October 28, 2012
எங்க ஊரு நாட்டாமை குடும்பம்
ஒரு நாட்டின் நம்பிக்''கை''யான குடும்பம் #
அண்ணன் ஆள கெடுத்தான்
தம்பி தாலிய அறுத்தான்
ஒண்ணா உக்காந்து
உல வச்சி ஊர கெடுத்தான்
பிச்சகாரன் தட்ட புடிங்கி
எச்ச சோறு தின்ன
சித்தபனும் சண்டை போடான்
சித்தமாலும் பங்கு கேட்டா
உள்ளூர் கோழிய
உல வச்சி திருடி திண்ணு
வெளியூரு மருமகள்
வீங்கி நல்லா பெருத்துபுடா
மாடு மேச்ச மருமகனுக்கு
மாடி வீடு தங்க தேரு
கோமணம் கட்டி சுத்தின மாகான்
கோட்டு சூட்டுல அலையுது பாரு
அடுத்த வீட்டு ஆட்டை திருடி
அலையறா அக்காகாரி
தவிச்ச விட்டில போய்
தண்ணிய வாங்கி தறுதலையா
சுத்தறான் தம்பிகாரன்
செத்து போன தாத்தாவுக்கு
சொத்து எண்ணம் பக்கமே இல்ல
பெத்து போட்டா புள்ளைங்களுக்கு
சொத்த திருட வெக்கமே இல்ல
# இது வெறும் கற்பனையே . எந்த தனி மனிதனையோ . எந்த அரசியல்
கட்சியோ குறிப்பிடவில்லை .
வரதட்சனை
பல இடங்களில்
வசதிக்காக
மாப்பிளை விட்டார் கேட்கும்
பிச்சை ..
பல இடங்களில்
தன் வசதியை காட்ட
பெண் விட்டார் செய்யும்
விளம்பரம்
- வை . நடராஜன்
ஏன் இந்த நாடகம்
பருவ மழைக்கு காத்திருந்தான்
விவசாயி - நீ
பருவம் வந்த முதல் காத்திருக்கேன்
இந்த படுபாவி
ஜன்னல் ஓரம் நின்று
தினம் படிக்கிறாய் - எனை
பார்க்காதவள் போல்
ஏனடி நடிக்கிறாய் ?
வேண்டாம் என்றால்
வேண்டிய காதலை நிறுத்து கொள்வேன்
நீ வேண்டுமென்றே இப்படி
செய்தால் , நான் என்ன செய்வேன் ?
பார்க்கும் போது நடிக்கிறாய்
பார்கவில்லைஎனில் துடிக்கிறாய்
பார்க்காமல் நான் கடந்து விட்டால் - கோவத்தில்
உன் தம்பியை ஏனடி அடிக்கிறாய் ?
நான் விரும்பி பார்த்தல்
நீ பூமியை பார்ப்பாய் - நான்
திரும்பி விட்டால்
என்னை பார்ப்பாய்
காதலுக்கு கண்தான்
ஊடகம்
எத்தனை நாள் இந்த
நாடகம் ?
ஒரு ஈழத்தின் பெண்
என் வானின் மதி கூட
நெருப்பாக சுட
என் தோட்ட மலர் கூட
வாசங்கள் கெட
யான் வளர்த்த பசு
காம்பில் விடமாக வர
தேன் கலந்த கனியெல்லாம்
கைபட்டால் கெட
ஊன் கொண்ட
உயிர் கூட சுமையாக பட
யான் கண்ட உறவெல்லாம்
பகையாக வர
யாழ் இசையும் எனை
கண்டு அழுகின்றது
தோள் சாயிந்து அழ
நெஞ்சம் விழைகின்றது
அன்னத்தின் இரு
விழியும் அன்பாக
வெள்ளத்தின் தத்தளிக்கும்
கன்றாக
உள்ளத்தின் சுமையெல்லாம்
ஒன்றாக
உயிரோடு எனை வறுத்தி
கொன்றாக
வான் பார்த்த
வெளி களத்தில்
ஊர் பார்க்க
என் பெண்மையை
சேர் பட்ட மலராக
சேர்ந்து பலர் கெடுத்தார்கள்
உடல் வெந்த என்
கணவன் - துடி துடித்த
கை குழந்தை
மலர் எரிந்த
பெரும் கொடுமை
பலர் குடித்த
என் பெண்மை
ஈனத்தின் இழிவாக
வாழ்கின்றேன்
ஈழத்தில் பிறந்ததால்
வீழ்கின்றேன்
ஒரு சீதை உயிர் காக்க
ஊர் கூட்டி வந்த ராமா - இங்கே
ஓராயிரம் சீதைகளை சீரழித்தார்
எங்கே போனாய் ?
மான் மயில்கள் மா எருது
தேன் மலர்கள் பல வாழ
மீன் வாழ கூட நதி உண்டு
நான் வாழ வழி இல்லை
ஈழத்தில் நான் பிறந்தேன்
வேறென்ன பிழை செய்தேன் ?
மழை வெய்யில்
என்றென்றும் மேனியிலே
உடை அணிந்த
மிருகமாய் வேலியிலே
இன்பத்தை இது வரை
நான் காணவில்லை
எனை அழைக்க
காலனுக்கு ஏன் தோணவில்லை
எங்களுக்கு
மரணம் விடுதலை
பிழைத்தோம் பெரும்
பிழை ..
October 23, 2012
October 22, 2012
Subscribe to:
Posts (Atom)








