September 13, 2012

நம்பிக்கை உரமானால் ! வாழ்க்கை வரமாகும் !





மூச்சி இருக்கும் வரை
மரணமில்லை
முயற்சி இருக்கும் வரை
தோல்வியில்லை

எதையும் தாங்கும்
மனமிருந்தால்
வதையும் வாழ்வில்
வலிகள் இல்லை

நீரில் மிதக்கும் படகு கூட  _ அன்று
நீரை தந்த  மரமாகும்
அடித்த வலித்த தோல்வி எல்லாம்
நாம் திருப்பி அடிக்க நல் உரமாகும்

பள்ளமான இடத்தில்தான்
வெள்ளம் வந்தால் குளமாகும்
பள்ளம் ஒன்று தாழ்வு இல்லை
உள்ளம் இருந்தால் உயர்வாகும்

விதியோ ? சதியோ ? ஆகட்டம்
வழிகள் எல்லாம் மூடட்டும்
மதியும் மனமும் தீரமாகி
புதிய வழியை படைக்கட்டும்

எதுவுமின்றி ஆனாலும்
எவருமின்றி போனாலும்
துணிவு மட்டும் துணையானால்
வலிகள் கூட வரமாகும்

அற்ப்பமான நூல் கூட
ஒன்று சேர்ந்தால் ஆடையாகும்
அச்சமில்லா இதயம் தானே
கவலை தாங்கும் கவசமாகும்

சூட்டை தாங்கும் அரிசிதான்
சுவைக்கும் நல் சோறாகும்
சோதனைகளை தாங்கிவிட்டால் _ வாழ்க்கை
சுலபமான போராகும்

தோல்வி எல்லாம் மலைபோல
கடக்க நினைத்தால் கால் கிழே
மனதில் உறுதி இருந்து விட்டால்
மரணம் கூட தோள் மேலே

கவலை வரட்டும் பார்த்து கொள்வோம்
காயங்களை ஏற்றுக்கொள்வோம்
வலிகள் தாங்கும் நெஞ்சினை
வாழ்க்கையிலே ஏற்று கொள்வோம்

No comments:

Post a Comment