August 27, 2012

தமிழ்காடு :()





என் முதல் கதை . படித்து தங்கள் மேலான கருத்தை சொல்லவும் :::




ஒரு காட்டில் உள்ள சிறு குளத்தில் நீர் அருந்த ஒரு நன்கு வளந்த ஒரு மான் வந்தது .
அங்கே கரையோரம் இருந்த ஒரு குள்ளநரி அதை பார்த்தது .
மிகவும் பசியாக இருந்த அந்த நரியினால் வளர்ந்த மானிடம் தனியாக வேட்டையாட முடியாது ,
ஆகையால் இதை வளர்ந்த மிருகத்திடம் புடித்து கொடுத்தல் அவை திண்ண மிச்சத்தை நாம் திண்ணலாம் என்று
மனதுக்குள் நினைத்து மானிடம் சென்று '' மானே மானே நீ நீர் அருந்திய பின் உன்னை கொல்ல ஒரு சிங்க குடும்பமே அங்கே காத்துகொண்டு இருக்கிறது ஆகையால் இந்த நீரில் குதித்து அந்த கரையில் போய் விடு
அங்கே நிறையாக புற்கள் உள்ளது நீ நிம்மதியாக வாழலாம்" என்று கூறியது . இதை கேட்ட அந்த மான் நீரில் குதிக்க அங்கே இருந்த முதலை அந்த மானை
கடித்து கொன்றது . உதவி செய்த நரிக்கு  முதலை சிறு பங்கையும் தந்தது .

இதையெல்லாம் மேலே மரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த காகம்
பக்கத்தில் இருந்த காகத்திடம் சொன்னது ...

 '' இதை போல தான் ஒவ்வொரு ஐந்து  வருடத்திற்கு ஒரு முறை
 இதை போன்ற செழித்த மான் சிங்கத்திடமோ அல்லது முதலை இடமோ மாட்டி மடிகிறது .  ஆனால் அது சிங்கத்தாலே இறக்க வேண்டுமா அல்ல முதலையாலே இறக்க வேண்டுமா என்பதை மறைமுகமாக
 யார் அதிக பங்கை தருகிறார்களோ அந்த மிருகத்திடம் கூட்டு வைக்கும்
 அந்த குள்ள நரி தான் முடிவு பண்ணும்'' .   என்று காக்கை சொல்லி முடித்து ...


இந்த கதையின் கரு :

அந்த காடு  _ தமிழ் நாடு

அந்த சிங்க குடும்பம்  _ திராவிட முன்னேற்றக் கழகம்

அந்த முதலை _அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அந்த குள்ள நரி _ கூட்டணி  கட்சிகள்

மேலே இருந்து வேடிக்கை பார்க்கும் காகம் _ தேர்தல் ஆணையம்

அந்த பாவப்பட்ட மான்  _ தமிழக மக்கள்

1 comment:

  1. எப்டி நடராஜ் இப்டிலாம் கதை தோணுது..
    ஆனா பாவம் அந்த மான் நடராஜ்!..

    ReplyDelete