August 19, 2012

இன்றைய காங்கிரஸ்








கோமணத்தையும் திருடும் _ இந்த
கேடுகெட்ட காங்கிரசுக்கு
கோகினூர் வைரம் திருடிய
அந்நியனே மேலடா


பிணத்தை திண்ணும் கழுகைப்போல
பணத்தை திண்ணும் மட்டமான
சதிகார கூட்டத்திற்கு
அதிகாரத்தை கொடுத்து
பாவம் செய்து விட்டோம்மடா
பதவி தந்து கெட்டோம்மடா


கொல்லி வைக்க வாரிசை
பெற்றெடுக்கும் நாட்டிலே
கொள்ளை அடிக்க வாரிசை
பெற்றெடுத்த குடும்பம்மடா

வல்லவரே நல்லவரே
வாங்க மாமா நேரு _ உங்கள்
வாரிசுகளின் கேவலத்தை
வந்து இங்கே பாரு

ஒருமுறையா இருமுறையா
யாதென சொல்ல _ உங்கள்
பரம்பரையே திருடுதையா
யாரிடம் சொல்ல

விவசாயிகள் பல பேரை
தூக்கில் போட்டு ரசித்தான்
வீடு வந்து கொன்றவனை
விருந்து வைத்து உபசரித்தான்

படைகள் அனுப்பி கொன்றான்
பசியால் வறுமை தந்தான்
வடகிழக்கை அடிமை படுத்தி
வயறு முட்ட திண்ணான்

கார்மேகம் வந்து விட்டால்
கடும் வெப்பம் இருக்காது
ஊரெல்லாம் கூடாமல்
தேரோட்டம் சிறக்காது

கல் எடுத்து அடிக்கும் வரை
தண்ணிர் தான் கலங்காது
காங்கிரசு தான் இருக்கும் வரை
நம் நாடு வெளங்காது

கையில் கறை
காங்கிரஸ் பிழை
இனிமேலும் நம்பாதே
இடமளித்து வெம்பாதே

சாக்கடையில் இருந்து கொண்டே
குளித்தால் அழுக்கு போகாதே
சதிகார கூட்டத்திடம்
நாட்டை கொடுத்து நோகாதே

_ வை . நடராஜன்

1 comment:

  1. கொல்லி வைக்க வாரிசை
    பெற்றெடுக்கும் நாட்டிலே
    கொள்ளை அடிக்க வாரிசை
    பெற்றெடுத்த குடும்பம்மடா

    உண்மையை சொன்ன உத்தமரே ! அடுத்த தேர்தலில் நீர் நில்லும் உமக்கே எனது ஓட்டு!..

    ReplyDelete