September 25, 2012

வருந்தினால் திருந்தலாம் ..



தப்பு செய்யா வாழ்வதற்கு
கற்று கொள்ளுங்கள் _ இல்லையெனில்
தப்பு செய்தல் ... அதையாவது
ஒத்து கொள்ளுங்கள்

மூடி மூடி நடிப்பதால்
பழி பிறக்கும் _ வருந்தி
நினைத்து பாருங்கள்
வழி பிறக்கும்

நடந்த தப்பு எல்லாமே
கோணலாகும் _ நீங்கள்
மாற நினைத்தால் எல்லாமே
காணலாகும்

தவறு செய்யா மனிதன் என்று
யாருமில்லை _ அதை
உணர மறுக்கும் மனம் கொண்டோர்
மனிதன் இல்லை

No comments:

Post a Comment