September 9, 2012

அழுவதால் அழுதேன்




அன்று
கண்கள் பார்த்து
கைகள் கோர்த்து
ஒன்றாக சிரித்தோம்

இன்று
காலம் தந்த சாபம்
தனி தனியாக அழுகிறோம்

என் காதலின் தோல்வி
கண்ணீரின் விதி
அவள் கல்யாணத்தின்
தோல்வி கடவுளின் சதி

அவளை தொட முடியாத
தூரத்தில் உள்ளேன்
விட முடியாமல் பாரத்தில்
உள்ளேன்

என்னை கொய்தவள்
அழுவும் போது
என்ன செய்வது
புரியவில்லை


அல்லி மலரை
அழ வைத்த
ஆண்டவனுக்கும்
அறிவும் இல்லை

No comments:

Post a Comment