August 27, 2012

சிலரின் காதல் கதை




வான் நிலவாய்
வளர்பிறையாய்
வளந்து வரும்
காதல் எல்லாம்
தேன்நிலவை பார்த்து விட்டால்
தேய்பிறையாய் தேய்ந்துவிடும்

கொஞ்சும் போது காதல் வார்த்தை
கோடியளவு கொட்டி வரும்
கொஞ்சம் காமம் பார்த்து விட்டால்
கோழி முட்டை போல் சுருங்கும்

மல்லிகையே மரிக்கொழுந்தே
மாசற்ற மதியழகே _ என
சொல்லி வந்த வார்த்தையெல்லாம்
அள்ளி அணைத்தால்
மறைந்து விடும்

தேன் கொஞ்சும் காதல் பல
தேரோட்டம் போலதான் _ அது
ஊர் சுற்றி முடிந்து விட்டால்
உள்ளே போய் தூங்கிவிடும்

விருப்பத்தில் ஒன்றாகி
விவகாரத்தில் பிரிபவர்கள் பலர்
மனம் வேறுப்பட்டு உள்ளதால்
பிரியவில்லை
உடல் ஒன்றுப்பட்டு புளித்தல்
பிரிகின்றனர்..

காதலில் காமம்
வாழ்கையில் முடியும்
காமம் மட்டும் என்றபின்
வழக்கிலே முடியும்

No comments:

Post a Comment