September 19, 2012

மனிதன்




மனிதன் .....:

இறைவா ஒரு அணுவை கொடு
நான் ஆயிரம் படைத்தது
காட்டுகிறேன்

இறைவன் ....."

ஆயிரம் இருகட்டம் முதலில்
நீ ஒரு அணுவை படைத்தது காட்டு

_ வை . நடராஜன்

September 13, 2012

நம்பிக்கை உரமானால் ! வாழ்க்கை வரமாகும் !





மூச்சி இருக்கும் வரை
மரணமில்லை
முயற்சி இருக்கும் வரை
தோல்வியில்லை

எதையும் தாங்கும்
மனமிருந்தால்
வதையும் வாழ்வில்
வலிகள் இல்லை

நீரில் மிதக்கும் படகு கூட  _ அன்று
நீரை தந்த  மரமாகும்
அடித்த வலித்த தோல்வி எல்லாம்
நாம் திருப்பி அடிக்க நல் உரமாகும்

பள்ளமான இடத்தில்தான்
வெள்ளம் வந்தால் குளமாகும்
பள்ளம் ஒன்று தாழ்வு இல்லை
உள்ளம் இருந்தால் உயர்வாகும்

விதியோ ? சதியோ ? ஆகட்டம்
வழிகள் எல்லாம் மூடட்டும்
மதியும் மனமும் தீரமாகி
புதிய வழியை படைக்கட்டும்

எதுவுமின்றி ஆனாலும்
எவருமின்றி போனாலும்
துணிவு மட்டும் துணையானால்
வலிகள் கூட வரமாகும்

அற்ப்பமான நூல் கூட
ஒன்று சேர்ந்தால் ஆடையாகும்
அச்சமில்லா இதயம் தானே
கவலை தாங்கும் கவசமாகும்

சூட்டை தாங்கும் அரிசிதான்
சுவைக்கும் நல் சோறாகும்
சோதனைகளை தாங்கிவிட்டால் _ வாழ்க்கை
சுலபமான போராகும்

தோல்வி எல்லாம் மலைபோல
கடக்க நினைத்தால் கால் கிழே
மனதில் உறுதி இருந்து விட்டால்
மரணம் கூட தோள் மேலே

கவலை வரட்டும் பார்த்து கொள்வோம்
காயங்களை ஏற்றுக்கொள்வோம்
வலிகள் தாங்கும் நெஞ்சினை
வாழ்க்கையிலே ஏற்று கொள்வோம்

September 10, 2012

உரிமை




நரிகள் கூட்டதிலே நலிந்த
முயல் என்ன செய்யும் ?
நாயிகளின் ஆட்சியில் நியாயம்
கேட்டால் என்ன கிடைக்கும் ?

பிணம் திண்ணும் கழுகுக்கு
மானின் வலி தெரியுமா ?
பணம் திண்ணும் உங்களுக்கு
மானிட வலி புரியுமா ?

பாவிகளின் அடியாட்கள் காக்கி
உடையில் இருக்கும்
பாவப்பட்டவன் நீதி கேட்டால்
சட்டத்தை வைத்து அடக்கும்

மானம் அற்றவர் திருந்தமாட்டான்
தெரிந்து கொண்டோம் _ இந்த
ஈன நாட்டில் பிறந்தது பாவம்
புரிந்து கொண்டோம் ..

_ வை . நடராஜன்

Helpless heart hanging in sleepless night





Helpless heart hanging in sleepless night
Falling in love is sweeter but
Feeling the love is harder
Being lonely does not hurt but
Feeling lonely is more than death
Half the world is on their sleep
Half the world is on their job
Full of my world is in sleepless job...
Dogs barking in my ears
Stars sparking in my eyes
Your rocking thoughts in my heart
that  I drag out through my hand
I need a time to wet my eyes
Which falls disappointed when i search my mails..
My box is empty with hundreds of mails..
My paining thoughts hide my ways...
I need your lovely rays of love..
My arms are waiting for u..
I started my life without you but
It should end definitely with you....

September 9, 2012

நீ நான் நாம்




நிலவிலே வாழ வேண்டும்
உன் நினைவிலே சாக வேண்டும்
மலரினில் பணியை போல _ உன்
மடியிலே சாய வேண்டும்

இன்னொரு பூமி வேண்டும்
இருவருக்கு மட்டும் வேண்டும்
தேயாத நிலவு வேண்டும்
காயாத மலர்கள் வேண்டும்


தேன் மழை பொழிய வேண்டும்
தேகங்கள் நினைய வேண்டும்
வானத்தில் வண்ணம் எல்லாம்
வகை வகையாய் மாற வேண்டும்


நாம் மட்டும் வாழும் உலகில்
நடமாடும் வீடு வேண்டும்
மேலை வரும் பகலவன் கூட
மென்மையான குளிர் தர வேண்டும்

பட்சிகளின் ஒலிகள் கூட
பைந்தமிழில் ஒலிக்க வேண்டும்
பச்சை நிற புற்கள் எல்லாம்
தங்க நிறம் ஆக வேண்டும்

வருடமும் வசந்தம் வேண்டும்
வற்றாத நதி கரை வேண்டும்
மான் முயல் மயில்கள் மட்டும்
உலவும் நல் காடு வேண்டும்

குயில் அணில் கொஞ்சும்
பைங்கிளி கூடவே வசிக்க வேண்டும்
மாதமும் முழு நிலா வேண்டும்
மண் கூட சுவைக்க வேண்டும்


நாம் மட்டும் இருக்கும் உலகில்
நாளும் நாம் இணைய வேண்டும்
ஊன் விட்டு போகும் வரையில்
உறவிலே உண்மை வேண்டும்

மனம் தரும் மலர்கள் எல்லாம்
தினம் வந்து பேச வேண்டும்
மழை துளி மேலே பட்டு
மனம் எல்லாம்  கூச வேண்டும்


ஆசையாய் பேச மட்டும்
ஆயிரம் ஆண்டுகள் வேண்டும்
அடிகடி சண்டைகள் போட
அதில் பாதி ஆண்டுகள் வேண்டும்

முதுமையில் இருந்தால் கூட
அகத்திலே இளமை வேண்டும்
பதுமையே உன்னை வருட
நகதிலே இறகு வேண்டும்


மரணம் அதை அடையும் போது
மறு ஜென்மம் இங்கே வேண்டும்
ஒரு நொடி கூட வேண்டாம்
ஒரே நொடியில் போக வேண்டும்

நடிகர்கள்



சாப்பாட்டுக்கு உப்பை போன்று தான்
சமுதாயத்துக்கு நடிகர்கள் _ தேவையான
அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள்
தேவதூதர்கள் போல தூக்கி வைக்காதீர்கள்...

திருடர்களையும் மன்னித்து
விடலாம் _ இந்த
திருந்தாதவர்களை என்ன
செய்வது ?


இந்த  கட் அவுட் உயர உயர
உங்கள் அறியாமை தாழ்கிறது
பாலினை ஊற்ற ஊற்ற
பகுத்தறிவு வீழ்கிறது

குடித்து கூத்தடித்தவர் _ எல்லாம்
கும்பிடும் தெய்வம் ஆனால்
வெடித்து அழியட்டும் இந்த
வேதனை சமுதாயம்

உண்மை



அனாதைக்கு தான் புரியும்

உறவினர்களின் அருமை _ அனால்

சில உறவினர்களை பார்க்கும் போது

தெரியும் அனாதையாய் இருப்பதே பெருமை .

வாழ்கையில் ...

காசை கொடுத்தேன் எழுதுகோல் வந்தது
காதலை கொடுத்தேன் கவிதை வந்தது
பொறுமையை இழந்தேன் குழந்தை வந்தது
பொறுமையாய் இருந்தேன் குழந்தை வளர்ந்தது

சிரிக்கும் போது இன்பம் தெரிந்தது
அழும் போதுதான் உண்மை புரிந்தது
சக்கரை இன்றி பால் கசந்தது
பசிக்கும் போதுதான் பாகற்க்காய் இனித்தது

அழுவதால் அழுதேன்




அன்று
கண்கள் பார்த்து
கைகள் கோர்த்து
ஒன்றாக சிரித்தோம்

இன்று
காலம் தந்த சாபம்
தனி தனியாக அழுகிறோம்

என் காதலின் தோல்வி
கண்ணீரின் விதி
அவள் கல்யாணத்தின்
தோல்வி கடவுளின் சதி

அவளை தொட முடியாத
தூரத்தில் உள்ளேன்
விட முடியாமல் பாரத்தில்
உள்ளேன்

என்னை கொய்தவள்
அழுவும் போது
என்ன செய்வது
புரியவில்லை


அல்லி மலரை
அழ வைத்த
ஆண்டவனுக்கும்
அறிவும் இல்லை

September 1, 2012

கிடைத்த வரம் இழந்த தினம்




இன்று ... .. .
மாதத்தின் முதல் நாள்
மறக்க நினைக்கும் கருநாள்
கனவெல்லாம் கலைந்து _ நான்
கதறி அழுத திருநாள்

செந்தூர பூ  ஒன்று
சேற்றிலே விழுந்த தினம்
செவ்வான அழகினை
கருமேகம் மறைத்த தினம்

வான் நிலவே நிலை தவறி
வழியோரம் விழுந்த தினம்
வலி கொடுத்து விழி கசிந்து
வழி மாறி போன தினம்

கை குழந்தை கரு விழியை
கருந்தேளாய் கொட்டி விட்டு
மெய்கலந்த என் அன்பை
பொய்புனர்ந்து போன தினம்

பால்கலந்த தேன் சுவையை
பாதையிலே கொட்டி
ஊன்கலந்த என் உணர்வை
ஊனமாக்கி போன தினம்

வெள்ளி நிலா மேனியவள்
கள்ளி செடியாய் காய்ந்ததினம்
பொங்கிவரும் பொன்னி நதி
வஞ்சம் பட்டு வறண்ட தினம்

கடவுளின் வரமாக
மெய்யுணர்வில் வந்த அவள்
காலத்தின் சாபத்தால்
கைநழுவி போன தினம்