March 26, 2012

இன்றைய விவசாயத்தின் நிலைமை ::


நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு  ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுகாக பிச்சை எடுபோம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
 கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்             
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசில்யல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசயை மறந்த நாடும்
உருபிட முடியாது_ உண்மை
இன்று புரியாது.

3 comments:

  1. கூறிய சிந்தனையின் வெளிப்பாடு, மிகத் தெளிவாக கூறிவிட்டாய் கவிதையாய், இன்னும் இருபது ஆண்டுகளே உள்ளன இந்தியர் மீண்டும் உணவுக்காக பிச்சை எடுக்க. எப்போதும் போல் வோட்டுக்க பிச்சை எடுக்கும் அரசியல்வாதிகள் சட்டம் இயற்றுவார்கள் விலை நிலத்தை வீட்டுமனை ஆக்க கூடாதென்று, அனால் அப்போது விலை நிலங்களே இல்லாமல் போயிருக்கும்.

    ReplyDelete
  2. சரியாக கூறுனீர்கள் ...:)


    காரையும் கம்பியுடரையும்
    தின்ன முடியாது என்பதை ஒரு நாள்
    நாடு உணரும்

    ReplyDelete
  3. என் ஏக்கத்தின் எரிதழலாய் உள்ளது..

    ReplyDelete