்கும் கனிகும் வழியே இல்லை

கால் கழுவ கூடவும் தண்ணி இல்லை
இதை புத்தியில் ஏற்றினால் பாரமில்லை
அன்றி
உங்கள் அழிவிற்கு காலமும் தூரம் இல்லை

எங்களை இருக்க விட்டால்
இருக்கும் வரை எல்லாம் தருவோம்
இல்லை என்றால்
உங்களை அழித்து விட்டு
மீண்டும் வருவோம்

ஆறறிவை அழித்து விட்டு
மீண்டும் பிழைபோம் _ பின்
ஐந்தறிவை  மட்டும்  கொண்டு
அமைதியில் தழைப்போம்


கருணை அற்ற உங்கள் செயல்
அழிவில் முடியும் _ சொரணை
அற்ற உங்களுக்கு ஒரு  எச்சரிக்கை ..



    _ இப்படிக்கி
        ஒரு மரம்

*ஆறறிவை - மனிதர்கள்
*ஐந்தறிவை  - மிருகங்கள்


June 22, 2012

மங்கை





ஒரு அழகியின்  முகவுரை




கொஞ்சி பேசும் பிஞ்சி  தமிழும்
குழந்தை முகமும்
 செஞ்சி வச்ச சிற்பக்கரமும்
 சிவந்த இதழும்

சொக்க வைக்கும்  அவள் நடையும்
சுழலும் இடையும்
பற்ற  வைக்கும் அவள் விழியும்
பருவ உருவமும்

சிந்தை எல்லாம் அவள் எண்ணமும்
சிவந்த கன்னமும்
விந்தையான அவள் சிரித்தால்
 விழுமே  பள்ளமும்


செம்மையான பிஞ்சு வெள்ளரியாய்
விளைந்த விரலும்
மென்மையான வீணை இசையாய்
இனிய குரலும்


கோவை இதழ் உள்ளினிலே
பளிங்கு பற்கள்
பாவை அவள் பேசுவதே
 கவிதை சொற்கள்


கொஞ்சம் நேரம் அவள் சிரித்தால்
குவியும்   மேகங்கள்
நெஞ்சம் அவளை நினைகயிலே
உருகும் தேகங்கள்


கார் கூந்தல் இடம்
அமர பூக்கள் வாடும்
அவள்  கனியிதழ்   தேன்
சுவைக்க   வண்டுகள் தேடும்


துள்ளி அவள் ஓடும்   அழகில்
மான்கள்    தோற்கும்
கள்ளி அவள் ஆடும் அழகை  மயில்கள்
மறைந்து   பார்க்கும்


அவள் அங்கம் மேலே தங்கம்
வைத்தால் தங்கம் கருகும்
அவள் அன்ன விழியில் கண்ணீர்
பார்த்தால் உலகம் உருகும்


பிறை நிலா  பின்பம் போல
வளைந்த    புருவம்
முழு நிலா  அவளை   கண்டால்
  கொள்ளுமே   கர்வம் .

June 11, 2012

தந்தை


ஒவ்வொரு தந்தைக்கும்   சமர்ப்பணம்

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்த அன்னைக்கு பின்
இது வரைக்கும் என் வாழ்வை
தோள் சுமந்த தோழன்

என்னை கருவாக்க  சில நேரம் 
இன்பம் கண்டார் ..
என்னை உருவாக்க  இன்று
வரை எல்லாம் துறந்தார்

இரவெல்லாம் கண்ணீர்
இதழ்  எல்லாம் உமிழ் நீர்
அன்று மாடியில் தூங்கும் போது
நிலவை ரசிதேன்  _ அவர்
மடியிலே தூங்கிய பின்
நிலவை மறந்தேன்

நான் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ நான்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்

மாலையில் கைபிடித்து
மலையோரம் நட ப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல

நான் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம்  அதுவே

நிலவிலே மனிதன் போன
கதைகள் சொன்னார்
நான் நீதியில் வாழ பல
வழிகள் சொன்னார்

அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது

உழவாத நித்திலே உணவு
இல்லை
உருகாத தங்கத்தில் உருவம்
இல்லை
ஊதாத குழலுக்கு இசையும்
இல்லை
உதை வாங்கா    பிள்ளைக்கு
உயர்வும் இல்லை

என்னை அடித்தவுடன்
அழுவது ஆறு கண்கள்
தாயின் கண்கள் எனை
துடைக்க ஓடி வந்தது
தந்தையின் கண்கள்
அழுவதற்கு மறைவில் சென்றது

நான் படிக்காமல் தூங்கி இருந்த 
நேரதில் கூட _ நான்
படிப்பதற்கு தூங்காமல்
வேலை பார்தார் 

என் எதிர்கால   வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால      வாழ்வையே
பணயம் வைத்தார்

நான் வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
நான் வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி   அனுப்பினார்

எனை கல்லூரி சேர்க்க    டமை
இழந்தார் _ என் கல்விக்கு ஒளி
ஏத்த உடலை  வருத்தார்

என் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ என் கண்ணீரின்
 சமயம் எல்லாம் ஊக்கம்
கொடுதார் .

தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய்  வாழ்கிறார்கள்

May 17, 2012

இன்றைய தமிழகம்



கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை  விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்


இயற்கையின் விதி இணை சேற
வேண்டும்
இருபாலும் அதற்கு துணை
சேற வேண்டும்
அதற்கு முறையாக முன்னோர்கள்
வைத்த  பெயர் திருமணம்

ஆனால்
அன்று கடல் கடந்து வியாபாரம்
இன்று கல்யாணத்தில்  வியாபாரம்

சில பவுன் நகைக்கு ஆண்மையை
விக்கிறான்
தங்கத்தை  கொடுத்தால்
அவன் தாய்மையை கொடுக்கிறான்

அன்று குளத்தடி நீரிலே
குளித்த என் தமிழினம் _ இன்று
நிலத்தடி நீரைகூட  காணாமல்
தவிகிறது

நேர்மையை  மறந்து விட்டோம்
நிம்மதி இழந்து விட்டோம்
நீதியை துறந்து விட்டோம் - அட
நீரை கூட  இழந்து விட்டோம்

ஒரு படி அரிசிக்கி உரிமையய்
விற்றோம் - பிச்சைக்கார
வேடத்தை பெருமையாக
பெற்றோம் 

ஒரு வேளை காமதில்
சுகம் இல்லை என்றல்
கூடகுட மாட்டோம்
குழந்தையை  free'ya கேட்ப்போம்



அன்று சொந்தங்கள் கூட  சொர்கத்தை
கண்டோம்
இன்று  சொத்துக்காக  சொந்ததை
மறந்தோம்

அன்று வழிபோக்கன் வாழ கூட
திண்ணையை வைத்தோம் - இன்று
வயதான பெற்றோரையே 
தெருவிலே  விட்டோம்


அன்று கோ உயர குடி உயர்ந்தது
இன்று குடி உயர கோ உயர்கிறது
அரசாங்கம் ஊத்தி  தரும்
அநியாயம் போத்தி வரும்

கல்வியெல்லாம் தனியாரிடம்
காலமும் மதுக்கடை அரசிடம்
குடிக்க  Beer இருக்க
படிக்க Book  எதற்கு  ?


நீதியில் நிலைத்து
நித்தமும் உழைத்து
நிம்மதியில் வாழ்ந்த
எம் தமிழனின்
வாழ்கை இனி
காணவும்  கிடைகாது
அந்த காலமும் திரும்பாது


இன்னும்...

சோழனும் கம்பனும் வாழ்ந்த
எங்கள் பூமி என
பெருமை பட்டு கொள்வதால்
பயன் ஒன்றும் இல்லை
நம்   இனதின்  பெருமை மறைய
  காலம் தூரம்  இல்லை





March 29, 2012

வறுமை கொடுத்த வழி...


விலைமாந்தர்


அவளை பழிக்கதே...

நீ பணத்துக்காக 
பலவற்றை விற்கிறாய்
அவள் உடலை மட்டும்தான்
விற்கிறாள்

உன் ருசிக்கி உணவலிதால்தான்
அவள் பசிக்கு
உணவு

வறுமை கோடாக இருந்தால்
தாண்டிவிடலாம் அவளுக்கோ
வறுமை  காடாக உள்ளது

தன்னை தந்த தந்தையய்
 தவழும் வயதிலே 
இழந்துவிட்டால்


கண்ணை இழந்து
கட்டினிலே கிடந்து
பெண்ணையே நம்பி
வாழும் அவள் அன்னை

குடும்ப சுமைய குறைக்க
மூட்டை  சுமையய் தூக்க கூட
வாட்டம் இல்லா வளைந்த
கால்களுடன் தம்பி

காசை கொடுகாத கடவுள்
காச நோயை கொடுத்துவிட்டார்
இரவெல்லாம் இரும்பி இம்சை
தரும் அவள் தாத்தாவுக்கு

கூலி  வேலை
செய்தால்  கூழை குடித்து
வாழ்ந்து விடலாம்
ஆளுக்கு ஒரு குறையான
நாளுக்கு ஒரு  மருந்து வாங்க வேண்டுமே

பழி பல வரட்டம் பரவா இல்லை
வழி அதுவெ
சென்று விட்டால்

காமத்தை அடக்காமல்
அலைகின்ற ஆணுக்கு
கஷ்டத்தை பொறுகாமல்
தவறிகின்ற பெண்ணே மேல்

அவளை

சரியென்று கூறவும் நான் வரவில்லை
தவறு என்று கூறவும் மனம் இங்கு இல்லை

பழிபப்வர்களே........

அவள் வாழ்கையில்
சிறக்க வழி இருந்தால்
செய்யுங்கள்.... இல்லை என்றால்
வந்த வழி செல்லுங்கள்....

March 26, 2012

இன்றைய விவசாயத்தின் நிலைமை ::


நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு  ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுகாக பிச்சை எடுபோம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
 கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்             
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசில்யல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசயை மறந்த நாடும்
உருபிட முடியாது_ உண்மை
இன்று புரியாது.

ஆசை ஆறடிக்குள்..


ஓடு  ஓடு  என

ஓட்டம் தொடங்கு என
கண்கள் பட்டவரை
கால்கள் தொட்டவரை
உனக்கு உரிமை என
அரசன் அறிக்கை வர

நாளை காலைக்குள்
கால்கள் தொட்டவரை
உனக்கு உரிமை என
உரத்த சத்தம்வர

ஆசை பிறந்துவிட
அனைத்தும் மறந்துவிட
தூக்கம் பறந்துவிட
வயிறு காய்ந்துவிட

ஓட்டம் யடுதவன்
உடல் நலிந்துவிட
சக்தி குறைந்துவிட
அனைத்தும் அடைந்துவிட
ஆசை ஆணையிட
அதிகம் அதிகம் என
ஆசை பிறந்துவிட
வாடிபோன அவன்
வயிறு காய்ந்துவிட

காடு கழனி என
மேடு பள்ளம் என
நாடு முழுவதும்
கால்கள் கடந்துவிட

நாட்டு எல்லையும்
தாண்டி போய்விட
மூச்சி மறுத்துவிட
இதயம் நின்றுவிட

ஊரை கடந்த
அவன் உண்மை
கதையெல்லாம் ஆறு
அடிக்குள்ளே அடைந்து
போயின

கதம்பம்



கல்யாணம்..

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்...
ஆண்களின் ஆண்மை உரமாயிட்டு
பெண்களின் தாயிமை அறுவடை  செய்ய ப்படுகிறது ...
 ..............................................


இட்லிக்கு கூட தொட்டுக்க
உள்ளது _ எனக்கு தொட்டுக்க
யாருமில்லையே  


................................................................

 காதல் எனும் தோட்டதில் மட்டும்தான்
ரோஜாக்கள் குத்திய வலியினை உணர்ந்தேன்

...............................................................


கூண்டுகள் இரண்டில்
சாட்சிக்கு ஒன்று
காதலும் நட்பும்
காட்சிக்கு  ஒன்று...


............................................................

.தெருவிலே Follow  பண்ணேன் நாய் என்று ஏசினால் _ அனால்

Twitter'இல்  follow பண்ணால்  Hi என்று பேசினால்
 ..............................................................................................


கடலும் காமமும் கட்டுக்குள் இல்லையென்றால்
உடலும் உள்ளமும் உருக்குலைந்து போய்விடும்..


....................................................................................
.





மருத்துவமனை சென்றுப்பார்

பல  ஆயிரம் மனிதர்கள் மரணத்தை கண்டு
போரடிக்ககொண்டு இருக்கிறார்கள்

TASMAC சென்றுப்பார்

பல  ஆயிரம் மனிதர்கள் மரணத்தை காண
நீராடிக்கொண்டு இருக்கிறார்கள்  ..




தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்...



வாழ்க்கைக்கு துணைக்கால் வேண்டும்_ உன்
வாழ்க்கைக்கு துணை நானாக வேண்டும்..

தோகைமயில் உன் துணையாட வேண்டும்_ நான்
வாகை சூடும் உன் மலராக வேண்டும்..

நீ பேசும் வார்த்தைகள் கலையாக வேண்டும்_ நீ
போகும் பாதையில் கற்கள் சிலையாக வேண்டும்..

காலமும் உன் சொற்கள் மெய்யியாக வேண்டும்
வானமும் உன் கால் நக மையாக வேண்டும்..

கடல் அழகை ரசிக்க கரை ஒன்று வேண்டும்_ உன்
கார்க்கூந்தல் நடுவிலே மலராக வேண்டும்..

இல்லத்தில் இன்பம் தினம் இணையாக வேண்டும்_ உன்
உள்ளத்தில் உறைவிடத்தில் நான்  இனைந்தாக வேண்டும்..

கார்மேகம் மறைந்தாலும் மழையாக பொழியும்_ அந்த
கருங்குயில் கூட்டம் உன் இமைக்கான விழையும்..

தியாகதின் அரசனுக்கு நீ  சேயாக வேண்டும்
தமிழுகுபின் நீ என்  தாயாக  வேண்டும்..

துணியாக இருந்தாலும் உன் தோல் பட வேண்டும்
எறும்பாக இறந்தாலும் உன் கால் பட வேண்டும்..

வானத்தின் நிலா உன் முகம் காண வேண்டும்_ பின்
நாணத்தில் தேயிண்டு கறைந்தாக வேண்டும்..

ஐநூறு காப்பியங்கள் அரங்கேற்ற வேண்டும்_ உன்
இருவிழிகளை  மட்டும் சொல்ல இன்னம் இருநூறு வேண்டும்..

சிலகாலம் வாழ்து நான் இறந்தாலும் போதும்
விளகே ற்றும் உன் விரலில்நகமாக வேண்டும்..

விழுந்தாலும் நீ அழகில் அருவியாய் வீழ்வாய்
பார் போற்றும் பகலவன் போல் பரிசுதாமாய் வாழ்வாய்..

சிறக்கும் பல செயல்களால் நீ புகழ் காண வேண்டும்_ நான்
இறக்கும் வேளையிலும் உன் முகம் காண வேண்டும்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


''பெற்றோர் பேரன்பும் உற்றோர் உறுதுணையும்
பற்றோர் இல்லா பரந்த மனமும்
கற்றோர் கவரும் கரையா மதியும்
நற்றோர் வழியும் நல்லோர் புகழும்
கூடாத ஆசையும் குறைய அன்பும்
வாடாத மனமும் வசையாத நாவும்
அளவற்ற அன்பும் குறைவற்ற செல்வமும்
பிளவற்ற  மனமும்  பிரியாத குணமும்
அன்பான துணையும் அழகான செல்வமும்
பண்பான வாழ்க்கையும், பார் போற்ற அமையட்டும்''...