September 1, 2012

கிடைத்த வரம் இழந்த தினம்




இன்று ... .. .
மாதத்தின் முதல் நாள்
மறக்க நினைக்கும் கருநாள்
கனவெல்லாம் கலைந்து _ நான்
கதறி அழுத திருநாள்

செந்தூர பூ  ஒன்று
சேற்றிலே விழுந்த தினம்
செவ்வான அழகினை
கருமேகம் மறைத்த தினம்

வான் நிலவே நிலை தவறி
வழியோரம் விழுந்த தினம்
வலி கொடுத்து விழி கசிந்து
வழி மாறி போன தினம்

கை குழந்தை கரு விழியை
கருந்தேளாய் கொட்டி விட்டு
மெய்கலந்த என் அன்பை
பொய்புனர்ந்து போன தினம்

பால்கலந்த தேன் சுவையை
பாதையிலே கொட்டி
ஊன்கலந்த என் உணர்வை
ஊனமாக்கி போன தினம்

வெள்ளி நிலா மேனியவள்
கள்ளி செடியாய் காய்ந்ததினம்
பொங்கிவரும் பொன்னி நதி
வஞ்சம் பட்டு வறண்ட தினம்

கடவுளின் வரமாக
மெய்யுணர்வில் வந்த அவள்
காலத்தின் சாபத்தால்
கைநழுவி போன தினம்

No comments:

Post a Comment