March 26, 2012

தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்...



வாழ்க்கைக்கு துணைக்கால் வேண்டும்_ உன்
வாழ்க்கைக்கு துணை நானாக வேண்டும்..

தோகைமயில் உன் துணையாட வேண்டும்_ நான்
வாகை சூடும் உன் மலராக வேண்டும்..

நீ பேசும் வார்த்தைகள் கலையாக வேண்டும்_ நீ
போகும் பாதையில் கற்கள் சிலையாக வேண்டும்..

காலமும் உன் சொற்கள் மெய்யியாக வேண்டும்
வானமும் உன் கால் நக மையாக வேண்டும்..

கடல் அழகை ரசிக்க கரை ஒன்று வேண்டும்_ உன்
கார்க்கூந்தல் நடுவிலே மலராக வேண்டும்..

இல்லத்தில் இன்பம் தினம் இணையாக வேண்டும்_ உன்
உள்ளத்தில் உறைவிடத்தில் நான்  இனைந்தாக வேண்டும்..

கார்மேகம் மறைந்தாலும் மழையாக பொழியும்_ அந்த
கருங்குயில் கூட்டம் உன் இமைக்கான விழையும்..

தியாகதின் அரசனுக்கு நீ  சேயாக வேண்டும்
தமிழுகுபின் நீ என்  தாயாக  வேண்டும்..

துணியாக இருந்தாலும் உன் தோல் பட வேண்டும்
எறும்பாக இறந்தாலும் உன் கால் பட வேண்டும்..

வானத்தின் நிலா உன் முகம் காண வேண்டும்_ பின்
நாணத்தில் தேயிண்டு கறைந்தாக வேண்டும்..

ஐநூறு காப்பியங்கள் அரங்கேற்ற வேண்டும்_ உன்
இருவிழிகளை  மட்டும் சொல்ல இன்னம் இருநூறு வேண்டும்..

சிலகாலம் வாழ்து நான் இறந்தாலும் போதும்
விளகே ற்றும் உன் விரலில்நகமாக வேண்டும்..

விழுந்தாலும் நீ அழகில் அருவியாய் வீழ்வாய்
பார் போற்றும் பகலவன் போல் பரிசுதாமாய் வாழ்வாய்..

சிறக்கும் பல செயல்களால் நீ புகழ் காண வேண்டும்_ நான்
இறக்கும் வேளையிலும் உன் முகம் காண வேண்டும்..

4 comments:

  1. உனது கவிதை முகம் கண்டு வியக்கிறேன்
    தொடரட்டும் சிறந்த படைப்புகள்!!.

    ReplyDelete
  2. நன்றி Raki...:).கண்டிப்பாக தொடரும்

    ReplyDelete
  3. தொடரட்டும் சிறந்த படைப்புகள்!!.

    தமிழ்தாய் இருக்கும் வரை
    தமிழ் இனத்துக்கு முடிவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

      Delete